கோடை விடுமுறை ஸ்பெஷல்: நெல்லையிலிருந்து கோவாவுக்கு ரயிலில் டூர் போலாமா?
செய்தி முன்னோட்டம்
கோடை விடுமுறையை கொண்டாடும் விதமாக, திருநெல்வேலியில் இருந்து கோவாவுக்கு சிறப்பு சுற்றுலா ரயிலை இயக்கவுள்ளதாக ஐஆர்சிடிசி அறிவித்துள்ளது. 7 நாட்கள் கொண்ட இந்தப் பயணத் திட்டம் சுற்றுலா பயணிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பயணக் காலம் 7 நாட்கள் ஆகும். மே 1-ஆம் தேதி புறப்பட்டு, மே 7-ஆம் தேதி திரும்பும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சிறப்பு ரயில் திருநெல்வேலியில் தொடங்கி மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், தருமபுரி மற்றும் ஓசூர் வழியாக செல்கிறது.
சிறப்பம்சங்கள்
பயணத்தின் சிறப்பம்சங்கள்
இந்த பயணத்திற்கு ஒரு நபருக்கு ₹26,300 முதல் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. கோவாவின் புகழ்பெற்ற தூத்சாகர் நீர்வீழ்ச்சியைப் பார்வையிடும் வாய்ப்பு இந்த சுற்றுலாத் தொகுப்பில் வழங்கப்படுகிறது. இந்த பயணத்தில், ரயிலில் 3-ஏசி வகுப்பில் பயணம், மூன்று நட்சத்திர ஹோட்டலில் தங்கும் வசதி மற்றும் சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க ஏசி பேருந்து போக்குவரத்து ஆகியவை அடங்கும். அதோடு இந்த 7 நாட்களுக்கு உணவு மற்றும் பிற அத்தியாவசியத் தேவைகளும் இதில் அடங்கும்.