இந்தியாவில் ஒரே நாளில் 33 கொரோனா பாதிப்பு
நேற்று(ஜூன் 26) 47ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 33ஆக குறைந்துள்ளது. கொரோனா பரவ தொடங்கிய பிறகு இன்று தான் மிக குறைவான வழக்குகள் பதிவாகி இருக்கிறது. இந்தியாவில் செயலில் உள்ள கொரோனா 1,606 ஆக சரிவடைந்துள்ளது. இது மொத்த தொற்றுநோய்களில் 0.00 சதவீதமாகும். இதுவரை, இந்தியாவில் 4.49 (4,49,94,032) கோடி கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகள் 5,31,903ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரதத்தில் ஒரு உயிரிழப்பும் பதிவாகவில்லை. கேரளா, தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா ஆகிய மூன்று தென் மாநிலங்களும் 2020-21 ஆம் ஆண்டில் சிறப்பாக கோவிட் சூழ்நிலையை கையாண்டதாக NITI ஆயோக்கின் வருடாந்திர 'சுகாதாரக் குறியீடு' கூறியுள்ளது.
கொரோனா பாதிப்புகள் மற்றும் தடுப்பூசிகளின் புள்ளிவிவரங்கள்
இந்தியாவில் ஜூன் 25ஆம் தேதி 80 பாதிப்புகளும் ஜூன் 23ஆம் தேதி 51 பாதிப்புகளும், ஜூன் 22ஆம் தேதி 95 பாதிப்புகளும், ஜூன் 21ஆம் தேதி 92 பாதிப்புகளும், ஜூன் 20ஆம் தேதி 36 பாதிப்புகளும் பதிவாகி இருந்தன. கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 44,460,523 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரதத்தில் மட்டும் 82 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா மீட்பு விகிதம் 98.81 சதவீதமாகவும், இறப்பு விகிதம் 1.18 சதவீதமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 57,408 கொரோனா சோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. இதுவரை 220.6 கோடி கோவிட் தடுப்பூசிகள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சகத்தின் இணையதள தரவுகள் கூறுகின்றன. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 359 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.