NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிப்பு - மா.சுப்ரமணியம் எச்சரிக்கை
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிப்பு - மா.சுப்ரமணியம் எச்சரிக்கை
    தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிப்பு - மா.சுப்ரமணியம்

    தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிப்பு - மா.சுப்ரமணியம் எச்சரிக்கை

    எழுதியவர் Nivetha P
    Mar 10, 2023
    02:22 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாட்டில் இன்ஃப்ளூயன்சா ஏ என்னும் வைரஸ் தொற்றால் காய்ச்சல் ஏற்பட்டு பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    இதனை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் மட்டும் 1000 இடங்களில் காய்ச்சல் முகாம்கள் அமைத்து நடத்தப்பட்டு வருகிறது.

    சென்னை மாநகராட்சியில் மட்டும் 200இடங்களில் காய்ச்சல் முகாம் நடக்கிறது.

    அந்தவகையில் சென்னை சைதாப்பேட்டை காய்ச்சல் தடுப்பு முகாமினை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் தொடங்கி வைத்துள்ளார்.

    அப்போது பேசியஅவர், இந்த முகாம்கள் மூலம் தமிழகத்தில் எத்தனைபேர் இந்த எச்3என்2 என்னும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை கண்டறியலாம்.

    அதன் பின்னர் இதனால் பாதிக்கப்பட்டோருக்கு உரிய சிகிச்சை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    இந்த வைரஸ் சமூக பரவல் தொற்றாக மாறும் முன்னரே இதனை கட்டுப்படுத்தவே இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    அமைச்சர் பேட்டி

    கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றினாலே இன்ஃப்ளூயன்சா ஏ வைரஸ் தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ளலாம்

    எனவே, பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்று கூறியுளளார்.

    தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் ஒமைக்ரான் வகை கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது என்று தெரிவித்தார்.

    ஒரு மாதத்துக்கு முன்னர் 2 பேருக்கு மட்டுமே இருந்த கொரோனா பாதிப்பு தற்போது 20 பேருக்கு மேலாக அதிகரித்துள்ளது.

    எனினும் இந்த வகை கொரோனா வைரஸால் பெரியளவில் பாதிப்பு ஏற்படுவதில்லை.

    அதனால் மக்கள் பதட்டம் அடைய தேவையில்லை. பொது இடங்களில் முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி, போன்றவற்றை பின்பற்றினால் நல்லது என்று அறிவுறுத்தியுள்ளார்.

    மேலும், கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றினாலே தற்போது பரவி வரும் இன்ஃப்ளூயன்சா ஏ என்னும் வைரஸ் தொற்றில் இருந்து தற்காத்து கொள்ள முடியும் என்றும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    கொரோனா
    சுகாதாரத் துறை
    சென்னை

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    தமிழ்நாடு

    கோயம்பத்தூர் வெள்ளையங்கிரி மலைப்பாதையில் ஏறிய முதியவர் ஒருவர் பலி கோவை
    கோயம்புத்தூரில் யானைகள் தாக்கி ஒரே நாளில் இரண்டு நபர்கள் அடுத்தடுத்து பலி கோவை
    தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பரவும் செய்தி போலியானது - காவல்துறை விளக்கம் காவல்துறை
    தமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு பதவி உயர்வு - விவரங்களை அனுப்புமாறு உத்தரவு தமிழக அரசு

    கொரோனா

    கொரோனா எப்படி பரவியது? உலக சுகாதார அமைப்புக்கு பதிலளிக்குமா சீனா? கோவிட்
    பிரதமர் மோடியை சந்தித்த இமாச்சல் முதல்வருக்கு கொரோனா! இந்தியா
    மீண்டும் கொரோனாவா? எச்சரிக்கும் மத்திய அரசு! இந்தியா
    இந்தியாவிற்குள் வந்த சீனாவில் பரவும் BF.7 கொரோனா! இந்தியா

    சுகாதாரத் துறை

    குட்கா தடை ரத்து: தமிழக அரசு மேல்முறையீடு சென்னை உயர் நீதிமன்றம்
    காவல்துறை அதிகாரியால் சுட்டுக் கொல்லப்பட்ட ஒடிசா அமைச்சர் நபா கிசோர் தாஸ் மாநிலங்கள்
    கேரளாவில் ஆன்லைன் மருத்துவ ஆலோசனை-அரசு பெண் மருத்துவர் முன் நிர்வாண போஸ் கொடுத்த வாலிபர் கைது கேரளா
    தமிழக சிறுமிகளுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி வழங்க நடவடிக்கை தமிழ்நாடு

    சென்னை

    சென்னை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை பெருமளவில் அதிகரிப்பு விமானம்
    மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் 2024ம் ஆண்டின் இறுதியில் துவங்கும் என அறிவிப்பு மதுரை
    'என்னுடைய அரசியல் எதிரி சாதி தான்' - கமல்ஹாசன் கமல்ஹாசன்
    சென்னை IITஇல் தற்கொலைக்கு முயன்ற 2 மாணவர்களில் ஒருவர் பலி தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025