NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கலாஷேத்ரா விவகாரம் - 10க்கும் மேற்பட்ட மாணவிகள் நேரில் ஆஜராகி விளக்கம் 
    கலாஷேத்ரா விவகாரம் - 10க்கும் மேற்பட்ட மாணவிகள் நேரில் ஆஜராகி விளக்கம் 
    1/2
    இந்தியா 0 நிமிட வாசிப்பு

    கலாஷேத்ரா விவகாரம் - 10க்கும் மேற்பட்ட மாணவிகள் நேரில் ஆஜராகி விளக்கம் 

    எழுதியவர் Nivetha P
    May 22, 2023
    06:39 pm
    கலாஷேத்ரா விவகாரம் - 10க்கும் மேற்பட்ட மாணவிகள் நேரில் ஆஜராகி விளக்கம் 
    கலாஷேத்ரா விவகாரம் - 10க்கும் மேற்பட்ட மாணவிகள் நேரில் ஆஜராகி விளக்கம்

    சென்னை திருவான்மியூரில் இயங்கி வரும் கலாஷேத்ராவில் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார்கள் எழுந்தது. இதனையடுத்து பேராசிரியர் ஹரி பத்மன் கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து இதுகுறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி கண்ணன் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநில மகளிர் ஆணையம் விசாரணை மேற்கொண்டு தமிழக அரசிடம் அறிக்கை தாக்கல் செய்தது. தொடர்ந்து, மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து இந்த வழக்கு குறித்து விசாரணை நடத்தி வருகிறது. இதனிடையே கடந்த 2 வாரத்தில் இந்த பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகார்கள் குறித்து சென்னை அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் 10க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர் என்று பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

    2/2

    விசாரணைக்கு வருமாறு மாணவிகளுக்கு சம்மன் 

    அதன்படி இந்த விவகாரம் குறித்து பேசிய மாணவிகள், நாங்கள் எவ்வித பாலியல் பாதிப்புகளுக்கும் உள்ளாகவில்லை. எங்கள் ஆசிரியர்கள் மீது மிகுந்த அன்பும், அளவுகடந்த மரியாதையும் எங்களுக்கு உள்ளது என்று கூறியதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இதில் மேலும் சில மாணவிகள், எங்களுக்கும் இந்த புகார்களுக்குமே எவ்வித சம்பந்தமும் இல்லை என்று கூறியுள்ளார்கள் என்றும் கூறப்படுகிறது. முன்னதாக இந்த வழக்கு தொடர்பாக மாநில மகளிர் ஆணையம் 162 மாணவிகளிடம் விசாரணை நடத்துமாறு காவல்துறையினருக்கு பரிந்துரை செய்திருந்தனர். அந்த பரிந்துரையின் அடிப்படையில், அடையார் மகளிர் காவல் நிலையத்திலிருந்து குறிப்பிட்ட அந்த 162 மாணவிகளுக்கு விசாரணைக்கு வருமாறு சம்மன் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சென்னை
    மனித உரிமைகள் ஆணையம்
    காவல்துறை
    காவல்துறை

    சென்னை

    மூடப்பட்ட பழமையான திரையரங்கை வாங்கிய நயன்தாரா நயன்தாரா
    சென்னையில் உள்ள கூகுள் CEO சுந்தர் பிச்சையின் வீடு சினிமா நடிகருக்கு விற்கப்பட்டது!  கூகுள்
    சென்னையில் தரமில்லாத குடிநீர் கேன்கள் - உணவு பாதுகாப்புத்துறை ஆய்வில் அதிர்ச்சி தமிழ்நாடு
    சென்னை அருகே அமைச்சர் கார் மோதி மனைவி கண்முன்னே கணவர் பலி அரசு மருத்துவமனை

    மனித உரிமைகள் ஆணையம்

    கழிவுநீர் தொட்டியில் 3 பேர் உயிரிழந்தோர் விவகாரம் - தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் கடலூர்
    சென்னை கலாஷேத்ரா பாலியல் விவகாரம் - பேராசிரியர் ஜாமீன் மனுவினை ரத்து செய்த நீதிமன்றம்  சென்னை
    சென்னை கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளை விசாரிக்கும் மாநில மனித உரிமைகள் ஆணையம் சென்னை
    திருநெல்வேலி பற்களை பிடுங்கிய விவகாரம் - மனித உரிமை ஆணையத்தில் மேலும் 2 புகார் மனு விசாரணைக்கு ஏற்பு திருநெல்வேலி

    காவல்துறை

    சயனைடு கலந்த மது குடித்து 2 பேர் பலி - டாஸ்மாக் மேற்பார்வையாளர் உள்ளிட்ட 4 பேர் பணியிடை நீக்கம்  தமிழ்நாடு
    சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 2 பேர் பலி  காவல்துறை
    கரூர்: செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்திய பெண்! காவல்துறை
    கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை  மு.க ஸ்டாலின்

    காவல்துறை

    மிசோரத்தில் ரூ.25.20 லட்சம் மதிப்புள்ள போலி இந்திய ரூபாய் நோட்டுகள் பறிமுதல்!  இந்தியா
    கள்ளச்சாராய விவகாரம் - முக்கிய குற்றவாளி கைது  அரசு மருத்துவமனை
    உடல் பருமனான காவலர்களுக்கு மூன்று மாத கெடு: அசாம் காவல்துறை அதிரடி  இந்தியா
    கோவையில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சி - 2 பேர் கைது  கோவை
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023