NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க 'ஆபரேஷன் காவேரி' தொடங்கப்பட்டது 
    சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க 'ஆபரேஷன் காவேரி' தொடங்கப்பட்டது 
    இந்தியா

    சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க 'ஆபரேஷன் காவேரி' தொடங்கப்பட்டது 

    எழுதியவர் Sindhuja SM
    April 24, 2023 | 07:14 pm 1 நிமிட வாசிப்பு
    சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க 'ஆபரேஷன் காவேரி' தொடங்கப்பட்டது 
    இந்த மீட்புப் பணிக்கு 'ஆபரேஷன் காவேரி' என்று பெயரிடப்பட்டுள்ளது.

    போர்களமாக மாறியுள்ள சூடானில் சிக்கி இருக்கும் இந்தியர்களை மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ட்வீட் செய்துள்ளார். இந்த மீட்புப் பணிக்கு 'ஆபரேஷன் காவேரி' என்று பெயரிடப்பட்டுள்ளது. "சூடானில் சிக்கித் தவிக்கும் நம் குடிமக்களை மீட்க 'ஆபரேஷன் காவேரி' நடந்து வருகிறது. ஏற்கனவே, சுமார் 500 இந்தியர்கள் போர்ட் சூடானை(நகரம்) அடைந்துள்ளனர். இன்னும் பலர் வந்து கொண்டிருக்கின்றனர். நம் கப்பல்கள் மற்றும் விமானங்கள் அவர்களை வீட்டிற்கு அழைத்து வர தயாராக இருக்கிறது. சூடானில் உள்ள நம் சகோதரர்கள் அனைவருக்கும் உதவ உறுதிபூண்டுள்ளோம்." என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ட்வீட் செய்திருக்கிறார்.

    சூடானில் இருக்கும் அமெரிக்க தூதரகத்தின் செயல்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது

    ஜெட்டாவில்(நகரம்) விமானப்படை C-130J தயார் நிலையில் இருப்பதாகவும், INS சுமேதா போர்ட் சூடானை அடைந்துள்ளதாகவும் இந்தியா நேற்று அறிவித்திருந்தது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 150 க்கும் மேற்பட்டோர் சனிக்கிழமையன்று சவுதி அரேபியாவை அடைந்தனர். இது தான் சூடானில் நடந்த முதற்கட்ட மீட்பு பணியாகும். இந்தியா உட்பட 12 நாடுகளைச் சேர்ந்த மக்கள் அந்த குழுவில் இருந்தனர். இன்று அதிகாலையில், இந்தியர்கள் உட்பட 28 நாடுகளை சேர்ந்த 388 பேரை பிரான்ஸ் வெளியேற்றியது. கார்ட்டூமில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் செயல்பாடுகள் "தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது" என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்தார். சூடான் ராணுவத்திற்கும் துணை ராணுவ விரைவு ஆதரவுப் படைகளுக்கும்(RSF) இடையே நடந்து வரும் மோதல்களால் இதுவரை 413 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    இந்தியா
    வெளியுறவுத்துறை
    உலகம்
    உலக செய்திகள்

    இந்தியா

    இளம்பெண்ணுடன் சேர்ந்து க்யூட்டாக நடனமாடிய யானை - வைரல் வீடியோ!  ட்ரெண்டிங் வீடியோ
    அதிகரித்து வரும் இந்து எதிர்ப்பு: கனடா எதிர்க்கட்சி தலைவர் கண்டனம்  கனடா
    ஆஸ்திரேலியாவின் உயரிய சிவில் விருதை பெற்றார் ரத்தன் டாடா டாடா
    எப்போதும் சச்சினின் பிடித்தமான உணவு இதுதானாம்! ட்விட்டரில் பகிர்வு!  சச்சின் டெண்டுல்கர்

    வெளியுறவுத்துறை

    இருதரப்பு உறவுகளை புதுப்பிக்க இந்தியா வரவில்லை: பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்  இந்தியா
    சூடனில் இருக்கும் இந்திய தூதரகத்திற்கு செல்ல வேண்டாம்: இந்திய அரசு எச்சரிக்கை  இந்தியா
    காங்கிரஸ் தலைவர் சித்தராமையா மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு இடையிலான ட்விட்டர் சண்டை இந்தியா
    சூடான் பிரச்சனை: சூடானில் சிக்கி தவிக்கும் 31 இந்தியர்கள் இந்தியா

    உலகம்

    சூடான் சண்டையால் அதிகம் பாதிக்கப்படும் குழந்தைகள்: ஐநா  உலக செய்திகள்
    111 வருட பழமையான டைட்டானிக் கப்பலின் மெனு கார்டு வைரலாகிறது வைரல் செய்தி
    கொரோனா தாக்குதலால் அதிகரிக்கும் நீரழிவு நோய்: அதிர்ச்சி தரும் ஆராய்ச்சி தகவல் கொரோனா
    ஈகை திருநாள்: அதன் வரலாறும், அதை எப்படி கொண்டாடுகிறார்கள் என்பதையும் தெரிந்துகொள்வோம்! இந்தியா

    உலக செய்திகள்

    தனது சொந்த நகரத்தின் மீது 'தற்செயலாக' குண்டுகளை வீசிய ரஷ்யா ரஷ்யா
    இந்தியா வருகிறார் பாகிஸ்தான் அமைச்சர் பிலாவல் பூட்டோ  இந்தியா
    அடுத்தக்கட்ட பணிநீக்கத்தை அறிவித்த வால்ட் டிஸ்னி நிறுவனம் - ஊழியர்கள் அதிர்ச்சி! ஆட்குறைப்பு
    அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற இந்தியர்கள் - அதிர்ச்சி தகவல் அமெரிக்கா
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023