NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பலத்த பாதுகாப்புடன் அமர்நாத் யாத்திரை துவக்கம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    பலத்த பாதுகாப்புடன் அமர்நாத் யாத்திரை துவக்கம் 
    அமர்நாத் புனித யாத்திரை பகவதி நகர் முகாமிலிருந்து இன்று துவங்கியது

    பலத்த பாதுகாப்புடன் அமர்நாத் யாத்திரை துவக்கம் 

    எழுதியவர் Venkatalakshmi V
    Jun 30, 2023
    02:40 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தாண்டின் அமர்நாத் புனித யாத்திரை பகவதி நகர் முகாமிலிருந்து இன்று துவங்கியது.

    முதல் குழுவை, ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா கொடியசைத்து துவக்கி வைத்தார்.

    இன்று புறப்பட்ட முதல் குழுவில் 3400 பக்தர்கள் புறப்படுகிறார்கள் என செய்திகள் தெரிவிக்கின்றன.

    இந்த குழு ஜம்மு காஷ்மீர் மாகாணத்தில் உள்ள பேஸ் காம்பிலிருந்து, பஹல்கம் மற்றும் பல்தாளுக்கு புறப்படுகிறது.

    அங்கிருந்து மலைப்பாதை மீதான யாத்திரை துவங்கும். வழி எங்கும் யாத்ரிகர்களின் பாதுகாப்பிற்காக CRPF வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என அமர்நாத் யாத்திரை நிர்வாகத்தினரும், ஜம்மு காஷ்மீர் அரசும் தெரிவித்துள்ளது.

    card 2

    பலத்த ராணுவ பாதுகாப்பு:

    பக்தர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த, துணை ராணுவத்தினர் மட்டுமின்றி, வெடிகுண்டு நிபுணர்கள் குழுக்களும், மோப்பநாய்களும் உடனிருப்பர்.

    24 மணிநேரமும் இந்த குழுக்கள் கண்காணிப்பு பணியில் இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதுமட்டுமின்றி, டரோன்களும், ஆகாய மார்க்கமான பாதுகாப்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    62 நாட்கள் நடைபெறும் இந்த அமர்நாத் யாத்திரை, நாளை, ஜூலை 1 தொடங்கி, ஆகஸ்ட் 31 அன்று நிறைவடையும்.

    யாத்திரைக்கு வரும் பக்தர்கள், சமையல் செய்ய, உபகரணங்கள், பொருட்கள் மற்றும் தங்கும் கூடாரங்களை 'லாங்கர்' குழுக்கள் ஏற்பாடு செய்துள்ளன. இந்தாண்டு, 22 லாங்கர் குழுக்கள் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அமர்நாத்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    அமர்நாத்

    அமர்நாத் யாத்திரையில் பூரி, பிரைடு ரைஸ், தோசைக்கு தடை  அமர்நாத் யாத்திரை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025