NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 1000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது ஜியோமார்ட் நிறுவனம்!
    அடுத்த செய்திக் கட்டுரை
    1000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது ஜியோமார்ட் நிறுவனம்!
    1000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ஜியோமார்ட், மேலும் 9000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யத் திட்டம்

    1000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது ஜியோமார்ட் நிறுவனம்!

    எழுதியவர் Prasanna Venkatesh
    May 23, 2023
    02:08 pm

    செய்தி முன்னோட்டம்

    ரிலையன்ஸ் குழுமத்தைச் சேர்ந்த இணைய வணிக நிறுவனமான ஜியோமார்ட், இந்தியாவில் 1000 ஊழியர்களை தற்போது பணிநீக்கம் செய்திருக்கிறது.

    இனி வரும் நாட்களில் மேலும் 9,000 ஊழியர்களை அந்நிறுவனம் பணிநீக்கம் செய்யவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

    கடந்த சில நாட்களாகவே அந்நிறுவனம் தங்களின் 500-க்கும் மேற்பட்ட நிர்வாகிகளை ராஜினாமா செய்ய அறிவுறுத்தியதாக அந்நிறுவன ஊழியர்கள் சிலர் தெரிவித்திருக்கின்றனர்.

    வணிகர்களுக்கு மிகக் குறைந்த விலையில் பொருட்களை வழங்கி, விநியோகஸ்தர்களிடையே கடந்த ஆண்டு கலக்கத்தை ஏற்படுத்தியது ஜியோமார்ட்.

    தற்போது தங்களின் வருவாயைப் பெருக்கவும், லாபத்தை உயர்த்தவும், செலவுகளைக் குறைக்கவும் இந்தப் பணிநீக்க நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது அந்நிறுவனம்.

    மேலும், இந்தியாவில் இயங்கிவரும் அந்நிறுவனத்தின் 150 ஃபுல்பில்மெண்ட் மையங்களில் பாதிக்கும் மேற்பட்ட மையங்களை மூடவும் அந்நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.

    ஜியோமார்ட்

    ஜியோமார்ட்டின் திட்டம் என்ன? 

    ஜெர்மனியைச் சேர்ந்த சில்லரை வணிக நிறுவனமான மெட்ரோ AG நிறுவனத்தின் இந்திய வணிகத்தை ரூ.2,850 கோடியில் கைப்பற்றியிருக்கிறது ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனம்.

    இதனைக் கடந்த வாரம் அந்த ஜெர்மன் நிறுவனமும் உறுதி செய்திருக்கிறது. இந்த புதிய கைப்பற்றலைத் தொடர்ந்து அந்நிறுவனத்தின் 3,500 ஊழியர்களும் ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தின் வசம் வந்திருக்கின்றனர்.

    ஜியோமார்ட்டின் பணிநீக்க முடிவுகளுக்கு இந்தப் புதிய ஒப்பந்தமும் ஒரு காரணமாகக் கூறப்படுகிறது.

    இணைய சில்லறை வணிகச் சந்தையில் தங்களை நிலைநிறுத்திக் கொண்டு வெற்றிகரமான நிறுவனமாக திகழ தங்களுடைய வணிகயுக்தியை மாற்றியிருக்கிறது ஜியோமார்ட். அந்த யுக்தியின் ஒரு பகுதியாகவே மேற்கூறிய நடவடிக்கைகளை அந்நிறுவனம் எடுத்து வருவதாகத் தெரிகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ரிலையன்ஸ்
    வணிகம்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    ரிலையன்ஸ்

    CampaCola-வை மீண்டும் இந்தியாவில் அறிமுகப்படுத்திய ரிலையன்ஸ்! தொழில்நுட்பம்

    வணிகம்

    அதே சரிவில் நீட்டிக்கும் தங்கம் விலை - இன்றைய நிலவரம்!  தங்கம் வெள்ளி விலை
    தொடர்ச்சியாக சரிவிலேயே இருக்கும் தங்கம் விலை - இன்றைய நிலவரம்!  வணிக செய்தி
    நெருங்கிய அட்ச திரிதியை... மீண்டும் உச்சத்திற்கு சென்ற தங்கம் விலை!  வணிக செய்தி
    புதிய மைல்கல்லை எட்டிய ITC நிறுவனம்! பங்குச் சந்தை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025