NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க 'ஆபரேஷன் காவேரி' தொடங்கப்பட்டது 
    அடுத்த செய்திக் கட்டுரை
    சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க 'ஆபரேஷன் காவேரி' தொடங்கப்பட்டது 
    இந்த மீட்புப் பணிக்கு 'ஆபரேஷன் காவேரி' என்று பெயரிடப்பட்டுள்ளது.

    சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க 'ஆபரேஷன் காவேரி' தொடங்கப்பட்டது 

    எழுதியவர் Sindhuja SM
    Apr 24, 2023
    07:14 pm

    செய்தி முன்னோட்டம்

    போர்களமாக மாறியுள்ள சூடானில் சிக்கி இருக்கும் இந்தியர்களை மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ட்வீட் செய்துள்ளார்.

    இந்த மீட்புப் பணிக்கு 'ஆபரேஷன் காவேரி' என்று பெயரிடப்பட்டுள்ளது.

    "சூடானில் சிக்கித் தவிக்கும் நம் குடிமக்களை மீட்க 'ஆபரேஷன் காவேரி' நடந்து வருகிறது. ஏற்கனவே, சுமார் 500 இந்தியர்கள் போர்ட் சூடானை(நகரம்) அடைந்துள்ளனர். இன்னும் பலர் வந்து கொண்டிருக்கின்றனர். நம் கப்பல்கள் மற்றும் விமானங்கள் அவர்களை வீட்டிற்கு அழைத்து வர தயாராக இருக்கிறது. சூடானில் உள்ள நம் சகோதரர்கள் அனைவருக்கும் உதவ உறுதிபூண்டுள்ளோம்." என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ட்வீட் செய்திருக்கிறார்.

    DETAILS

    சூடானில் இருக்கும் அமெரிக்க தூதரகத்தின் செயல்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது

    ஜெட்டாவில்(நகரம்) விமானப்படை C-130J தயார் நிலையில் இருப்பதாகவும், INS சுமேதா போர்ட் சூடானை அடைந்துள்ளதாகவும் இந்தியா நேற்று அறிவித்திருந்தது.

    பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 150 க்கும் மேற்பட்டோர் சனிக்கிழமையன்று சவுதி அரேபியாவை அடைந்தனர். இது தான் சூடானில் நடந்த முதற்கட்ட மீட்பு பணியாகும். இந்தியா உட்பட 12 நாடுகளைச் சேர்ந்த மக்கள் அந்த குழுவில் இருந்தனர்.

    இன்று அதிகாலையில், இந்தியர்கள் உட்பட 28 நாடுகளை சேர்ந்த 388 பேரை பிரான்ஸ் வெளியேற்றியது.

    கார்ட்டூமில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் செயல்பாடுகள் "தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது" என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்தார்.

    சூடான் ராணுவத்திற்கும் துணை ராணுவ விரைவு ஆதரவுப் படைகளுக்கும்(RSF) இடையே நடந்து வரும் மோதல்களால் இதுவரை 413 பேர் உயிரிழந்துள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    வெளியுறவுத்துறை
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    EPFO 3.0: ஜூன் 2025இல் அமலுக்கு வரும் புதிய திட்டம்; விரைவில் கிளைம் பணத்தை ஏடிஎம்மிலேயே பெறலாம் வருங்கால வைப்பு நிதி
    பங்களாதேஷில் ஷேக் ஹசீனா மீது மனித குலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் பதிவு பங்களாதேஷ்
    வடகிழக்கு இந்தியாவில் பெய்துவரும் கனமழையால் 25 பேர் பலி; மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரம் கனமழை
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை

    இந்தியா

    இந்தியாவிலேயே சென்னை மாநகரம் தான் பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் - மு.க.ஸ்டாலின்  சென்னை
    பயங்கரவாதத்திற்கு நிதி அளித்ததற்காக லண்டனில் கைது செய்யப்பட்ட தமிழர் லண்டன்
    சூடனில் இருக்கும் இந்திய தூதரகத்திற்கு செல்ல வேண்டாம்: இந்திய அரசு எச்சரிக்கை  வெளியுறவுத்துறை
    மாணவர்களுக்கு நற்செய்தி! 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி!  புதுச்சேரி

    வெளியுறவுத்துறை

    நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கிக்கு உதவி செய்ய தயார்: பிரதமர் மோடி இந்தியா
    பெண்களுக்காக 50 மில்லியன் டாலர் நிதி வழங்குகிறார் ஹிலாரி கிளின்டன் இந்தியா
    துருக்கி நிலநடுக்கம்: ஒரு இந்தியரை காணவில்லை; 10 பேர் துருக்கியில் சிக்கி உள்ளனர் துருக்கி
    லிபியாவில் ஏஜென்டுகளால் அடிமைகளாக விற்கப்பட்டோம்: பஞ்சாப் இளைஞர்கள் இந்தியா

    உலகம்

    2026க்குள் 77 பில்லியன் டாலர் வெளிநாட்டு கடனை பாகிஸ்தான் அடைக்க வேண்டும் பாகிஸ்தான்
    பல்கலைகழகத்திற்குள் துப்பாக்கி சூடு: அமெரிக்காவில் பரபரப்பு உலக செய்திகள்
    ஹிஜாப் அணியாத பெண்களை கண்டறிவதற்கு பொது இடங்களில் கேமராக்களைப் பொருத்திய ஈரான் அரசு ஈரான்
    இமயமலையில் 570 மில்லியன் யானைகளின் எடைக்கு சமமான பனிப்பாறைகள் இழப்பு உலக செய்திகள்

    உலக செய்திகள்

    மலை காடுகள் மிக வேகமாக அழிந்து வருகிறது: ஆய்வில் தகவல் உலகம்
    குறைந்த விலைக்கு விற்கப்பட்ட கிரெடிட் சூயிஸ் நிறுவனம்: என்ன சொல்கிறார் உதய் கோடக் உலகம்
    இதுவே காலநிலை மாற்றத்தை தடுப்பதற்கான கடைசி வாய்ப்பு: ஐ.நா.வின் காலநிலை அறிக்கை உலகம்
    மீண்டும் அடையாளம் தெரியாத பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவிய வடகொரியா வட கொரியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025