NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது 
    அடுத்த செய்திக் கட்டுரை
    டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது 
    இந்த மசோதா மக்களின் தனியுரிமையை மீறுவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

    டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது 

    எழுதியவர் Sindhuja SM
    Aug 07, 2023
    06:59 pm

    செய்தி முன்னோட்டம்

    எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், மக்களவையில் இன்று(ஆகஸ்ட்-7), டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா-2023 குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

    இந்த மசோதாவை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தாக்கல் செய்தார்.

    மாநிலங்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், தரவைப் பாதுகாப்பதற்கான தனிப்பட்ட உரிமைகளையும், அதைத் தகுந்த நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதற்கான சட்டப்பூர்வ தேவையையும் இது சமநிலைப்படுத்தும்.

    ஜூலை 5அன்று மத்திய அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட இந்த மசோதா, குடிமக்களின் தனிப்பட்ட தரவுகள் சரிபார்க்கப்படாமல் பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.

    2019ஆம் ஆண்டிலும், தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், நாடாளுமன்றக் குழு அந்த மசோதாவில் 81 திருத்தங்களை பரிந்துரைத்ததால், அப்போது மத்திய அரசு அந்த மசோதாவை திரும்பப் பெற்றது.

    விக்கேஜ்கிய

    'தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் முயற்சி': எதிர்க்கட்சிகள்

    தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில்(RTI) ஒரு திருத்தத்தையும் இந்த மசோதா முன்மொழிகிறது.

    அதனால், இது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் முயற்சி என்று எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன.

    இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டால், எல்லை தாண்டிய தரவு பரிமாற்றங்களை கட்டுப்படுத்துவது, தரவு கொள்கையை மீறும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பது போன்றவை எளிதாகும்.

    மேலும், ஆஃப்லைனில் சேகரிக்கப்பட்ட தரவு மற்றும் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட தரவு உட்பட அனைத்து தனிப்பட்ட தரவுகளை கையாளுவதையும் இந்த சட்டம் ஒழுங்குபடுத்தும்.

    இது குறித்து கவலை தெரிவித்திருக்கும் எதிர்க்கட்சிகள், இந்த மசோதா குறித்து விவாதம் நடத்த நாடாளுமன்ற குழுவுக்கு இதை அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்த மசோதா மக்களின் தனியுரிமையை மீறுவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மக்களவை
    நாடாளுமன்றம்
    மத்திய அரசு

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    மக்களவை

    அதானி நிறுவன பிரச்சனை: நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளும் ஒத்திவைப்பு இந்தியா
    மதுரை எய்ம்ஸ்: நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திமுக
    குரங்கு கடியால் இறந்தவர்கள் பற்றிய பதிவுகள் இல்லை: மத்திய அரசு நாடாளுமன்றம்
    ராகுல் காந்தி மன்னிப்பு கேட்கும் வரை நாடாளுமன்றத்தில் அமளி தொடரும்: பாஜக காங்கிரஸ்

    நாடாளுமன்றம்

    கடந்த 5 ஆண்டுகளில் IIT, IIM, NITஐ சேர்ந்த 61 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர் இந்தியா
    2021 வரை 472 கைதிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது: மத்திய அரசு இந்தியா
    மே 28ம் தேதி புதிய  நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி  இந்தியா
    பிறப்பு, இறப்பு விவரங்களை வாக்காளர் பட்டியலில் இணைக்கும் மசோதா விரைவில் செயல்படுத்தப்படும்: அமித்ஷா இந்தியா

    மத்திய அரசு

    GST வலைப்பின்னலை பணமோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் கொண்டு வந்தது மத்திய அரசு இந்தியா
    மேம்பட்ட தொழில்நுட்பத்தைக் கொண்ட ஸ்கேனர்களை விமான நிலையங்களில் பொருத்த முடிவு விமான சேவைகள்
    வேதாந்தாவுடன் கூட்டு முயற்சியில் இருந்து விலகும் ஃபாக்ஸ்கானின் முடிவு; இந்தியாவிற்கு பின்னடைவு இல்லை இந்தியா
    ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து: ஆகஸ்ட் 2ம் தேதி முதல் தினந்தோறும் உச்சநீதிமன்றத்தில் விசாரணை  ஜம்மு காஷ்மீர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025