NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஜனவரி 2025இல் கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் பயன்பாட்டுக்கு வரும் என தகவல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஜனவரி 2025இல் கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் பயன்பாட்டுக்கு வரும் என தகவல்
    ஜனவரி 2025இல் கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம்

    ஜனவரி 2025இல் கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் பயன்பாட்டுக்கு வரும் என தகவல்

    எழுதியவர் Sekar Chinnappan
    Sep 12, 2024
    03:03 pm

    செய்தி முன்னோட்டம்

    கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை சென்னைவாசிகள் எளிதாக அணுகும் வகையில் கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது.

    அடுத்த ஆண்டு ஜனவரிக்குள் இது நிறைவடையும் என தகவல் வெளியாகியுள்ளது.

    கோயம்பேட்டில் இயங்கி வந்த பேருந்து நிலையம் கிளம்பாக்கத்திற்கு மாற்றப்பட்டாலும், மக்கள் அந்த பேருந்து நிலையத்தை எளிதாக அணுக மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

    எனினும், ரயிலில் செல்லும் பயணிகள் ஊரப்பாக்கத்தில் இருந்து செல்ல வேண்டிய நிலை இருந்து வருகிறது.

    இதற்காக கிளம்பாக்கத்தில் ரயில் நிலையம் அமைக்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை விடுத்த நிலையில், தமிழக அரசுடன் இணைந்து தெற்கு ரயில்வே நீண்ட தூரம் தெற்கு செல்லும் பேருந்துகளில் ஏறும் பயணிகளுக்காக கிளாம்பாக்கத்தில் நிறுத்த ரயில் நிலையம் அமைக்கும் திட்டத்தை வகுத்தது.

    தென்னக ரயில்வே

    சென்னை கோட்ட ரயில்வே மேலாளர் விளக்கம்

    சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) மூலம், மாநில அரசு, 20 கோடி ரூபாயை, கிளாம்பாக்கத்தில் ஹால்ட் ஸ்டேஷன் கட்டுவதற்கு வழங்கியது.

    மேலும், சாலையின் எதிர்புறத்தில் அமைந்துள்ள ரயில் நிலையத்தை பேருந்து நிலையத்துடன் இணைக்க, சிஎம்டிஏ ₹79 கோடி செலவில் ஸ்கைவாக் அமைக்கவும் முடிவு செய்துள்ளது.

    இதுகுறித்து சென்னை கோட்ட ரயில்வே மேலாளர் விஸ்வநாத் ஈர்யா, நிலம் கையகப்படுத்துதல் காரணமாக ரயில் நிலைய கட்டுமானப் பணி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டாலும், சில மாதங்களுக்கு முன் அது முடிக்கப்பட்டது என்றும், ரயில் நிலையத்திற்கு சுற்றுச்சுவர், மழைநீர் வடிகால் அமைக்கும் பணி, பிளாட்பாரங்களில் மண் நிரப்பும் பணி துவங்கியுள்ளது என்றும் தெரிவித்தார்.

    தாமதம்

    ஜனவரி 2025க்குள் கட்டிமுடிக்க திட்டம்

    வண்டலூருக்கும் ஊரப்பாக்கத்துக்கும் இடையே நிறுத்தப்படும் ரயில் நிலையம், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு விரைவாகவும் எளிதாகவும் செல்வதற்காக ஸ்கைவாக்குடன் ஒருங்கிணைக்கப்படும் என்று விஸ்வநாத் ஈர்யா கூறினார்.

    பணியை செய்து வரும் சென்னை கோட்டத்தின் அசல் அட்டவணையின்படி, இந்த ஆண்டு டிசம்பருக்குள் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் முடிக்கப்பட வேண்டும்.

    எவ்வாறாயினும், ரயில் நிலையம், பிளாட்பார்ம்களின் முழு கட்டுமானப் பணிகள் இன்னும் தொடங்கவில்லை என்பதால் ஒரு மாத தாமதமாக ஜனவரி 2025க்குள் கட்டி முடிக்கப்படும் என்று ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.

    இந்த நிறுத்தத்தில் மூன்று நடைமேடைகள் இருக்கும், புறநகர் ரயில்களுக்கு இரண்டு நடைமேடைகள் மற்றும் எக்ஸ்பிரஸ் மற்றும் மெயில் ரயில்களுக்கு ஒரு நடைமேடையும் இருக்கும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கிளாம்பாக்கம்
    ரயில் நிலையம்
    சென்னை

    சமீபத்திய

    யாரு சாமி இவரு! அமேசான் வேலையை விட்டுவிட்டு பாடகராக மாறிய ஐஐஎம் பட்டதாரி டிரெண்டிங்
    ஐஓஎஸ் பயனர்களுக்கு ஏஐ மூலம் ப்ரொபைல் படங்களை உருவாக்கும் அம்சத்தை வெளியிட்டது வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    வேற லெவல் சம்பவம்; நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தின் டிரெய்லர் வெளியானது கமல்ஹாசன்
    மனைவியுடன் வாக்குவாதத்தால் ஆற்றில் குதித்து காணாமல் போன கணவர்; காப்பாற்றப் போனவர் சடலமாக மீட்பு லக்னோ

    கிளாம்பாக்கம்

    6 மாதத்திற்குள் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் ரெடி ஆகிவிடும்: தெற்கு ரயில்வே ரயில் நிலையம்
    வார இறுதியை முன்னிட்டு சென்னையில் கூடுதல் பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்துத்துறை அமைச்சர் அறிவிப்பு  பேருந்துகள்
    சென்னையில் மீண்டும் வந்துவிட்டது ஹாப்-ஆன்; ஹாப்-ஆஃப் வசதி சென்னை

    ரயில் நிலையம்

    செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இறந்து கிடந்த நபர்- 5 மணி நேரமாக சடலம் அகற்றப்படாத அவலம் செங்கல்பட்டு
    உத்தரப்பிரதேசம் விரைவு ரயிலில் தீ விபத்து - 19 பேர் காயம் உத்தரப்பிரதேசம்
    தனி நபருக்காக இயக்கப்பட்ட ரயில் - சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி  தெற்கு ரயில்வே
    தெரிந்து கொள்ளுங்கள்- ஏன் ஏசி பெட்டிகள் எப்போதும் ரயிலின் நடுவில் இருக்கிறது? ரயில்கள்

    சென்னை

    தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு துவங்கியது: 28 புதிய தொழில் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் முதலீடு
    பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு பெரிய தண்டனை வழங்க வேண்டும் - அமைச்சர் அன்பில் மகேஷ் அன்பில் மகேஷ்
    ஃபார்முலா - 4 கார் பந்தயத்தை பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி இலவசம்; அமைச்சர் உதயநிதி அறிவிப்பு உதயநிதி ஸ்டாலின்
    மெட்ரோ பணிகளுக்காக சென்னையில் 3 நாட்களுக்கு சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் போக்குவரத்து
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025