Page Loader
ஜோஷிமத் போலவே ஜம்மு காஷ்மீரில் ஒரு புதையும் கிராமம்
"தேவையான நடவடிக்கைகளையும் நாங்கள் எடுத்து வருகிறோம்." என்று தோடா மாவட்ட துணை ஆணையர் விஷேஷ் மகாஜன் கூறியுள்ளார்.

ஜோஷிமத் போலவே ஜம்மு காஷ்மீரில் ஒரு புதையும் கிராமம்

எழுதியவர் Sindhuja SM
Feb 03, 2023
06:59 pm

செய்தி முன்னோட்டம்

உத்தரகண்ட், ஜோஷிமத் போலவே ஜம்மு காஷ்மீரிலும் ஒரு கிராமம் புதைந்து வருவதால் 20க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வெளியேற்றப்பட்டுள்ளன. குடும்பங்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டு வருவதாகவும், கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டதற்கான காரணத்தை ஆராய நிபுணர்கள் கிராமத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தாத்திரி நகராட்சி பகுதியில் உள்ள நாய் பஸ்தி கிராமத்தில் சுமார் 50 வீடுகள் உள்ளன. பாதிக்கப்பட்ட குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும், மண் புதைவதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தத்ரியின் துணைப் பிரிவு மாஜிஸ்திரேட் அதர் அமீன் தெரிவித்துள்ளார். இந்த மலை கிராமத்தில் சாலைகள் அமைப்பது மற்றும் நீர் கசிவு உள்ளிட்ட பல காரணிகளால் இது ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ட்விட்டர் அஞ்சல்

ஜம்மு காஷ்மீரில் உள்ள புதையும் கிராமத்தின் வீடியோ பதிவு