இந்தியாவில் 4 ஆயிரத்தை தாண்டிய கொரோனா: 15 பேர் உயிரிழப்பு
நேற்று(ஏப்-4) 3,641ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 4,435ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 4,435 புதிய கொரோனா பாதிப்புகளை இந்தியா பதிவுசெய்துள்ள நிலையில், ஆறு மாதங்களுக்கு பின் கொரோனாவின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதுவரை, இந்தியாவில் 4.47 கோடி(4,47,33,719) கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், நாட்டின் செயலில் உள்ள கொரோனா 23,091 ஆக உயர்ந்துள்ளது. இது மொத்த தொற்றுநோய்களில் 0.05 சதவீதமாகும். சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, சட்டிஸ்கர், புதுச்சேரி, ஹரியானா, குஜராத், டெல்லி, கர்நாடகா மற்றும் ராஜஸ்தானில் தலா 1 உயிரிழப்பும், மஹாராஷ்டிராவில் 4 இறப்புகளும், கேரளாவில் 5 உயிரிழப்புகளும் நேற்று பதிவாகி இருக்கிறது. கொரோனாவால் இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகள் 5,30,916 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்புகள் மற்றும் தடுப்பூசிகளின் புள்ளிவிவரங்கள்
கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,41,79,712 ஆக உயர்ந்துள்ளது. தினசரி கொரோனா நேர்மறை விகிதம் 3.38 சதவீதமாகவும், வாராந்திர நேர்மறை விகிதம் 2.79 சதவீதமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேசிய கொரோனா மீட்பு விகிதம் 98.76 சதவீதமாகவும், இறப்பு விகிதம் 1.19 சதவீதமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,31,086 கொரோனா சோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. இதுவரை 220,66,16,373 கோடி கோவிட் தடுப்பூசிகள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சகத்தின் இணையதள தரவுகள் கூறுகின்றன. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 1,979 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.