NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பிஸ்லேரி இன்டர்நேஷனலின் புதிய தலைவர்: யாரிந்த ஜெயந்தி சவுகான்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பிஸ்லேரி இன்டர்நேஷனலின் புதிய தலைவர்: யாரிந்த ஜெயந்தி சவுகான்
    ஜெயந்தி சுஹான் ரமேஷ் சவுகானின் ஒரே மகள் ஆவார்.

    பிஸ்லேரி இன்டர்நேஷனலின் புதிய தலைவர்: யாரிந்த ஜெயந்தி சவுகான்

    எழுதியவர் Sindhuja SM
    Mar 21, 2023
    10:34 am

    செய்தி முன்னோட்டம்

    பிஸ்லேரி இன்டர்நேஷனல் நிறுவனத்தை டாடா கன்சூமர் புராடக்ட்ஸ் லிமிடெட்(TCPL) கையகப்படுத்தாது என்றும், பிஸ்லேரியின் நிறுவனர் மற்றும் தலைவர் ரமேஷ் சவுகானின் மகள் ஜெயந்தி சவுகான் மூலம் நிறுவனம் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஜெயந்தி சௌஹான், பிஸ்லேரி இன்டர்நேஷனல் நிறுவனத்தின் துணைத் தலைவராக பணியாற்றி வரும் இந்திய தொழிலதிபர் ஆவார்.

    "ஜெயந்தி எங்கள் தொழில்முறை குழுவுடன் நிறுவனத்தை நடத்துவார். நாங்கள் நிறுவனத்தை விற்க விரும்பவில்லை." என்று பிஸ்லேரி தலைவர் ரமேஷ் சவுகான் கூறியுள்ளார்.

    தலைமை நிர்வாகி ஏஞ்சலோ ஜார்ஜ் தலைமையிலான தொழில்முறை குழுவுடன் அவர் பணியாற்றுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஜெயந்தி சவுகான் ரமேஷ் சவுகானின் ஒரே மகள் ஆவார்.

    ஜெயந்தி சவுகான் தனது குழந்தைப் பருவத்தின் பெரும்பகுதியை டெல்லி, மும்பை மற்றும் நியூயார்க்கில் கழித்தார்.

    இந்தியா

    யாரிந்த ஜெயந்தி சவுகான்?

    உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்த பிறகு, சௌஹான் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஃபேஷன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டிசைன் அண்ட் மெர்ச்சண்டைசிங்கில்(FIDM) தயாரிப்பு மேம்பாட்டைப் படித்தார்.

    அதன் பிறகு, அவர் இஸ்டிடுடோ மரங்கோனி மிலானோவில் ஃபேஷன் ஸ்டைலிங்கை கற்றார்.

    லண்டன் காலேஜ் ஆஃப் ஃபேஷன் நிறுவனத்தில் ஃபேஷன் ஸ்டைலிங் மற்றும் போட்டோகிராஃபி ஆகியவற்றிலும் அவர் தகுதி பெற்றுள்ளார்.

    மேலும், அவர் 24 வயதில் தனது தந்தையின் வழிகாட்டுதலின் கீழ் பிஸ்லேரியில் பணியாற்ற தொடங்கினார்.

    2011 வரை டெல்லி அலுவலகத்தில் வேலை செய்த அவர், அதன் பிறகு மும்பை அலுவலகத்தில் தன் பணியை தொடர்ந்தார்.

    HR, சேல்ஸ், தயாரிப்பு மேம்பாடு, விளம்பரம் போன்ற பலதுறைகளிலும் இவர் இதுவரை பணியாற்றி இருக்கிறார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    வணிக செய்தி

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    இந்தியா

    பிரதமர் மோடியை சந்தித்தார் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திரா
    தமிழகத்திற்கு வர இருக்கும் மெகா டெக்ஸ்டைல் ​​பார்க்: பிரதமர் மோடி அறிவிப்பு தமிழ்நாடு
    வாகனங்களை நிறுத்தி குழந்தைகளுக்கு சாக்லேட் வழங்கிய குடியரசு தலைவர் முர்மு கேரளா
    இந்தியர்கள் கொண்டாட மறந்த சூப்பரான 5 பைக்குகள் இங்கே! பைக் நிறுவனங்கள்

    வணிக செய்தி

    இந்தியாவில் அமேசான் ஏர் சரக்கு விமான சேவை தொடக்கம்! முக்கிய நோக்கம் என்ன? தொழில்நுட்பம்
    2023ஆம் நிதியாண்டில் 6.1 சதவீதம் இந்தியா பொருளாதாரம் வீழ்ச்சியடையும்! ஐஎம்எஃப் கணிப்பு; இந்தியா
    பட்ஜெட் தாக்கல் எதிரொலி! கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை; தங்கம் வெள்ளி விலை
    யூனியன் பட்ஜெட் 2023; பொருளாதாரத்தில் இந்திய 5வது பெரிய நாடாக உள்ளது; பட்ஜெட் 2023
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025