NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / வணிக கப்பல் தாக்குதல் விவகாரம்: 3 போர்க்கப்பல்களை அரபிக்கடலில் நிலைநிறுத்தியது இந்தியா 
    அடுத்த செய்திக் கட்டுரை
    வணிக கப்பல் தாக்குதல் விவகாரம்: 3 போர்க்கப்பல்களை அரபிக்கடலில் நிலைநிறுத்தியது இந்தியா 

    வணிக கப்பல் தாக்குதல் விவகாரம்: 3 போர்க்கப்பல்களை அரபிக்கடலில் நிலைநிறுத்தியது இந்தியா 

    எழுதியவர் Sindhuja SM
    Dec 26, 2023
    12:41 pm

    செய்தி முன்னோட்டம்

    சமீபத்தில், இந்தியப் பெருங்கடலில் பயணித்து கொண்டிருந்த எம்வி கெம் புளூட்டோ என்ற வணிகக் கப்பல் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது.

    இதனையடுத்து, இந்தியா தற்போது போர்க்கப்பல்களை அரபிக்கடலில் நிலைநிறுத்தியுள்ளது.

    அந்த தாக்குதல் சம்பவம் நடந்து இரண்டு நாட்கள் ஆகும் நிலையில், இன்று மும்பை துறைமுகத்திற்கு வந்து சேர்ந்த எம்வி கெம் புளூட்டோ கப்பலை இந்திய கடற்படையின் வெடிமருந்துகளை அகற்றும் குழு தீவிரமாக சோதனையிட்டது.

    அரபிக்கடலில் வணிகக் கப்பல்கள் நடத்தப்படும் தாக்குதல்களை கருத்தில் கொண்டு, அப்பகுதியை கண்காணிப்பதற்காக கடற்படை P-8I நீண்ட தூர ரோந்து விமானத்தை அரபிக்கடலில் நிலைநிறுத்தியுள்ளது.

    டக்ஜ்வ்

    எம்வி செம் புளூட்டோ மீது நடத்தப்பட்ட தாக்குதல் 

    அது போக, ஐஎன்எஸ் மோர்முகவோ, ஐஎன்எஸ் கொச்சி மற்றும் ஐஎன்எஸ் கொல்கத்தா ஆகிய போர்க்கப்பல்களையும் அரபிக்கடலுக்கு இந்திய கடற்படை அனுப்பியுள்ளது.

    சவுதி அரேபியாவில் உள்ள துறைமுகத்தில் இருந்து மங்களூரு நோக்கி கச்சா எண்ணெய் ஏற்றிச் சென்ற எம்வி செம் புளூட்டோவா கப்பல் மீது சில நாட்களுக்கு முன் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது.

    லைபீரியாவின் கொடியை ஏந்திய அந்த கச்சா எண்ணெய் டேங்கர் கப்பல் இஸ்ரேலை தளமாக கொண்டதாகும்.

    மேலும், ஈரான் ஆதரவு ஹவுதி போராளிகள் தான் இந்த தாக்குதலை நடத்தியதாக கூறப்படுகிறது.

    இஸ்ரேல்-ஹமாஸ் மோதலுக்கு மத்தியில் செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடாவில் ஈரான் ஆதரவு ஹவுதி போராளிகளால் வணிக கப்பல்கள் குறிவைக்கப்பட்டன என்று அமெரிக்கா கூறியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    ஈரான்
    உலகம்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    இந்தியா

    கூகுள் மேப்ஸ் சேவையில் புதிய வசதியை அறிமுகப்படுத்தும் கூகுள் கூகுள்
    தான் படித்த அரசுப் பள்ளியை தத்தெடுத்த காந்தாரா பட நடிகர் ரிஷப் ஷெட்டி அரசு பள்ளி
    சட்டபூர்வ நடவடிக்கைக்கு உறுதி: பன்னூன் படுகொலை சதி குற்றச்சாட்டுகள் குறித்து பிரதமர் மோடி பிரதமர் மோடி
    பார்டு AI-யில் தேர்தல் குறித்த தகவல்களைக் குறைக்கத் திட்டமிடும் கூகுள் கூகுள்

    ஈரான்

    ஈரான் போராட்டம்: பெண்களின் மார்பு, பிறப்புறுப்பை குறிவைத்து துப்பாக்கிச்சூடு உலகம்
    ஹிஜாப் போராட்டம்: இரண்டாவது தூக்கு தண்டனையை நிறைவேற்றிய ஈரான் உலகம்
    ஹிஜாப் அணியாததற்காக ஆஸ்கர் விருது பெற்ற நடிகைக் கைது! உலகம்
    சீனா-பிரச்சனைகளுக்கு நடுவே ஈரான் அதிபரை சந்தித்தார் சீன அதிபர் சீனா

    உலகம்

    சிங்கப்பூரில் 13 மாத குழந்தை கொரோனாவால் மரணம் சிங்கப்பூர்
    மெட்டாவின் செய்தித் தொடர்பாளரை தேடப்படும் நபர்கள் பட்டியலில் இணைத்த ரஷ்யா ரஷ்யா
    கிரேக்க தீவில் கப்பல் மூழ்கி விபத்து: 4 இந்தியர்கள் உட்பட 12 பணியாளர்கள் மாயம்  கிரீஸ்
    இந்திய தூதரை வழி மறித்து தகராறு செய்த காலிஸ்தான் ஆதரவாளர்கள்: நியூயார்க்கில் பரபரப்பு  அமெரிக்கா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025