NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கருணாநிதி பேனா நினைவு சின்னம் - கருத்துகேட்பு கூட்டத்தில் 22 பேர் ஆதரவு, சீமான் உள்பட 12 பேர் எதிர்ப்பு
    இந்தியா

    கருணாநிதி பேனா நினைவு சின்னம் - கருத்துகேட்பு கூட்டத்தில் 22 பேர் ஆதரவு, சீமான் உள்பட 12 பேர் எதிர்ப்பு

    கருணாநிதி பேனா நினைவு சின்னம் - கருத்துகேட்பு கூட்டத்தில் 22 பேர் ஆதரவு, சீமான் உள்பட 12 பேர் எதிர்ப்பு
    எழுதியவர் Nivetha P
    Feb 21, 2023, 12:45 pm 1 நிமிட வாசிப்பு
    கருணாநிதி பேனா நினைவு சின்னம் - கருத்துகேட்பு கூட்டத்தில் 22 பேர் ஆதரவு, சீமான் உள்பட 12 பேர் எதிர்ப்பு
    கருணாநிதி பேனா நினைவு சின்னம் - கருத்துகேட்பு கூட்டத்தில் 22 பேர் ஆதரவு, சீமான் உள்பட 12 பேர் எதிர்ப்பு

    முன்னாள் முதல்வரும், மறைந்த திமுக கட்சி தலைவருமான கருணாநிதி அவர்கள் கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி காலமானார். இவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. அவருக்கு அங்கு 2.23ஏக்கர் பரப்பளவில் நினைவிடம் கட்டும் பணி அரசு சார்பில் ஏற்கனவே நடந்து வருகிறது. இந்நிலையில் இது இல்லாமல், நடுக்கடலில் ரூ.81 கோடி செலவில் 134 அடி உயரத்திற்கு பிரமாண்ட 'பேனா' நினைவுசின்னம் ஒன்றினை அமைக்க தமிழக அரசு முடிவுசெய்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. சமீபத்தில் இதற்கான கருத்துக்கேட்பு கூட்டம் கலைவாணர் அரங்கில் நடந்தது. இதில் எதிர்ப்பு தெரிவித்து கடிதம் அளித்ததோடு, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூட்டத்தில் கடுமையாக பேசியது பரபரப்பினை ஏற்படுத்தியது.

    34 பேரின் கருத்துக்கள் பதிவாகியுள்ள நிலையில் 12 பேர் எதிர்ப்பு

    இதற்கிடையே, நடத்தப்பட்ட கருத்துக்கேட்பு கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சியின் நிர்வாகிகள், சுற்றுசூழல் சார்ந்த அமைப்புகள், மீனவர் அமைப்புகளின் நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்று தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். இந்நிலையில் கூட்ட நிகழ்வுகள் தொடர்பான குறிப்பு ஒன்றினை தயாரித்துள்ளது. இதில் 34 பேரின் கருத்துக்கள் இடம் பெற்றுள்ளது. இந்த அறிக்கையின் படி, பேனா நினைவு சின்னம் அமைக்க 22 பேர் ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், மீதமுள்ள 12 பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் அறிக்கை விவரம் தெரிவிக்கிறது. இந்த கருத்துக்கேட்பு கூட்ட அறிக்கையானது விரைவில் தமிழக பொதுப்பணித்துறை மத்திய அரசிடம் வழங்க உள்ளது. இதனை தொடர்ந்து, இந்த கருத்துக்களின் அடிப்படையில் சுற்றுசூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையில் திருத்தம் செய்து மத்திய அரசிடம் சமர்பிக்கடவுள்ளது என்றும் கூறப்படுகிறது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தமிழக அரசு
    நாம் தமிழர்
    கருணாநிதி

    தமிழக அரசு

    தமிழகத்தில் மழையால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்க தமிழக முதல்வர் உத்தரவு தமிழ்நாடு
    ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மூன்று பேர் பணியிடமாற்றம் - தமிழக அரசு உத்தரவு இந்தியா
    தமிழக அரசு - அனைத்து ஒப்புதல்கள் பெற்ற பிறகே பேனா சின்னம் அமைக்கப்படும் என பதில் மனுத்தாக்கல் கருணாநிதி
    தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கான புதிய கட்டுப்பாடுகள் குறித்த அரசாணை வெளியீடு தமிழ்நாடு

    நாம் தமிழர்

    பிரபாகரன் உயிரோடு இருப்பதாக பரவிய தகவல் குறித்து நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பதில் இலங்கை
    சீமான் ட்விட்டர் கணக்கு முடக்கம் குறித்து சென்னை காவல்துறை விளக்கம்  காவல்துறை

    கருணாநிதி

    வரலாற்று பதிவு: மு.கருணாநிதி முதல் முறையாக முதலமைச்சராக பதவியேற்ற நாள் இன்று! வைரல் செய்தி
    கருணாநிதி நினைவிடத்தில் ரூ.80 லட்ச செலவில் அருங்காட்சியகம்-கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் அனுமதி கடற்கரை
    சென்னை மெரினாவில் பேனா நினைவு சின்னத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு சென்னை
    பேனா நினைவு சின்னம் அமைப்பது குறித்து பசுமை தீர்ப்பாயத்தில் பொதுப்பணித்துறை மனு தாக்கல் தமிழ்நாடு

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023