NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சுதந்திர தினவிழா ஒத்திகை - 3 நாட்களுக்கு போக்குவரத்தில் மாற்றம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    சுதந்திர தினவிழா ஒத்திகை - 3 நாட்களுக்கு போக்குவரத்தில் மாற்றம்
    சுதந்திர தினவிழா ஒத்திகை - 3 நாட்களுக்கு போக்குவரத்தில் மாற்றம்

    சுதந்திர தினவிழா ஒத்திகை - 3 நாட்களுக்கு போக்குவரத்தில் மாற்றம்

    எழுதியவர் Nivetha P
    Aug 02, 2023
    11:37 am

    செய்தி முன்னோட்டம்

    இந்தியா நாட்டின் 76வது சுதந்திர தினவிழா வரும் ஆகஸ்ட் 15ம் தேதி சென்னை தலைமை செயலகத்தில் மிக கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது.

    இதற்கான முன்னேற்பாடு பணிகள் துவங்கவுள்ள நிலையில் வரும் ஆகஸ்ட் 4, 10, 13 ஆகிய தேதிகளில் சுதந்திர தினவிழா ஒத்திகை நடக்கவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    குறிப்பிட்ட இந்த 3 நாட்களில் ஒத்திகை நிகழ்ச்சியானது காலை 6 மணி முதல் துவங்கி நடந்து முடியும் வரை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, சென்னை மெரினா அருகே நேப்பியர் பாலம் முதல் போர் நினைவு சின்னம் வரையிலான சாலையிலும், ராஜாஜி சாலை, காமராஜர் சாலை, கொடிமரச்சாலை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து தடை செய்யப்படும் என்று போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

    சாலை 

    போக்குவரத்தில் மாற்றம் குறித்த தகவல் 

    அதன்படி காமராஜர் சாலையிலிருந்து ராஜாஜி சாலை வழியே பாரிமுனை செல்லும் வாகனங்கள் அனைத்தும் சிவானந்த சாலை, அண்ணாசாலை, முத்துசாமி பாலம் வழியே திருப்பிவிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

    அதே போல், பாரிமுனையிலிருந்து ராஜாஜி சாலை மூலம் காமராஜர் சாலைக்கு செல்லும் வாகனங்கள் வடக்கு கோட்டை சாலையில் சென்று முத்துசாமி சாலை, பல்லவன் சாலை, இவிஆர் சாலை, அண்ணாசாலை, வாலாஜா சாலை வழி சென்று காமராஜர் சாலையினை அடையலாம்.

    தொடர்ந்து, அண்ணா சாலையில் இருந்து பாரிமுனை செல்லும் வாகனங்கள் வாலாஜா சிக்னல் சந்திப்பு, ராஜா அண்ணாமலை மன்றம், என்.எப்.எஸ். சாலை வழியே மாற்றி அனுப்பப்படும் என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    போக்குவரத்து காவல்துறை
    சென்னை

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்

    போக்குவரத்து காவல்துறை

    புதுச்சேரியில் இனி போக்குவரத்து விதிகளை மீறினால் இ-சலான் மூலம் அபராதம் - போக்குவரத்துத்துறை புதுச்சேரி
    சென்னையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த எஸ்.ஐ. மீது இரும்பு கம்பியால் தாக்குதல் சென்னை
    சென்னையில் நம்பர் பிளேட் விதிமீறல்களை கண்டறிந்து அபராதம் விதிக்கும் பணி துவக்கம் சென்னை
    சென்னையில் காவல் அதிகாரியை தாக்கிய வழக்கறிஞர் - பரபரப்பு சம்பவம் சென்னை

    சென்னை

    போலி மாதாந்திர பால் அட்டைகளை அகற்ற நடவடிக்கை - ஆவின் நிறுவனம் ஆவின்
    முதல் முறையாக, ஆப்பிரிக்காவின் தான்சானியாவில், சென்னை ஐஐடி! ஐஐடி
    சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி விலை மேலும் ரூ.30 அதிகரிப்பு  தமிழ்நாடு
    பள்ளிகளை சீரமைக்க சிங்கார சென்னை திட்டத்தின் கீழ் ரூ.50 கோடி ஒதுக்கீடு  சுற்றுலா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025