NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தபால்துறையில் பணிக்கு விண்ணப்பித்து 28 ஆண்டுகளுக்கு பின்னர் வேலைவாய்ப்பு பெற்ற நபர்
    அடுத்த செய்திக் கட்டுரை
    தபால்துறையில் பணிக்கு விண்ணப்பித்து 28 ஆண்டுகளுக்கு பின்னர் வேலைவாய்ப்பு பெற்ற நபர்
    தபால்துறையில் பணிக்கு விண்ணப்பித்து 28 ஆண்டுகளுக்கு பின்னர் வேலைவாய்ப்பு பெற்ற நபர்

    தபால்துறையில் பணிக்கு விண்ணப்பித்து 28 ஆண்டுகளுக்கு பின்னர் வேலைவாய்ப்பு பெற்ற நபர்

    எழுதியவர் Nivetha P
    Oct 26, 2023
    12:58 pm

    செய்தி முன்னோட்டம்

    கடந்த 1995ம்.,ஆண்டு தபால்துறை உதவியாளர் பணிக்கான விண்ணப்பத்தினை அங்குர் குப்தா என்பவர் பதிவுச்செய்துள்ளார்.

    அதன்படி அவர் புதுமுக பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டார் என்று கூறப்படுகிறது.

    ஆனால் 'இன்டர்மீடியேட்' படிப்பினை தொழிற்கல்வி பாடமுறையில் முடித்துள்ளார் என்னும் காரணத்திற்காக அவரது பெயர் 'மெரீட்' பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

    இதனைத்தொடர்ந்து தன்னைப்போல இந்த நடவடிக்கையினால் பாதிக்கப்பட்ட சிலரோடு இணைந்து மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் அங்குர் குப்தா வழக்கு தொடர்ந்துள்ளார்.

    அதற்கான தீர்ப்பு இவர்களுக்கு ஆதரவாக கடந்த 1999ம்.,ஆண்டு வெளியானது.

    ஆனால் அத்தீர்ப்பினை எதிர்த்து 2000ம்.,ஆண்டு தபால்துறை சார்பில் அலகாபாத் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

    அந்த மனு 2017ம்.,ஆண்டு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

    இதனை எதிர்த்து மீண்டும் 2021ம்.,ஆண்டில் மறுஆய்வு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவையும் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

    வழக்கு 

    ஒரு மாதத்திற்குள் பணி நியமனம் செய்யப்பட வேண்டும் - நீதிபதிகள் 

    அதன்பின்னர் தபால் துறை இது குறித்த மேல்முறையீட்டு மனுவினை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

    இதன் மீதான விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், நேற்று(அக்.,26) உச்ச நீதிமன்றம் நீதிபதிகள் இந்த வழக்கினை தள்ளுபடி செய்துள்ளனர்.

    அதுமட்டுமின்றி அப்துர் குப்தாவிற்கு பணி வழங்கவேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

    மேலும் நீதிபதிகள், 'பணி நியமனத்தினை வகுக்கப்பட்ட உரிமையாக கோர முடியாது' என்றும்,

    'ஆனால் ஒருமுறை அவரது பெயர் 'மெரிட்'பட்டியலில் இடம்பெற்ற பின்னர் எவ்வித சரியான காரணமுமின்றி தனிச்சையாக எந்தவொரு நிறுவனமும் அவரது பெயரினை நீக்க முடியாது' என்றும் கூறியுள்ளனர்.

    அதனைத்தொடர்ந்து, 'ஒருமாத காலத்திற்குள் அவரை பணியில் நியமிக்கவேண்டும்'.

    'அதன்பின்னர் அவரது பணித்திறனில் திருப்தியில்லையென்றால் அவரது பணியினை நிரந்தரமாக்காமல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்' என்றும் கூறப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உயர்நீதிமன்றம்
    உச்ச நீதிமன்றம்

    சமீபத்திய

    ஆப்பிள் ஏர்ப்ளே பிழை, ஐபோன்களை ஹேக் செய்யக்கூடியதாக ஆக்குகிறதாம்: எவ்வாறு பாதுகாப்பது?  ஆப்பிள்
    இந்த ஹோண்டா ஸ்கூட்டரின் விலை ₹12 லட்சம்: அதன் அம்சங்களை தெரிந்துகொள்ளுங்கள் ஹோண்டா
    உங்கள் ஆர்டர்களை, ட்ரோன்கள் மூலம் ஒரு மணி நேரத்தில் டெலிவரி செய்யும் அமேசான் அமேசான்
    உலக சுகாதார நிறுவனம் முதன்முதலில் தொற்றுநோய் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்கிறது- அதன் அர்த்தம்? தொற்று நோய்

    உயர்நீதிமன்றம்

    மரணதண்டனை மனு விசாரணை: யாசின் மாலிக்கை ஒசாமா பின்லேடனுடன் ஒப்பிட்ட NIA இந்தியா
    ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு புதிய உத்தரவு பிறப்பிக்க தேவையில்லை - மதுரை உயர்நீதிமன்றம் தமிழ்நாடு
    சடலங்களுடன் உடலுறவு கொள்வதற்கு எதிராக சட்டம் இயற்றப்பட வேண்டும்: உயர்நீதிமன்றம் இந்தியா
    வனப் பாதுகாப்பு மசோதா தமிழ் மொழியில் வெளியிடப்படும்: மத்திய அரசு  இந்தியா

    உச்ச நீதிமன்றம்

    தமிழகத்திற்கு 5,000 கன அடி நீர் திறப்பு - காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு தமிழ்நாடு
    ஜம்மு காஷ்மீர் தேர்தலுக்கு எப்போது வேண்டுமானாலும் தயார்: உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்த மத்திய அரசு ஜம்மு காஷ்மீர்
    ஸ்டர்லைட் வழக்கு - வேதாந்தா நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் தூத்துக்குடி
    செல்லாத திருமணங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கும் இனி பெற்றோர்களின் சொத்துக்களில் உரிமை உண்டு  சட்டம் பேசுவோம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025