NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஸ்ரீ நகரில் பிரதமர் அலுவலக உயரதிகாரி என கூறி இ இசட் பாதுகாப்போடு வந்தவர் கைது
    இந்தியா

    ஸ்ரீ நகரில் பிரதமர் அலுவலக உயரதிகாரி என கூறி இ இசட் பாதுகாப்போடு வந்தவர் கைது

    ஸ்ரீ நகரில் பிரதமர் அலுவலக உயரதிகாரி என கூறி இ இசட் பாதுகாப்போடு வந்தவர் கைது
    எழுதியவர் Nivetha P
    Mar 17, 2023, 03:26 pm 0 நிமிட வாசிப்பு
    ஸ்ரீ நகரில் பிரதமர் அலுவலக உயரதிகாரி என கூறி இ இசட் பாதுகாப்போடு வந்தவர் கைது
    ஸ்ரீ நகரில் பிரதமர் அலுவலக உயரதிகாரி என கூறி இ இசட் பாதுகாப்போடு வந்தவர் கைது

    பிரதமர் மோடியின் அலுவலக உயரதிகாரி என்று கூறி காஷ்மீர் ஸ்ரீ நகரில் இசட் பிளஸ் பாதுகாப்புடன் வந்தவர் குஜராத்தை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜம்மு காஷ்மீருக்கு இந்தாண்டில் இருமுறை சென்றுள்ள இந்த நபர் தான் பிரதமர் அலுவலகத்தில் கூடுதல் இயக்குனராக பணியாற்றி வருவதாக கூறியுள்ளார். இதனையடுத்து காஷ்மீர் மாநில நிர்வாகம் அங்குள்ள 5 நட்சத்திர விடுதியில் அவரை தங்க வைத்து உபசரித்ததோடு, குண்டு துளைக்காத காருடன் இசட் பிளஸ் பாதுகாப்பும் அளித்துள்ளது. அதன்படி முதல் முறை அங்கு சென்ற பொழுது, அவர் அம்மாநில அதிகாரிகளுடன் இணைந்து ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் துணை ராணுவ படையினர் பாதுகாப்போடு அவர் பல இடங்களை சுற்றிப்பார்க்க சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது.

    நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மோசடி நபர்

    குஜராத்தின் பாஜக பொதுசெயலாளர் திரு.பிரதீப் சிங் பகேலா உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ட்விட்டரில் இவர்களை பின்தொடர்பவர்களாக இருந்துள்ள நிலையில், அவர் இது தொடர்பான தகவல்களை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதனையடுத்து கடந்த 2ம் தேதி மீண்டும் அவர் ஸ்ரீ நகருக்கு வந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர் மீது சந்தேகமடைந்த மாவட்ட ஆட்சியர் புகாரளித்துள்ளார். அவர் அளித்த புகாரின்பேரில் அந்த நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பான விசாரணை மேற்கொண்ட நிலையில், அவர் பெயர் கிரண் பாய் பட்டேல் என்றும், அவர் குஜராத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. இந்த மோசடி நபர் கைதுசெய்யப்பட்ட விவகாரம் குறித்து தகவல் வெளியிடப்படாமல் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியப்போது தான் இதுகுறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    பிரதமர் மோடி
    ஜம்மு காஷ்மீர்

    சமீபத்திய

    ஐபிஎல் 2023 : முந்தைய சீசன்களில் பெற்ற படுதோல்வியிலிருந்து மீளுமா மும்பை இந்தியன்ஸ்? ஐபிஎல் 2023
    தமிழகத்தின் கடலூர் மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் 2 மணி நேரமாக கனமழை தமிழ்நாடு
    மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் : இந்தியாவின் நிகத் ஜரீன், நிது கங்காஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம் உலக கோப்பை
    "ஏ சாலா கப் நமதே" : இந்த முறையாவது ஐபிஎல் கோப்பை வெல்லுமா ஆர்சிபி? ஐபிஎல் 2023

    பிரதமர் மோடி

    பாரத் 6ஜி சேவை இந்தியாவில் தொடக்கம் - எப்போது கிடைக்கும்? தொழில்நுட்பம்
    பிரதமர் மோடி வரும் ஏப்ரல் 8ம் தேதி தமிழகம் வருகிறார் வந்தே பாரத்
    பிரதமர் மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசா? - நோபல் குழுவின் துணை தலைவர் விருது விழா
    தமிழக மீனவர்கள் 16 பேரை இலங்கை விடுதலை செய்ய நடவடிக்கை வேண்டும் - தமிழக முதல்வர் பிரதமருக்கு கடிதம் மு.க ஸ்டாலின்

    ஜம்மு காஷ்மீர்

    பயனவாதிகளுக்கு நிதி வழங்கல்: ஜம்மு காஷ்மீரின் பல்வேறு இடங்களில் NIA ரெய்டு இந்தியா
    இந்தியா முழுவதும் பத்திரிகை சுதந்திரம் பறிபோகலாம்: அனுராதா பாசின் இந்தியா
    காஷ்மீரில் ராகுல் காந்தி பிரியங்கா காந்தியோடு பனி சறுக்கு சவாரி - வைரல் வீடியோ ராகுல் காந்தி
    வைரல்: ராகுல் காந்தி பனிச்சறுக்கு விளையாடும் வீடியோ இந்தியா

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023