NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஆவின் ஊழியர்களின் இடைக்கால உத்தரவிற்கு இடைக்கால தடை - சென்னை உயர்நீதிமன்றம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆவின் ஊழியர்களின் இடைக்கால உத்தரவிற்கு இடைக்கால தடை - சென்னை உயர்நீதிமன்றம்
    முன்னறிவிப்பில்லாத பணி நீக்கத்திற்கு இடைக்கால தடை

    ஆவின் ஊழியர்களின் இடைக்கால உத்தரவிற்கு இடைக்கால தடை - சென்னை உயர்நீதிமன்றம்

    எழுதியவர் Nivetha P
    Jan 12, 2023
    02:04 pm

    செய்தி முன்னோட்டம்

    ஆவின் நிர்வாகத்தில் அதிமுக ஆட்சியின்போது பணி நியமனங்களில் விதிமுறை மீறல் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

    இதன் அடிப்படையில், கடந்த 2020-2021ம் ஆண்டுகளில் 8 மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் மற்றும் ஆவின் தலைமையகங்களில் நேரடியாக நியமிக்கப்பட்ட 236 ஊழியர்களை ஆவின் நிர்வாகம் பணிநீக்கம் செய்தது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 25 ஊழியர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கானது, சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஊழியர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பணி நீக்க தொடர்பாக எந்த நோட்டிஸும் கொடுக்கவில்லை என்று கூறினார்.

    மார்ச் 17ம்தேதி ஒத்திவைப்பு

    முன்னறிவிப்பின்றி பணி நீக்கம் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு

    இதனை தொடர்ந்து, ஆவினில் எந்த நோட்டீஸும் கொடுக்காமல் 25 ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்பட்ட உத்தரவுக்கு நீதிபதிகள் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்கள்.

    மேலும், ஊழியர்கள் பணி நீக்கம் தொடர்பாக ஆவின் நிறுவனம் தக்க விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கூறிய நீதிமன்றம், இந்த வழக்கினை மார்ச் மாதம் 17ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

    முன்னதாக, அதிமுக ஆட்சியின் போது லஞ்சம் பெற்று பணி ஆணை பிறப்பித்ததாக கூறி இந்த 25 பேரை ஆவின் நிர்வாகம் பணி நீக்கம் செய்தது.

    2 ஆண்டுகளாக பணியில் நீடிக்கும் நிலையில் முன்னறிவிப்பின்றி பணி நீக்கம் செய்ததாக கூறி வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை உயர் நீதிமன்றம்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    சென்னை உயர் நீதிமன்றம்

    மின் வாரிய ஊழியர்கள் வேலைநிறுத்தத்திற்கு தடை - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு இந்தியா
    மனநலம் பாதித்தவர்களுக்கான 55 மறுவாழ்வு மையங்கள்-நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தமிழ்நாடு
    கள்ளக்குறிச்சி பள்ளியில் 5ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் இயங்க அனுமதி இந்தியா
    கொடைக்கானலில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை - ஆட்சியருக்கு உத்தரவு இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025