Page Loader
வழக்கறிஞர்கள் வேலை நிறுத்தம் செய்ய அனுமதியில்லை: உச்ச நீதிமன்றம்
நீதிபதிகள் எம்.ஆர்.ஷா மற்றும் அஹ்சானுதீன் அமானுல்லா தலைமையிலான அமர்வின் உத்தரவு

வழக்கறிஞர்கள் வேலை நிறுத்தம் செய்ய அனுமதியில்லை: உச்ச நீதிமன்றம்

எழுதியவர் Sindhuja SM
Apr 20, 2023
04:08 pm

செய்தி முன்னோட்டம்

வழக்கறிஞர்கள் வேலைநிறுத்தம் செய்யவோ அல்லது பணியிலிருந்து விலகி இருக்கவோ கூடாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. அவர்களின் பிரச்னையை தீர்க்க, அனைத்து உயர் நீதிமன்றங்களிலும் தலைமை நீதிபதி தலைமையில் மாநில அளவிலான ஒரு குறை தீர்க்கும் குழுவை அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. "உண்மையான பிரச்சனைகளுக்கு" தீர்வு காண்பதற்கு வழக்கறிஞர்கள் அந்த குழுவை நாடலாம், ஆனால், அதற்காக வேலை நிறுத்தம் செய்யக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் எம்.ஆர்.ஷா மற்றும் அஹ்சானுதீன் அமானுல்லா தலைமையிலான அமர்வு, மாவட்ட நீதிமன்ற அளவில் குறை தீர்க்கும் குழுக்களை அமைக்க உத்தரவிட்டது. வழக்குகளை தாக்கல் செய்வது, நீதித்துறை உறுப்பினரின் தவறான நடத்தை போன்ற குறைகளை தீர்க்க வழக்கறிஞர்கள் இந்த குழுவை நாடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

details

டெஹ்ராடூன் வழக்கறிஞர்கள் சங்க மனு தள்ளுபடி

"வழக்கறிஞர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது அல்லது பணியில் இருந்து விலகி இருப்பது நீதித்துறை பணிக்கு இடையூறாக இருக்கும் என்பதை இந்த நீதிமன்றம் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகிறது." என்று உச்ச நீதிமன்றம் இன்று கூறியது. டெஹ்ராடூன் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கம் தங்களின் புகார்களைத் தீர்ப்பதற்கு தகுந்த மன்றம் அமைக்க கோரி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அத்துடன், இன்று வழங்கப்பட்ட உத்தரவின் நகலை அனைத்து உயர் நீதிமன்றங்களின் பதிவாளர் ஜெனரலுக்கு அனுப்ப வேண்டும் என்றும் உத்தரவுப்படி அவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கேட்டு கொண்டது.