இந்தியாவில் ஒரே நாளில் 2,109 கொரோனா பாதிப்பு: 8 பேர் உயிரிழப்பு
செய்தி முன்னோட்டம்
நேற்று(மே-9) 1,331ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 2,109 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் செயலில் உள்ள கொரோனா 21,406 ஆக சரிவடைந்துள்ளது. இது மொத்த தொற்றுநோய்களில் 0.05 சதவீதமாகும்.
இதுவரை, இந்தியாவில் 4.49 கோடி (4,49,74,909) கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.
கொரோனாவால் இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகள் 5,31,722 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணிநேரதத்தில் மட்டும் 8 இறப்புகள் பதிவாகியுள்ளன.
பெரும்பாலான கொரோனா பாதிப்புகள் கேரளா, டெல்லி, மகாராஷ்டிரா, ஹரியானா, உத்தரபிரதேசம், தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் ராஜஸ்தான் ஆகிய எட்டு மாநிலங்களில் பதிவாகியுள்ளன.
details
கொரோனா பாதிப்புகள் மற்றும் தடுப்பூசிகளின் புள்ளிவிவரங்கள்
இந்தியாவில் மே 8ஆம் தேதி 1,839 பாதிப்புகளும், மே 7ஆம் தேதி 2,380 பாதிப்புகளும், மே 5ஆம் தேதி 3,611 பாதிப்புகளும், மே 4ஆம் தேதி 3,962 பாதிப்புகளும், மே 3ஆம் தேதி 3,720 பாதிப்புகளும் பதிவாகி இருந்தன.
கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,44,21,781ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரதத்தில் மட்டும் 3,430 பேர் குணமடைந்துள்ளனர்.
தேசிய கொரோனா மீட்பு விகிதம் 98.77 சதவீதமாகவும், இறப்பு விகிதம் 1.18 சதவீதமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 1,59,454 கொரோனா சோதனைகள் நடத்தப்பட்டுள்ளது.
இதுவரை 220,66,84,570 கோவிட் தடுப்பூசிகள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சகத்தின் இணையதள தரவுகள் கூறுகின்றன. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 2,055 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.