NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 'சந்தைப்படுத்துதலுக்கு AI-யில் முதலீடு செய்ய நாங்கள் தயார்' - புதிய ஆய்வு! 
    அடுத்த செய்திக் கட்டுரை
    'சந்தைப்படுத்துதலுக்கு AI-யில் முதலீடு செய்ய நாங்கள் தயார்' - புதிய ஆய்வு! 
    மார்க்கெட்டிங்கில் AI தொழில்நுட்பம்

    'சந்தைப்படுத்துதலுக்கு AI-யில் முதலீடு செய்ய நாங்கள் தயார்' - புதிய ஆய்வு! 

    எழுதியவர் Prasanna Venkatesh
    Apr 29, 2023
    11:00 am

    செய்தி முன்னோட்டம்

    குறு மற்றும் நடுத்தர வணிக நிறுவனங்களிடம் (SMBs) லிங்க்டுஇன் தளம் ஆய்வு ஒன்றை நடத்தியது.

    அதில், பொருளாதார நிலவரங்களைக் கடந்து, 'சந்தைப்படுத்துதல்' (Marketing) தங்கள் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு முக்கியம் எனக் கருதுவதாகத் தெரிவித்திருக்கின்றன.

    10-ல் 9 நிறுவனங்கள் சந்தைப்படுத்துதலுக்காக ஆட்டோமேஷன் மற்றும் AI தொழில்நுட்பங்களை பயன்படுத்த விரும்புவதாகவும், அதற்காக குறிப்பிட்ட தொகையை (சிறிய தொகையை) ஒதுக்கியிருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றன.

    இந்திய SMB-க்கள் சராசரியாக தங்கள் ஆண்டு வருவாயில் 26%-த்தை சந்தைப்படுத்துதலில் முதலீடு செய்கின்றன.

    தற்போது, வாடிக்கையாளர்களைப் பெருக்குவது, வருவாய் மற்றும் சந்தை மதிப்பை உயர்த்துவது, நம்பகத்தைன்மையை கட்டமைப்பது ஆகியவையே இந்திய SMB-க்களின் முக்கியக் குறிக்கோள்களாக இருக்கின்றன.

    இந்த குறிக்கோள்களை அடைய சந்தைப்படுத்துவதற்கு AI உள்ளிட்ட தொழில்நுட்பங்களில் முதலீடு செய்யவும் அவை தயாராக இருக்கின்றன.

    இந்தியா

    சந்தைப்படுத்துதலில் புதிய தொழில்நுட்பங்கள்: 

    ஆய்வில் பங்கெடுத்த நிறுவனங்களில் 93% நிறுவனங்கள் சாட்ஜிபிடி உள்ளிட்ட AI கருவிகள் தங்கள் வணிகத்தை சந்தைப்படுத்துவதற்கு மிகவும் உதவியாக இருக்கும் என நம்புவதாகத் தெரிவித்திருக்கின்றன.

    42% நிறுவனங்கள், AI உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்கள் குறித்து இன்னும் நிறைய கற்றுக் கொள்ள வேண்டியிருப்பதால்,சந்தைப்படுத்துதலுக்காக அவற்றில் முதலீடு செய்யப் போவதில்லை எனக் கூறியிருக்கின்றன.

    இது குறித்து லிங்க்டுஇன் நிறுவனத்தின் இந்திய மேலாளர், அஷூடோஷ் குப்தா பேசும் போது, "SMB-க்களுக்கு நேரமும் மிக முக்கியமான ஒரு வளம். அந்நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்ய வேண்டிய சூழல் இருக்கும்.

    அப்படியான ஊழியர்களுக்கு இந்த ஆட்டோமேஷன் மற்றும் AI கருவிகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்." எனத் தெரிவித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    வணிகம்
    செயற்கை நுண்ணறிவு
    சாட்ஜிபிடி

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    வணிகம்

    அதே சரிவில் நீட்டிக்கும் தங்கம் விலை - இன்றைய நிலவரம்!  தங்கம் வெள்ளி விலை
    தொடர்ச்சியாக சரிவிலேயே இருக்கும் தங்கம் விலை - இன்றைய நிலவரம்!  வணிக செய்தி
    நெருங்கிய அட்ச திரிதியை... மீண்டும் உச்சத்திற்கு சென்ற தங்கம் விலை!  வணிக செய்தி
    புதிய மைல்கல்லை எட்டிய ITC நிறுவனம்! பங்குச் சந்தை

    செயற்கை நுண்ணறிவு

    இனி வாட்ஸ்அப்பிலும் ChatGPT - பயன்படுத்துவது எப்படி? சாட்ஜிபிடி
    OpenAI நிறுவனத்துக்கு போட்டியாக புதிய chatbotஐ களமிறக்க ஊழியர்களை பணியில் அமர்த்திய எலான் மஸ்க் எலான் மஸ்க்
    அபாயம்: AI மூலம் போலி LinkedIn சுயவிவரத்தை பயன்படுத்தி நிதியுதவி! ட்விட்டர்
    செயற்கை நுண்ணறிவுச் செயலிமூலம் உருவாக்கப்பட்ட பெண் - வைரல்! ட்விட்டர்

    சாட்ஜிபிடி

    சாட்ஜிபிடி-யை சமாளிக்க கூகுள் Bard AIஐ அறிமுகம் செய்த சுந்தர் பிச்சை! தொழில்நுட்பம்
    பகவத் கீதை அடிப்படையில் கீதா GPT-யை உருவாக்கிய கூகுள் ஊழியர்! இந்தியா
    கூகுளுக்கு போட்டியா? அறிமுகமாகும் மைக்ரோசாஃப்ட்டின் Bing இந்தியா
    கூகுளின் 'Live from Paris' அட்டகாசமான AI அம்சம் அறிமுகம்! கூகுள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025