NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / RJD தலைவர் தேஜஸ்வி யாதவை விசாரணைக்கு அழைத்தது CBI
    அடுத்த செய்திக் கட்டுரை
    RJD தலைவர் தேஜஸ்வி யாதவை விசாரணைக்கு அழைத்தது CBI
    RJD தலைவரும், பீகார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவை விசாரணைக்கு அழைத்தது CBI

    RJD தலைவர் தேஜஸ்வி யாதவை விசாரணைக்கு அழைத்தது CBI

    எழுதியவர் Sindhuja SM
    Mar 11, 2023
    03:25 pm

    செய்தி முன்னோட்டம்

    நில மோசடி வழக்கில் ராஷ்டிரிய ஜனதா தளம்(RJD) தலைவரும், பீகார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவை, மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) இன்று(மார் 11) விசாரணைக்கு அழைத்துள்ளது.

    இந்த வழக்கில் அவருக்கு சிபிஐ சம்மன் அனுப்புவது இது இரண்டாவது முறையாகும். முதலாவது சம்மன் பிப்ரவரி 4 அன்று வெளியிடப்பட்டது என்று செய்தி நிறுவனமான ANI தெரிவித்துள்ளது.

    2004-09 காலகட்டத்தில் நடைபெற்ற இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன்(IRCTC) நில மோசடி வழக்கு தொடர்பாக அமலாக்க இயக்குனரகம்(ED), பல்வேறு இடங்களில் நேற்று சோதனை நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

    இதே வழக்கு தொடர்பாக மத்திய அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது மனைவியிடம் சமீபத்தில் தான் சிபிஐ விசாரித்தது.

    இந்தியா

    தேஜஸ்வி யாதவ் இன்னும் ஆஜராகவில்லை

    தேஜஸ்வி யாதவ் மார்ச் 4 ஆம் தேதி அன்று விசாரணைக்கு சிபிஐயால் அழைக்கப்பட்டதாகவும் ஆனால் அவர் ஆஜராகவில்லை என்றும் கூறப்படுகிறது. இதன் விளைவாக, சிபிஐ புதிய தேதியை இன்று வெளியிட்டது.

    யாதவ் இன்று காலை விசாரணைக்கு ஆஜராகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார். ஆனால், டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்திற்கு ஆர்ஜேடி தலைவர் இன்னும் வரவில்லை என்று அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

    வேலை வாய்ப்பு மோசடி தொடர்பாக தேசிய தலைநகரில் உள்ள பீகார் துணை முதல்வர் யாதவ் வீட்டில் நேற்று ED சோதனை நடத்தியது.

    யாதவ் வீட்டில் 11 மணிநேரம் நடைபெற்ற சோதனைக்கு பிறகு தான் அதிகாரிகள் அங்கிருந்து வெளியேறினர் என்று ANI கூறியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    இந்தியா

    மீண்டு வரும் அதானி குழுமம் - ரூ.7374 கோடி கடன்கள் அடைப்பு! தொழில்நுட்பம்
    வட மாநில தொழிலாளர்களைச் சந்தித்த முதல்வர் ஸ்டாலின் ஸ்டாலின்
    இந்திய பெண் உரிமை சட்டங்களின் பட்டியல் இந்தியா
    27% பெண்கள் மட்டுமே சொந்தமாக நிதி சார்ந்த முடிவுகளை எடுக்கிறார்கள் முதலீடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025