NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஜார்கண்ட்: தவறான தீ விபத்து எச்சரிக்கை ஒலியால் ரயிலில் இருந்து குதித்த 3 பேர் பலி
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஜார்கண்ட்: தவறான தீ விபத்து எச்சரிக்கை ஒலியால் ரயிலில் இருந்து குதித்த 3 பேர் பலி

    ஜார்கண்ட்: தவறான தீ விபத்து எச்சரிக்கை ஒலியால் ரயிலில் இருந்து குதித்த 3 பேர் பலி

    எழுதியவர் Sindhuja SM
    Jun 15, 2024
    12:33 pm

    செய்தி முன்னோட்டம்

    சசரம்-ராஞ்சி இன்டர்சிட்டி இடையே ஓடும் விரைவு ரயிலில் இருந்து தவறாக தீ விபத்து எச்சரிக்கை மணி ஒலித்ததால் ஓடும் ரயிலில் இருந்து வெளியே குதித்த மூன்று பயணிகள் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.

    நேற்று இரவு 8:00 மணியளவில் ஜார்க்கண்டில் உள்ள குமான் ஸ்டேஷன் அருகே இந்த சம்பவம் நடந்தது.

    அந்த ரயிலின் இன்ஜினில் தீப்பற்றியதாக வதந்தி கிளம்பியதை அடுத்து, பயணிகளிடையே பீதி ஏற்பட்டது.

    இதனால் பயத்தில் சிலர் அருகில் இருந்த பாதையில் குதித்தனர். அப்போது அந்த வழியாக எதிரே வந்த சரக்கு ரயிலில் அவர்கள் விழுந்து உயிரிழந்தனர்.

    இந்தியா 

    பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டு, தேடுதல் பணி தொடர்கிறது

    பாதிக்கப்பட்ட இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு பெண் உடனடியாக உயிரிழந்தனர். மேலும் நான்கு பேர் காயமடைந்தனர்.

    "விபத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டனர், மேலும் நான்கு பேர் காயமடைந்தனர். தேடுதல் பணி இன்னும் நடந்து கொண்டிருக்கிறது, தற்போதைக்கு மூன்று உடல்கள் மீட்கப்பட்டுள்ளன," என்று லதேஹர் துணை ஆணையர் சிங் கூறியுள்ளர்.

    காயமடைந்தவர்களில் ஒரு தாயும் அவரது மகளும் உடனடியாக மாவட்ட மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.

    தீ விபத்து ஏற்பட்டால் ஒலிக்கும் மணி ஏன் திடீரென ஒலித்தது என்பது குறித்து ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஜார்கண்ட்
    ரயில்கள்
    ரயில் நிலையம்

    சமீபத்திய

    சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிவு: இன்றைய சரிவுக்கு முக்கிய காரணங்கள் சென்செக்ஸ்
    ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இப்போது கூகிளின் 100 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் இலவசமாகக் கிடைக்கிறது ஏர்டெல்
    ஹிருத்திக் ரோஷனும் ஜூனியர் NTR நடிக்கும் 'வார் 2' டீஸர் வெளியானது படத்தின் டீசர்
    இந்தியா- பாகிஸ்தான் போர் காரணமாக நிறுத்தப்பட்ட அட்டாரி-வாகா எல்லை கொடியிறக்க விழா இன்று முதல் மீண்டும் தொடக்கம் இந்தியா

    ஜார்கண்ட்

    ஜார்கண்ட் மாநிலத்தில் ரயில் தண்டவாளத்தை தகர்த்த மாவோயிஸ்டுகள் மாவோயிஸ்ட்
    ஃபோன் பேசும்போது அழுததால் தனது 2 வயது மகனின் கழுத்தை நெரித்து கொன்ற பெண் கைது கொலை
    ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் கார் டிவைடரில் மோதியதால் 6 பேர் பலி விபத்து
    இத்தாலியில் சடலமாக மீட்கப்பட்ட இந்திய மாணவர்: உடலை இந்தியாவுக்கு கொண்டு வர குடும்பத்தினர் அரசிடம் கோரிக்கை  இந்தியா

    ரயில்கள்

    பாகிஸ்தானில் ரயில் தடம் புரண்டு பெரும் விபத்து: 33 பேர் பலி பாகிஸ்தான்
    பெங்களூரில் உத்தியான் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து பெங்களூர்
    மத்திய பிரதேசத்தில் கஜுராஹோ - உதய்பூர் இன்டர்சிட்டி ரயில் என்ஜினில் தீ விபத்து மத்திய பிரதேசம்
    சென்னையில் ஆகஸ்ட் 27 முதல் பறக்கும் ரயில் சேவையில் மாற்றம் சென்னை

    ரயில் நிலையம்

    செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இறந்து கிடந்த நபர்- 5 மணி நேரமாக சடலம் அகற்றப்படாத அவலம் செங்கல்பட்டு
    உத்தரப்பிரதேசம் விரைவு ரயிலில் தீ விபத்து - 19 பேர் காயம் உத்தரப்பிரதேசம்
    தனி நபருக்காக இயக்கப்பட்ட ரயில் - சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி  சென்னை
    தெரிந்து கொள்ளுங்கள்- ஏன் ஏசி பெட்டிகள் எப்போதும் ரயிலின் நடுவில் இருக்கிறது? ரயில்கள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025