NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்தியாவின் காடுகள் மற்றும் மரங்களின் பரப்பளவு 25.17% ஆக அதிகரிப்பு; IFSR அறிக்கையில் தகவல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவின் காடுகள் மற்றும் மரங்களின் பரப்பளவு 25.17% ஆக அதிகரிப்பு; IFSR அறிக்கையில் தகவல்
    இந்தியாவின் காடுகள் மற்றும் மரங்களின் பரப்பளவு 25.17% ஆக அதிகரிப்பு

    இந்தியாவின் காடுகள் மற்றும் மரங்களின் பரப்பளவு 25.17% ஆக அதிகரிப்பு; IFSR அறிக்கையில் தகவல்

    எழுதியவர் Sekar Chinnappan
    Dec 21, 2024
    03:30 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவின் மொத்த காடுகள் மற்றும் மரங்களின் பரப்பளவு 1,445 சதுர கி.மீ அதிகரித்துள்ளது. இப்போது நாட்டின் புவியியல் பகுதியில் காடுகள் மற்றும் மரங்களின் பரப்பளவு 25.17% ஆக உள்ளது.

    இந்திய நாட்டு வன அறிக்கை 2023 யின்படி (ISFR) இந்த தகவல் வெளியாகியுள்ளது.

    இது பாரிஸ் ஒப்பந்தத்தின் கீழ் இந்தியாவின் காலநிலை இலக்குகளில் குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது.

    2005 ஆம் ஆண்டின் அளவைக் காட்டிலும் கூடுதளாக 2.29 பில்லியன் டன்கள் கார்பன் குறைப்பை இந்தியா உருவாக்கியுள்ளது.

    2030 ஆம் ஆண்டுக்குள் 2.5-3 பில்லியன் டன் கார்பன் சிங்க்கை அடைவதற்கான இலக்கை நெருங்கி வருகிறது என்பதை அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.

    பரப்பளவு

    காடுகள் மற்றும் மரங்களின் பரப்பளவு

    மொத்த காடுகளின் பரப்பளவு அதிகரித்தது. 2023ஆம் ஆண்டு அறிக்கையின்படி, 156 சதுர கிமீ அதிகரித்து 7,15,343 சதுர கிமீ ஆக நிலப்பரப்பில் 21.76% ஆக உள்ளது.

    புவியியல் பகுதியில், மரங்களின் பரப்பளவு 1,289 சதுர கிமீ அதிகரித்து, நிலப்பரப்பில் 3.41% ஆக உள்ளது.

    சத்தீஸ்கர் (684 சதுர கி.மீ.), உத்தரப்பிரதேசம் (559 சதுர கி.மீ.) மற்றும் மிசோரம் (242 சதுர கி.மீ.) ஆகியவை காடுகள் மற்றும் மரங்களின் பரப்பளவு அதிகரிப்புக்கு முக்கிய பங்காற்றுகின்றன.

    இருப்பினும், வடகிழக்கு மண்டலம் மொத்தமாக 327.30 சதுர கி.மீ. சரிவைக் கண்டது.

    இது பிராந்திய சவால்களை பிரதிபலிக்கிறது. மத்தியப் பிரதேசம் மொத்த காடு மற்றும் மரங்களின் பரப்பில் முன்னணியில் உள்ளது.

    லட்சத்தீவுகள்

    லட்சத்தீவுகள் முதல் இடம்

    அதே சமயம் லட்சத்தீவுகள் அதன் புவியியல் பரப்பளவில் (91.33%) காடுகளின் பரப்பில் மிக உயர்ந்த இடத்தில் உள்ளது.

    மொத்த மூங்கில்-தாங்கும் பகுதியும் 5,227 சதுர கிமீ விரிவடைந்தது, இது பல்வேறு சுற்றுச்சூழல் முன்னேற்றத்தைக் காட்டுகிறது.

    இந்த ஆதாயங்கள் இருந்தபோதிலும், சதுப்புநிலப் பரப்பில் 7.43 சதுர கிமீ சரிவு மற்றும் மிதமான அடர்ந்த மற்றும் திறந்த வன வகைகளில் இழப்புகள் உட்பட கவலைகள் தொடர்கின்றன.

    தேசிய வனக் கொள்கையின் இலக்கான 33% கவரேஜை பூர்த்தி செய்வதற்கான தொடர்ச்சியான முயற்சிகளின் அவசியத்தை அறிக்கை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    காடு
    சுற்றுச்சூழல்

    சமீபத்திய

    நேபாளத்திற்கு 15 டாடா கர்வ்வ் மின்சார கார்களை பரிசாக வழங்கியது இந்தியா; எதற்காக தெரியுமா? மின்சார வாகனம்
    85 மில்லியன் பாகிஸ்தான் சைபர் அச்சுறுத்தல்களைத் தடுத்ததாக கூறும் கேரள ஸ்டார்ட் அப் சைபர் பாதுகாப்பு
    பண மோசடி வழக்கில் குஜராத் சமாச்சார் பத்திரிகையின் உரிமையாளரை கைது செய்தது அமலாக்கத்துறை அமலாக்கத்துறை
    கோடிங் எழுத ஏஐ இருக்க பொறியாளர்கள் எதற்கு? 6,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்தது மைக்ரோசாஃப்ட் மைக்ரோசாஃப்ட்

    இந்தியா

    என்ஜின் கன்ட்ரோல் யூனிட்டில் குறைபாடு; இந்தியாவில் மேபேக் எஸ்-கிளாஸ் மாடல் கார்களை திரும்பப் பெறுகிறது மெர்சிடிஸ்-பென்ஸ் மெர்சிடீஸ்-பென்ஸ்
    பெரியாரின் கொள்கை வழியில் கடைசிவரை நின்ற தலைவர்; ஈவிகேஎஸ் மறைவுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் காங்கிரஸ்
    ககன்யான் மனித விண்வெளிப் பயணத் திட்டத்திற்கான புதிய மைல்கற்களை எட்டியது இஸ்ரோ  ககன்யான்
    15,500 கோடிக்கும் மேல் அதிகமான பரிவர்த்தனைகள்; 2024இல் அசுர வளர்ச்சி கண்ட யுபிஐ யுபிஐ

    காடு

    சர்வதேச புலிகள் தினம்: புலிகள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்  வாழ்க்கை

    சுற்றுச்சூழல்

    கிரேட்டா துன்பெர்கின் பதிவால் கைதானார் பாக்ஸர் ஆண்ட்ரூ டேட் - 9 மாதங்களாக போலீசாரால் தேடப்பட்டவர் உலக செய்திகள்
    நிபுணர்கள் பரிந்துரைக்கும் ஈக்கோ ஃபிரெண்ட்லி பர்னிச்சர் உபயோகிப்பதனால் ஏற்படும் நன்மைகள்! ஆரோக்கியம்
    9 லட்சம் வாகனங்களுக்கு ஏப்ரல் 1 முதல் தடை - நிதின் கட்கரி அறிவிப்பு நிதின் கட்காரி
    ஸ்டார்ட்-அப் துறையில் 3வது இடத்தில் இந்தியா - என்னென்ன முன்னேற்றங்கள்? தொழில்நுட்பம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025