NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஸ்ரீ நகரில் பிரதமர் அலுவலக உயரதிகாரி என கூறி இ இசட் பாதுகாப்போடு வந்தவர் கைது
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஸ்ரீ நகரில் பிரதமர் அலுவலக உயரதிகாரி என கூறி இ இசட் பாதுகாப்போடு வந்தவர் கைது
    ஸ்ரீ நகரில் பிரதமர் அலுவலக உயரதிகாரி என கூறி இ இசட் பாதுகாப்போடு வந்தவர் கைது

    ஸ்ரீ நகரில் பிரதமர் அலுவலக உயரதிகாரி என கூறி இ இசட் பாதுகாப்போடு வந்தவர் கைது

    எழுதியவர் Nivetha P
    Mar 17, 2023
    03:26 pm

    செய்தி முன்னோட்டம்

    பிரதமர் மோடியின் அலுவலக உயரதிகாரி என்று கூறி காஷ்மீர் ஸ்ரீ நகரில் இசட் பிளஸ் பாதுகாப்புடன் வந்தவர் குஜராத்தை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    ஜம்மு காஷ்மீருக்கு இந்தாண்டில் இருமுறை சென்றுள்ள இந்த நபர் தான் பிரதமர் அலுவலகத்தில் கூடுதல் இயக்குனராக பணியாற்றி வருவதாக கூறியுள்ளார்.

    இதனையடுத்து காஷ்மீர் மாநில நிர்வாகம் அங்குள்ள 5 நட்சத்திர விடுதியில் அவரை தங்க வைத்து உபசரித்ததோடு, குண்டு துளைக்காத காருடன் இசட் பிளஸ் பாதுகாப்பும் அளித்துள்ளது.

    அதன்படி முதல் முறை அங்கு சென்ற பொழுது, அவர் அம்மாநில அதிகாரிகளுடன் இணைந்து ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் துணை ராணுவ படையினர் பாதுகாப்போடு அவர் பல இடங்களை சுற்றிப்பார்க்க சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது.

    ட்விட்டரில் பதிவு

    நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மோசடி நபர்

    குஜராத்தின் பாஜக பொதுசெயலாளர் திரு.பிரதீப் சிங் பகேலா உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ட்விட்டரில் இவர்களை பின்தொடர்பவர்களாக இருந்துள்ள நிலையில், அவர் இது தொடர்பான தகவல்களை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

    இதனையடுத்து கடந்த 2ம் தேதி மீண்டும் அவர் ஸ்ரீ நகருக்கு வந்ததாக கூறப்படுகிறது.

    அப்போது அவர் மீது சந்தேகமடைந்த மாவட்ட ஆட்சியர் புகாரளித்துள்ளார்.

    அவர் அளித்த புகாரின்பேரில் அந்த நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

    இதுதொடர்பான விசாரணை மேற்கொண்ட நிலையில், அவர் பெயர் கிரண் பாய் பட்டேல் என்றும், அவர் குஜராத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

    இந்த மோசடி நபர் கைதுசெய்யப்பட்ட விவகாரம் குறித்து தகவல் வெளியிடப்படாமல் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் அந்த நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியப்போது தான் இதுகுறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஜம்மு காஷ்மீர்
    பிரதமர் மோடி

    சமீபத்திய

    நடிகர் விஷால் திருமணம் செய்யவிருக்கும் நடிகை இவர்தான்! இணையத்தில் வைரலாகும் தகவல் விஷால்
    அணுசக்தி துறையில் தனியார் நிறுவனங்களின் நுழைவை எளிதாக்க கொள்கைகளை மறுசீரமைக்க மத்திய அரசு ஆலோசனை  அணுசக்தி
    இந்தியா விநியோகத்தைக் குறைத்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் அணை கட்டுமானத்தை சீனா துரிதப்படுத்துகிறது பாகிஸ்தான்
    கவாசாகி எலிமினேட்டருக்கு போட்டியாக ரெபெல் 500 க்ரூஸரை இந்தியாவில் அறிமுகம் செய்தது ஹோண்டா ஹோண்டா

    ஜம்மு காஷ்மீர்

    ராகுல் காந்தியின் யாத்திரையில் பாதுகாப்பு குறைபாடு எதுவும் இல்லை: காஷ்மீர் போலீசார் ராகுல் காந்தி
    ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் பனியில் சண்டையிடும் வீடியோ வைரல் பாரத் ஜோடோ யாத்ரா
    காஷ்மீர்-பயங்கரவாதியிடம் இருந்து சென்ட் பாட்டில் வடிவத்திலான வெடிகுண்டு பறிமுதல் தீவிரவாதிகள்
    ஜோஷிமத் போலவே ஜம்மு காஷ்மீரில் ஒரு புதையும் கிராமம் இந்தியா

    பிரதமர் மோடி

    இலவச ரேஷன் திட்டம் ஒரு வருடத்திற்கு நீட்டிப்பு! மோடி
    8வது 'வந்தே பாரத்' ரயில் சேவை: வரும் ஜனவரி 19 துவக்கம் வந்தே பாரத்
    கோல்டன் குளோப் வெற்றி: RRR பட குழுவினருக்கு பிரதமர், ரஜினி, கமல் உள்ளிட்டோர் பாராட்டு இந்தியா
    தை 2: திருவள்ளுவர் தினமும், அதன் வரலாறும் பொங்கல் திருநாள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025