NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 2000 நோட்டு அறிவிப்பு எதிரொலி.. நகைக்கடைகளில் குவியும் மக்கள்?
    அடுத்த செய்திக் கட்டுரை
    2000 நோட்டு அறிவிப்பு எதிரொலி.. நகைக்கடைகளில் குவியும் மக்கள்?
    2000 நோட்டு அறிவிப்பு எதிரொலி.. நகைக்கடைகளில் குவியும் மக்கள்?

    2000 நோட்டு அறிவிப்பு எதிரொலி.. நகைக்கடைகளில் குவியும் மக்கள்?

    எழுதியவர் Prasanna Venkatesh
    May 22, 2023
    10:15 am

    செய்தி முன்னோட்டம்

    கடந்த மே 19-ம் தேதி 2000 ரூபாய் நோட்டுக்களை மக்கள் பயன்பாட்டில் இருந்து திரும்பப் பெறுவதாக அறிவித்திருந்தது ரிசர்வ் வங்கி. மக்கள் தங்களிடம் உள்ள 2000 ரூபாய் நோட்டுக்களை நாளை முதல் செப் 30 வரை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் எனவும் அறிவித்திருக்கிறது ரிசர்வ் வங்கி.

    இந்நிலையில் திடீரென இந்த அறிவிப்பு வெளியானதையடுத்து அதிகளவில் 2000 ரூபாய் நோட்டுக்களை வைத்திருக்கும் பலரும் தங்கத்தின் பக்கம் தங்கள் பார்வையை திருப்பியிருக்கின்றனர்.

    "2000 ரூபாய் நோட்டு குறித்த அறிவிப்பு வெளியிட்டவுடன் பலரும் தங்கத்தை 2000 ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து வாங்குவதைக் குறித்து விசாரித்தனர். ஆனால், கடுமையான KYC விதிகள் காரணமாக யாரும் வாங்கவில்லை" எனத் தெரிவித்திருக்கிறார் தங்கநகை விற்பனையாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் சாயாம் மெஹ்ரா.

    இந்தியா

    பணமதிப்பிழப்பின் போதும்.. 

    பணமதிப்பிழப்பு அறிவிப்பு வெளியான போது அதிகளவில் மக்கள் தங்கத்தை வாங்கிக் குவித்தனர். ஆனால், அதுபோன்ற பதற்றமான சூழ்நிலை தற்போது இல்லை, எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

    இரண்டு லட்சத்திற்கு மேல் மதிப்பிற்கு தங்கநகை வாங்குபவர்கள் தங்களுடைய பான் மற்றும் ஆதார் எண்ணை KYC-க்காக (Know Your Customer) சமர்ப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும், இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி 2000 ரூபாய் நோட்டுகளைக் கொண்டு தங்கநகை வாங்குபவர்களிடம் அன்றைய விலையை விட கூடுதல் விலையில் தங்கம் விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்பட்டது.

    "இது போன்ற நடவடிக்கைகள் ஒழுங்குபடுத்தப்படாத இடங்களில் மட்டுமே நடைபெறுகிறது. ஒழுங்குபடுத்தப்பட்ட நகைக்கடைகளில் இந்த மாதிரியான சட்டத்திற்கு புறம்பான செயல்கள் நடைபெறுவதில்லை", எனக் கூறியிருக்கிறார் PNG நகைக்கடைகளின் நிர்வாக இயக்குநரான சவுரப் காட்கில்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ரிசர்வ் வங்கி
    இந்தியா

    சமீபத்திய

    கல்வி நிதி வழங்க மறுக்கும் மத்திய அரசு மீது உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தமிழக அரசு
    புக்கர் பரிசு வென்ற முதல் கன்னட பெண் எழுத்தாளர் பானு முஷ்டாக் கர்நாடகா
    175 பில்லியன் டாலர் மதிப்புள்ள 'Golden Dome' பாதுகாப்புத் திட்டத்தை டிரம்ப் வெளியிட்டார்; அதன் சிறப்பம்சங்கள் என்ன? அமெரிக்கா
    தமிழக சிறை விதிகளில் திருத்தம்: கைதிகளின் சாதியை கேட்க தடை தமிழக அரசு

    ரிசர்வ் வங்கி

    அதானி பங்குகள் வீழ்ச்சி; வங்கித் துறை நிலையாக தான் உள்ளது: RBI இந்தியா
    அதானி குழும பிரச்சனை: செய்தியாளர் சந்திப்பில் பேசிய ரிசர்வ் வங்கி கவர்னர் இந்தியா
    ரெப்போ வட்டி விகிதம் உயர்வு: சமானிய மக்களுக்கு உண்டாகும் பாதிப்புகள் என்ன? தொழில்நுட்பம்
    ரூபாய் நோட்டில் கிறுக்கப்பட்டிருந்தால் அது செல்லாது என்று கூறப்படுவது உண்மையா இந்தியா

    இந்தியா

    ஆஸ்திரேலிய பயணத்தை ரத்து செய்தார் ஜோ பைடன்: குவாட்  உச்சி மாநாடு  ரத்து செய்யப்பட்டது ஆஸ்திரேலியா
    இந்தியாவில் ஒரே நாளில் 1,021 கொரோனா பாதிப்பு: 4 பேர் உயிரிழப்பு கொரோனா
    மிசோரத்தில் ரூ.25.20 லட்சம் மதிப்புள்ள போலி இந்திய ரூபாய் நோட்டுகள் பறிமுதல்!  காவல்துறை
    கர்நாடக முதல்வராகிறாரா சித்தராமையா: டிகே.சிவகுமாருக்கு துணை முதல்வர் பதவி கர்நாடகா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025