மாணவர்களே உஷார்! தேசிய விளையாட்டு உதவித்தொகை அறிவிப்பு உண்மையா? விளையாட்டு அமைச்சகம் மற்றும் PIB விளக்கம்
செய்தி முன்னோட்டம்
சமூக வலைதளங்களில் KheloGram என்ற பெயரில் பரப்பப்பட்டு வரும் தேசிய விளையாட்டு உதவித்தொகை தொடர்பான விளம்பரம் முற்றிலும் போலியானது என்று இந்திய மத்திய அரசின் பத்திரிகை தகவல் பணியகத்தின் (PIB) உண்மை சரிபார்ப்புப் பிரிவு எச்சரித்துள்ளது. 2026-27 ஆம் கல்வியாண்டிற்கான தேசிய விளையாட்டு உதவித்தொகை திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பகிரப்பட்டு வரும் தகவல் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்றும் பொதுமக்களை ஏமாற்றும் நோக்கில் பரப்பப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுப்பு
மத்திய அமைச்சகம் மற்றும் SAI திட்டவட்ட மறுப்பு
மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் அல்லது இந்திய விளையாட்டு ஆணையம் (SAI) ஆகிய இரண்டு அமைப்புகளுமே அப்படி ஒரு உதவித்தொகை திட்டத்தையோ அல்லது விளம்பரத்தையோ அறிவிக்கவோ, அங்கீகரிக்கவோ இல்லை என்று அதிகாரப்பூர்வமாகத் திட்டவட்டமாக மறுத்துள்ளன.
அரசால் அங்கீகரிக்கப்படாத இத்தகைய போலி விளம்பரங்களை நம்பி விளையாட்டு வீரர்கள், மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் யாரும் ஏமாற வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
🚨Fake Advertisement Alert!
— PIB Fact Check (@PIBFactCheck) July 23, 2026
⚠️ A social media post is being circulated under the name 'KheloGram', claiming that the Ministry of Youth Affairs & Sports and the Sports Authority of India (SAI) have invited applications for National Sports Scholarship Scheme 2026-27.… pic.twitter.com/pB5uKVnrPs
தனிநபர் விபரங்கள்
தனிப்பட்ட விவரங்களை இணையத்தில் பகிர வேண்டாம்
இதுபோன்ற போலியான சமூக வலைதளக் கணக்குகள் மற்றும் தனிப்பட்ட இணையதள இணைப்புகள் மூலம் விண்ணப்பப் படிவங்களை நிரப்புவது, பதிவுக்கட்டணம் என்ற பெயரில் பணம் செலுத்துவது அல்லது உங்களது தனிப்பட்ட ஆவணங்களைப் பகிர்வது மிகப்பெரிய நிதி மற்றும் தகவல் திருட்டு ஆபத்திற்கு வழிவகுக்கும்.
எனவே, நம்பகத்தன்மையற்ற எந்தவொரு மூன்றாம் தரப்பு செயலிகள் அல்லது இணையதளங்களையும் பொதுமக்கள் பயன்படுத்தக் கூடாது என்று எச்சரிக்கப்படுகிறார்கள்.
விளையாட்டுத் துறை சார்ந்த அரசு உதவித்தொகைகள், புதிய நலத்திட்டங்கள் மற்றும் வேலைவாய்ப்புகள் குறித்த அனைத்து நம்பகமான தகவல்களுக்கும் பொதுமக்கள் எப்போதும் அரசின் அதிகாரப்பூர்வ இணையதளங்களை மட்டுமே அணுக வேண்டும்.