NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்தியாவில் 4 ஆயிரத்தை தாண்டிய கொரோனா: 15 பேர் உயிரிழப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவில் 4 ஆயிரத்தை தாண்டிய கொரோனா: 15 பேர் உயிரிழப்பு
    இதுவரை, இந்தியாவில் 4.47 கோடி(4,47,33,719) கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்தியாவில் 4 ஆயிரத்தை தாண்டிய கொரோனா: 15 பேர் உயிரிழப்பு

    எழுதியவர் Sindhuja SM
    Apr 05, 2023
    01:53 pm

    செய்தி முன்னோட்டம்

    நேற்று(ஏப்-4) 3,641ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 4,435ஆக அதிகரித்துள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் 4,435 புதிய கொரோனா பாதிப்புகளை இந்தியா பதிவுசெய்துள்ள நிலையில், ஆறு மாதங்களுக்கு பின் கொரோனாவின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

    இதுவரை, இந்தியாவில் 4.47 கோடி(4,47,33,719) கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    மேலும், நாட்டின் செயலில் உள்ள கொரோனா 23,091 ஆக உயர்ந்துள்ளது. இது மொத்த தொற்றுநோய்களில் 0.05 சதவீதமாகும்.

    சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, சட்டிஸ்கர், புதுச்சேரி, ஹரியானா, குஜராத், டெல்லி, கர்நாடகா மற்றும் ராஜஸ்தானில் தலா 1 உயிரிழப்பும், மஹாராஷ்டிராவில் 4 இறப்புகளும், கேரளாவில் 5 உயிரிழப்புகளும் நேற்று பதிவாகி இருக்கிறது.

    கொரோனாவால் இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகள் 5,30,916 ஆக உயர்ந்துள்ளது.

    இந்தியா

    கொரோனா பாதிப்புகள் மற்றும் தடுப்பூசிகளின் புள்ளிவிவரங்கள்

    கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,41,79,712 ஆக உயர்ந்துள்ளது.

    தினசரி கொரோனா நேர்மறை விகிதம் 3.38 சதவீதமாகவும், வாராந்திர நேர்மறை விகிதம் 2.79 சதவீதமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    தேசிய கொரோனா மீட்பு விகிதம் 98.76 சதவீதமாகவும், இறப்பு விகிதம் 1.19 சதவீதமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் 1,31,086 கொரோனா சோதனைகள் நடத்தப்பட்டுள்ளது.

    இதுவரை 220,66,16,373 கோடி கோவிட் தடுப்பூசிகள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சகத்தின் இணையதள தரவுகள் கூறுகின்றன. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 1,979 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    கொரோனா

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    இந்தியா

    மாட்ரிட் ஸ்பெயின் மாஸ்டர்ஸ் காலிறுதியில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் அதிர்ச்சித் தோல்வி இந்திய அணி
    சிலிண்டர் விலை அதிரடி குறைப்பு - எவ்வளவு தெரியுமா? தொழில்நுட்பம்
    எகிறிய வேகத்தில் இறங்கிய தங்கம் விலை - இன்றைய நாளின் விலை விபரங்கள் தங்கம் வெள்ளி விலை
    இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு - 24 மணிநேரத்தில் 2,994 புதிய தொற்றுகள் பதிவு கொரோனா

    கொரோனா

    நாசல் கொரோனா தடுப்பூசி-இலவசமாக வழங்க மத்திய அரசுக்கு தமிழக அரசு வலியுறுத்தல் கோவிட் தடுப்பூசி
    இந்தியாவில் புதிதாக 80 பேருக்கு கொரோனா தொற்று உறுதி இந்தியா
    உலகின் முதல் நாசல் கொரோனா தடுப்பூசி குறித்து பாரத் பயோடெக் நிறுவன தலைவர் கோவிட் தடுப்பூசி
    கொரோனா ஊரடங்கின்போது அரசு ஊழியர்கள் பணிக்கு வராதகாலம் பணிகாலமாக கருதப்படும் தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025