Loading...
₹1,020 கோடி டெண்டர் ஊழல் வழக்கு: முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் DVAC சோதனை
முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் DVAC சோதனை

₹1,020 கோடி டெண்டர் ஊழல் வழக்கு: முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் DVAC சோதனை

எழுதியவர் Sekar Chinnappan
Sep 05, 2026
02:15 pm

செய்தி முன்னோட்டம்

திமுக ஆட்சிக் காலத்தில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சராக இருந்த கே.என்.நேரு தொடர்புடைய 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) அதிகாரிகள் இன்று (செப்டம்பர் 5) காலை முதல் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். திருச்சி தில்லை நகரில் உள்ள அவரது இல்லம், சென்னை மற்றும் கோவையில் உள்ள அவரது சகோதரர்களுக்கு சொந்தமான இடங்களில் இந்தச் சோதனைகள் நடைபெற்று வருகின்றன. டெண்டர் ஒதுக்குவதில் மிரட்டி பணம் பறித்தது உள்ளிட்ட பல்வேறு புகார்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வழக்குப்பதிவு

₹1,020 கோடி ஊழல் மற்றும் 12 பேர் மீது வழக்குப்பதிவு

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை டெண்டர்களில் சுமார் ₹1,020 கோடி வரை ஊழல் செய்ததாகக் கே.என்.நேரு, அவரது சகோதரர்கள் கே.என்.ரவிச்சந்திரன், கே.என்.மணிவண்ணன் உட்பட 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் கிடைத்த முக்கிய ஆதாரங்கள் தமிழக டிஜிபிக்கு அனுப்பப்பட்டிருந்த நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து இந்த அதிரடி சட்ட நடவடிக்கை தீவிரமடைந்துள்ளது.

ஆதாரங்கள்

கோடிகளில் கைமாறிய கமிஷன் மற்றும் அமலாக்கத்துறை ஆதாரங்கள்

திமுக ஆட்சியில் நகராட்சி ஒப்பந்ததாரர்களிடம் மொத்த ஒப்பந்த மதிப்பில் 7.5% முதல் 10% வரை லஞ்சமாகக் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் மூலம் வசூலிக்கப்பட்டதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது.

ரொக்கமாகவும், டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மூலமாகவும் பல கோடிகள் கைமாறியதற்கான ஆதாரங்களை அமலாக்கத்துறை வழங்கியுள்ளது.

மேலும், அரசு அதிகாரிகளிடமிருந்தே கோடிகளில் பணம் வசூலிக்கப்பட்டு டிஜிட்டல் முறையில் பரிமாறப்பட்டதும் இந்த விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ADVERTISEMENT

தீவிர ஆய்வு

அவிநாசியில் உள்ள தனியார் நிறுவனத்தில் தீவிர ஆய்வு

இவ்வழக்கின் தொடர்ச்சியாக, திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் முதல்நிலை ஒப்பந்ததாரரான வேலுமணி என்பவரது வீடு மற்றும் அலுவலகங்களிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

கே.என்.நேருவிற்கு வழங்க ரமேஷ் என்பவர் வேலுமணியிடமிருந்து ₹19.77 கோடி லஞ்சப் பணத்தைப் பெற்றதாக அமலாக்கத்துறை ஆதாரங்களுடன் தெரிவித்துள்ள நிலையில், அங்கு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு வருகின்றன.

ADVERTISEMENT