NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தஞ்சாவூர் மனோரா கடற்கரையில் சர்வதேச கடற்பசு பாதுகாப்பு மையம்; மாதிரி புகைப்படங்கள் வெளியீடு
    அடுத்த செய்திக் கட்டுரை
    தஞ்சாவூர் மனோரா கடற்கரையில் சர்வதேச கடற்பசு பாதுகாப்பு மையம்; மாதிரி புகைப்படங்கள் வெளியீடு
    சர்வதேச கடற்பசு பாதுகாப்பு மையம்

    தஞ்சாவூர் மனோரா கடற்கரையில் சர்வதேச கடற்பசு பாதுகாப்பு மையம்; மாதிரி புகைப்படங்கள் வெளியீடு

    எழுதியவர் Venkatalakshmi V
    Nov 08, 2024
    06:02 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு அரசு, தஞ்சாவூர் அருகே உள்ள மனோரா கடற்கரையில் ரூ.15 கோடி செலவில் சர்வதேச கடற்பசு பாதுகாப்பு மையத்தை அமைப்பதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது.

    இந்தியாவில் கடற்பசு இனங்கள் வன விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படுகிறது.

    எனினும், இந்த இனங்களின் எண்ணிக்கை வாழ்விட இழப்பினால் கடுமையாக குறைந்து வருகிறது.

    தற்போது இந்தியாவில் சுமார் 240 கடற்பசுக்கள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது., அவற்றில் பெரும்பான்மையானவை தமிழ்நாட்டின் கடற்கரை பகுதிகளில் காணப்படுகின்றன.

    இதனை கருத்தில் கொண்டு, தமிழக அரசு, பாக்விரிகுடா பகுதியில் "கடற்பசு பாதுகாப்பகம்" அமைக்க தீர்மானித்து, கடந்த ஆண்டு சட்டப்பேரவையில் அறிவித்திருந்தது.

    அரசாணை

    செயல்முறை அரசாணை வெளியிட்டுள்ளது தமிழக அரசு

    சர்வதேச கடற்பசு பாதுகாப்பு மையம் முழுவதுமாக 3 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது:

    பொதுமக்களுக்கு அனுமதி உள்ள பகுதி

    பகுதி அளவு பொதுமக்களுக்கு அனுமதி உள்ள பகுதி

    பொதுமக்களுக்கு அனுமதி இல்லாத பகுதி இந்த மையத்தில், கடல் பசு வடிவிலான அருங்காட்சியகம், 4D அரங்கம், பூங்கா, திறந்தவெளி அரங்கம், உணவகம், வாகன நிறுத்துமிடம், செல்ஃபி பாயிண்ட், குடிநீர் வசதி மற்றும் மிகப்பெரிய முகப்பு போன்ற வசதிகள் அமையவுள்ளது.

    448 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களின் கடலோரப் பகுதிகள் உள்ளடக்கிய பாக்விரிகுடா கடற்பசு பாதுகாப்பகமாக (Dugong Conservation Reserve) ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த புதிய மையம், கடற்பசு இனங்களை பாதுகாக்கும் முக்கிய நிலையமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    #Photos | தஞ்சாவூர் மாவட்டம் மனோரா கடற்கரையில் ₹15 கோடியில் சர்வதேச கடற்பசு பாதுகாப்பு மையம் அமைக்கிறது தமிழ்நாடு அரசு. மாதிரிப் படங்கள் வெளியீடு!

    இந்த மையத்தில் முழுவதுமாக பொதுமக்களை அனுமதிக்கும் பகுதி, பகுதி அளவு பொதுமக்களை அனுமதிக்கும் போது, பொதுமக்களுக்கு அனுமதி இல்லாத… pic.twitter.com/plVNyndMV6

    — Sun News (@sunnewstamil) November 8, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தஞ்சாவூர்
    கடற்கரை

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் கிரிக்கெட் கிடையாது; ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியிலிருந்து விலக பிசிசிஐ முடிவு பிசிசிஐ
    மே 8 அன்று பொற்கோவிலுக்கு குறிவைத்த பாகிஸ்தானின் தாக்குதலை முறியடித்த இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு பொற்கோயில்
    மோசமான பணியிட சூழல்; பெங்களூர் பொறியாளர் மரணத்தின் பின்னணியில் பகீர் குற்றச்சாட்டு பெங்களூர்
    மூன்று வெவ்வேறு ஐபிஎல் அணிகளை பிளேஆஃப்க்கு அழைத்துச் சென்று ஷ்ரேயாஸ் ஐயர் சாதனை ஐபிஎல் 2025

    தஞ்சாவூர்

    'அம்மான்னா சும்மா இல்ல டா' - கன்றுக்குட்டியை காப்பாற்ற 5 கிமீ வரை ஆட்டோவுக்கு பின்னால் ஓடிய தாய் பசு  தமிழ்நாடு
    திமுக கொடி கட்டிய காரில் போதைப்பொருட்கள் கடத்திய 2 பேர் கைது திமுக
    தஞ்சை பெரிய கோவிலில் ஆடை கட்டுப்பாடுகள் அறிவிப்பு  அறநிலையத்துறை
    தஞ்சாவூர், சேலத்தில், ரூ.60 கோடி மதிப்பில் மினி டைடல் பூங்காக்கள்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார் மு.க ஸ்டாலின்

    கடற்கரை

    கருணாநிதி நினைவிடத்தில் ரூ.80 லட்ச செலவில் அருங்காட்சியகம்-கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் அனுமதி கருணாநிதி
    ராமேஸ்வர கடற்கரையில் பொட்டலமாக கரை ஒதுங்கிய 20 கிலோ கஞ்சா பறிமுதல் ராமேஸ்வரம்
    திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் நாட்டு வெடிகுண்டு கண்டெடுப்பு - போலீஸ் மறுப்பு திருச்செந்தூர்
    ராமநாதபுரத்தில் உயிரை பணையம் வைத்து கடற்பாசிகளை சேகரிக்கும் மீனவ பெண்கள் ராமநாதபுரம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025