LOADING...
பாகிஸ்தான்-சவுதி அரேபியா பாதுகாப்பு ஒப்பந்தத்தை ஆய்வு செய்வதாக இந்திய வெளியுறவுத்துறை அறிவிப்பு
பாகிஸ்தான்-சவுதி பாதுகாப்பு ஒப்பந்தத்தை ஆய்வு செய்வதாக இந்தியா அறிவிப்பு

பாகிஸ்தான்-சவுதி அரேபியா பாதுகாப்பு ஒப்பந்தத்தை ஆய்வு செய்வதாக இந்திய வெளியுறவுத்துறை அறிவிப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Sep 18, 2025
12:25 pm

செய்தி முன்னோட்டம்

பாகிஸ்தான் மற்றும் சவுதி அரேபியா இடையே சமீபத்தில் கையெழுத்தான மூலோபாய பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தை (Strategic Mutual Defence Agreement) இந்தியா உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக அறிவித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, இரு நாடுகளில் ஒன்று தாக்கப்படும்பட்சத்தில், அது மற்றொன்றின் மீதான தாக்குதலாகக் கருதப்படும். சவுதி அரேபியாவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீஃப், இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். சில தகவல்களின்படி, இந்த ஒப்பந்தம் பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை சவுதி அரேபியா பயன்படுத்துவதற்கான வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தின் நோக்கம், எந்தவொரு தாக்குதலுக்கும் எதிராகப் பரஸ்பர பாதுகாப்பை வலுப்படுத்துவதே என்று சவுதி பிரஸ் ஏஜென்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவாதம்

நீண்ட காலமாக ஒப்பந்தம் விவாதத்தில் இருந்ததாகத் தகவல்

இந்த ஒப்பந்தம் குறித்து, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் பதிலளிக்கையில், "இந்த ஒப்பந்தம் நீண்டகாலமாக இரு நாடுகளுக்கும் இடையே விவாதிக்கப்பட்டு வந்தது இந்தியாவுக்குத் தெரியும்" என்றார். "இந்த ஒப்பந்தம் இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு, பிராந்திய மற்றும் உலகளாவிய ஸ்திரத்தன்மை ஆகியவற்றில் ஏற்படுத்தும் தாக்கங்களை நாங்கள் ஆய்வு செய்வோம்" என்று அவர் தெரிவித்தார். மேலும், இந்தியாவின் தேசிய நலன்களைப் பாதுகாப்பதில் அரசு உறுதிபூண்டுள்ளது என்றும் அவர் கூறினார். தோஹாவில் சமீபத்தில் நடைபெற்ற மாநாட்டில், பாகிஸ்தான் உள்ளிட்ட 40 இஸ்லாமிய நாடுகள் நேட்டோ போன்ற ஒரு கூட்டணியை உருவாக்குவதற்கு அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது.