Page Loader
தமிழ்நாட்டை இந்தியாவின் விளையாட்டு தலைநகராக உயர்த்துவோம்: முதலைமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்
அமைச்சர் உதயநிதிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

தமிழ்நாட்டை இந்தியாவின் விளையாட்டு தலைநகராக உயர்த்துவோம்: முதலைமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்

எழுதியவர் Venkatalakshmi V
Sep 02, 2024
10:04 am

செய்தி முன்னோட்டம்

சென்னை தீவுத்திடலில் இரு தினங்களுக்கு முன்னர் தொடங்கிய பார்முலா 4 கார் பந்தயம் நேற்று வெற்றிகரமாக நிறைவடைந்ததது. நிகழ்ச்சி வெற்றிகரமாக நிறைவடைந்ததையடுத்து விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதற்காக அவர் சமூக ஊடங்களில் வெளியிட்டுள்ள பதிவில்:"பார்முலா 4 கார் பந்தயத்தை அமோக வெற்றியடையச் செய்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ஒட்டுமொத்த குழுவிற்கும் மாபெரும் பாராட்டுகள்" என்றார்.

விளையாட்டு தலைநகர்

இந்தியாவின் விளையாட்டு தலைநகர்

செஸ் ஒலிம்பியாட், சென்னை ஓபன் 2023, ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2023, தமிழ்நாடு சர்வதேச சர்ப் ஓபன் 2023, ஸ்குவாஷ் உலகக் கோப்பை 2023 மற்றும் கேலோ இந்தியா ஆகியவற்றை வெற்றியாய் நடத்தி முடித்து, தமிழகம் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குகிறது. உலகத் தரம் வாய்ந்த வசதிகள் மற்றும் மூலோபாய முதலீடுகளுடன், நாங்கள் நிகழ்வுகளை மட்டும் நடத்தவில்லை- இந்திய விளையாட்டுகளின் எதிர்காலத்திற்கு முன்னோடியாக இருக்கிறோம். அதனால்தான் இந்தியாவின் ஒலிம்பிக் குழுவில் தமிழகம் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றுள்ளது. வரம்புகளை உயர்த்தி, தமிழ்நாட்டின் பாரம்பரியத்தை இந்தியாவின் விளையாட்டுத் தலைநகராக உயர்த்துவோம் என முதல்வர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post