NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்திய தூதரை குருத்வாராவிற்குள் நுழைய விடாததால் சர்ச்சை: ரிஷி சுனக்கை அணுகியது இந்திய அரசாங்கம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்திய தூதரை குருத்வாராவிற்குள் நுழைய விடாததால் சர்ச்சை: ரிஷி சுனக்கை அணுகியது இந்திய அரசாங்கம்
    ஸ்காட்லாந்தில் உள்ள குருத்வாராவுக்கு சென்றிருந்த துரைசாமியை தீவிர சீக்கியர்கள் தடுத்து நிறுத்தினர்.

    இந்திய தூதரை குருத்வாராவிற்குள் நுழைய விடாததால் சர்ச்சை: ரிஷி சுனக்கை அணுகியது இந்திய அரசாங்கம்

    எழுதியவர் Sindhuja SM
    Sep 30, 2023
    01:49 pm

    செய்தி முன்னோட்டம்

    இங்கிலாந்துக்கான இந்திய தூதர் விக்ரம் துரைசாமி, ஸ்காட்லாந்தில் உள்ள குருத்வாராவுக்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தப்பட்டது குறித்து இந்திய அரசாங்கம் இங்கிலாந்து அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளது.

    பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டது தொடர்பாக இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே மோதல் நடந்து வரும் நிலையில் ஒரு இந்திய தூதருக்கு ஸ்காட்லாந்தில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

    ஆல்பர்ட் டிரைவில் உள்ள கிளாஸ்கோ குருத்வாராவின் குருத்வாரா கமிட்டி உறுப்பினர்களுடன் விக்ரம் துரைசாமி சந்திப்பதாக இருந்தது.

    அந்த சந்திப்பிற்காக ஸ்காட்லாந்தில் உள்ள குருத்வாராவுக்கு சென்றிருந்த துரைசாமியை தீவிர சீக்கியர்கள் தடுத்து நிறுத்தினர்.

    இந்திய தூதரை ஸ்காட்லாந்து குருத்வாராவிற்கு வெளியே தடுத்து நிறுத்திய அந்த தீவிர பிரிட்டிஷ் சீக்கிய ஆர்வலர்கள் குழு, அவர் அங்கு "வரவேற்கப்படவில்லை" என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    டுவ்க்ஜ்

    இங்கிலாந்து வெளியுறவு அலுவலகத்தை தொடர்பு கொண்ட இந்தியா 

    மேலும், அவரை குருத்வாராவுக்குள் நுழைய விடாமல் தடுத்த சில காலிஸ்தான் சார்பு தீவிர சீக்கியர்கள், "இங்கிலாந்தில் உள்ள எந்த குருத்வாராவிலும் இந்திய அதிகாரிகளுக்கு அனுமதி இல்லை" என்று தெரிவித்துள்ளனர்.

    குருத்வாராவுக்குள் நுழைய விடாமல் துரைசாமியை தீவிர சீக்கிய ஆர்வலர்கள் தடுத்தபோது ஸ்காட்லாந்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    குருத்வாராவின் கமிட்டி உறுப்பினர்களும் தூதுவர் விக்ரம் துரைசாமி பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய முயன்றனர்.

    இந்த சர்ச்சைக்குரிய விவகாரத்தை இங்கிலாந்து வெளியுறவு அலுவலகத்திடம் தற்போது இந்தியா எடுத்துக் கூறியுள்ளது.

    இதற்கு இங்கிலாந்து வெளியுறவுத்துறை என்ன பாதிலளித்தது என்பது குறித்த தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இங்கிலாந்து
    பிரிட்டன்
    இந்தியா
    உலகம்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    இங்கிலாந்து

    ரோல்ஸ் ராய்ஸ் உருவாக்கிய பிரத்தியேகமான 'கோஸ்ட்' மாடல் கார்.. என்ன ஸ்பெஷல் தெரியுமா?  கார்
    இந்து எதிர்ப்பு மற்றும் இந்து வெறுப்பு பிரிட்டிஷ் பள்ளிகளில் அதிகரிக்கிறதா  இந்தியா
    பயங்கரவாதத்திற்கு நிதி அளித்ததற்காக லண்டனில் கைது செய்யப்பட்ட தமிழர் லண்டன்
    இங்கிலாந்து துணைப் பிரதமர் டொமினிக் ராப் ராஜினாமா செய்தார்  யுகே

    பிரிட்டன்

    துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் இருந்து ஆண்டி முர்ரே விலகல் விளையாட்டு
    பாதுகாப்பைக கருதி டிக்டாக் ஆப் நியூசிலாந்திலும் தடை - அதிரடி உத்தரவு மொபைல் ஆப்ஸ்
    ஜாலியன் வாலாபாக் படுகொலை: தெரிந்ததும் தெரியாததும்- பாகம் 1 இந்தியா
    ஜாலியன் வாலாபாக் படுகொலை: தெரிந்ததும் தெரியாததும்- பாகம் 2 இந்தியா

    இந்தியா

    பாய்மர படகில் பதக்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்த விஷ்ணு சரவணனின் பின்னணி ஆசிய விளையாட்டுப் போட்டி
    இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதுகளுக்கு டோவினோ தாமஸின் '2018' திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது ஆஸ்கார் விருது
    துப்பாக்கிச் சுடுதலுக்காக மருத்துவ படிப்பை பாதியில் விட்ட தங்க மங்கை சாம்ரா; சுவாரஸ்ய பின்னணி துப்பாக்கிச் சுடுதல்
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: செப்டம்பர் 27 தங்கம் வெள்ளி விலை

    உலகம்

    வீடியோ: போர்ச்சுகல் தெருக்களில் ஆறாக ஓடிய 2.2 மில்லியன் லிட்டர் ஒயின்  போர்ச்சுகல்
    லிபியா: நாட்டையே திருப்பி போட்ட வெள்ளத்தால் 2000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சோகம் லிபியா
    ரஷ்ய வாகன உற்பத்தியாளர்களிடம் இந்தியாவை உதாரணம் காட்டி பாராட்டிய ரஷ்ய அதிபர் புதின்  ரஷ்யா
    சீன ஜி20 குழுவின் பைகளில் சந்தேகத்திற்குரிய உபகரணங்கள் இருந்ததால் பரபரப்பு டெல்லி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025