NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஊழல் வழக்கு: லாலு பிரசாத்தின் ரூ.6 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஊழல் வழக்கு: லாலு பிரசாத்தின் ரூ.6 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல்
    கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்த வழக்கில் முதல் குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்தது.

    ஊழல் வழக்கு: லாலு பிரசாத்தின் ரூ.6 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல்

    எழுதியவர் Sindhuja SM
    Jul 31, 2023
    05:31 pm

    செய்தி முன்னோட்டம்

    பீகார்: நிலங்களை லஞ்சமாக தருபவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிய ஊழல் வழக்கில், லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான ரூ.6 கோடி மதிப்புள்ள சொத்துகளை மத்திய புலனாய்வு அமைப்பு இன்று(ஜூலை 31) பறிமுதல் செய்தது.

    லாலு யாதவ், அவரது மனைவி ராப்ரி தேவி, அவர்களது மகனும் பீகார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் ஆகியோருக்கு எதிராக ஒரு மோசடி வழக்கின் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    லாலு யாதவ் மற்றும் அவரது மனைவி ராப்ரி தேவி ஆகியோர் இதற்கு முன்பு பீகார் முதல்வர்களாக பணியாற்றியவர்கள் ஆவர்.

    இந்நிலையில், நிதி மோசடி குற்றங்களை விசாரிக்கும் மத்திய புலனாய்வு அமைப்பான அமலாக்க இயக்குனரகம் இன்று அவர்களது சொத்துக்களை பறிமுதல் செய்துள்ளது.

    டிஜிகிவ்

    லாலு பிரசாத் மற்றும் 15 பேருக்கு எதிராக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது 

    2004 முதல் 2009 வரை மத்திய ரயில்வே அமைச்சராக பணியாற்றிய லாலு பிரசாத், வேலை வாய்ப்பு வழங்குவதற்கு நிலத்தை லஞ்சமாக வாங்கியதாக அவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

    அமலாக்க இயக்குனரகத்தை தவிர சிபிஐயும் இந்த வழக்கை விசாரித்து வருகிறது.

    கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்த வழக்கில் முதல் குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்தது.

    ஜூலை 3ஆம் தேதி, இந்த வழக்கில் சிபிஐ தனது இரண்டாவது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. இந்த இரண்டாவது குற்றப்பத்திரிகையில் தான் தேஜஸ்வி யாதவ் குற்றம் சாட்டப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    2022ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி சிபிஐ, லாலு பிரசாத் மற்றும் 15 பேருக்கு எதிராக இந்த வழக்கை பதிவு செய்தது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பீகார்
    இந்தியா
    சிபிஐ
    அமலாக்க இயக்குநரகம்

    சமீபத்திய

    வணிக எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.24 குறைப்பு; பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு எரிவாயு சிலிண்டர்
    அதிமுகவின் மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிப்பு; யார் யாருக்கு வாய்ப்பு? அதிமுக
    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்

    பீகார்

    பீகார் பாலம் இடிந்து விழுந்ததற்கு முதல்வர் நிதிஷ் குமார் அளித்த பதில் இந்தியா
    முகங்களை அடையாளம் கண்டு கள்ள ஓட்டுகளை தடுக்கும் புதிய தொழிநுட்பம் இந்தியா
    கலைஞர் கோட்டம் திறப்பு விழா - பீகார் முதல்வரின் தமிழக வருகை திடீர் ரத்து  கருணாநிதி
    தேசியளவிலான எதிர்க்கட்சிகள் பொதுக்கூட்டம் - பாட்னா செல்கிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மு.க ஸ்டாலின்

    இந்தியா

    காதலரை தேடி பாகிஸ்தானுக்கு சென்ற திருமணமான இந்திய பெண்  பாகிஸ்தான்
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூலை 24 தங்கம் வெள்ளி விலை
    நாடு முழுவதும் கனமழை, வெள்ளம்: கேரளாவிற்கு ஆரஞ்சு எச்சரிக்கை வானிலை அறிக்கை
    69 வயதில் சக்தி வாய்ந்த போர் விமானத்தை இயக்கிய ரத்தன் டாடா டாடா

    சிபிஐ

    ஒடிசா ரயில் விபத்து: விசாரணை விரைவில் சிபிஐக்கு மாறுகிறது இந்தியா
    செந்தில் பாலாஜி கைது எதிரொலி: CBI க்கு தமிழக அரசு வைத்த செக்  தமிழக அரசு
    மணிப்பூர் கலவரம் - வழக்கு விசாரணை சிபிஐ'க்கு மாற்றம்  கைது
    மணிப்பூர் வீடியோ வழக்கிற்கு FIR பதிவு செய்தது CBI மணிப்பூர்

    அமலாக்க இயக்குநரகம்

    அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்க துறையினர் சோதனை  சென்னை
    தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார்  தமிழ்நாடு
    கைதுசெய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இருதயத்தில் 3 அடைப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் தகவல் செந்தில் பாலாஜி
    அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜூன் 28 வரை நீதிமன்ற காவல்: நீதிபதி உத்தரவு  தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025