இந்த முறை தமிழகத்தில் பாஜக வெற்றிபெறுமா? பிரசாந்த் கிஷோரின் கணிப்பு
பொதுத் தேர்தலுக்கு இரண்டு வாரங்களே இருக்கும் நிலையில், வியூகவாதி பிரசாந்த் கிஷோர், காங்கிரஸ் மற்றும் இந்திய எதிர்க்கட்சிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆறு கிழக்கு மற்றும் தென் மாநிலங்களில் பாஜக வெற்றிபெறக்கூடும் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பாஜக கட்சியை எதிர்த்து காங்கிரஸ், திரிணாமுல் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் வெற்றி பெற வியூகம் வகுத்த பிரசாந்த் கிஷோர், பாஜகவை எதிர்த்து வெல்ல முடியாது என்று எதிர்க்கட்சிகளுக்கு எச்சரித்துள்ளார். "பாஜக தெலுங்கானாவில் முதல் இடத்தில் அல்லது இரண்டாவது இடத்தில் வெற்றிபெறும்... இது மிகப்பெரிய விஷயம். ஒடிசாவில் பாஜக நிச்சயமாக நம்பர் 1 இடத்தில் வெற்றிபெறும். மேலும், அனைவரும் ஆச்சர்யப்படும் விதமாக, வங்காளத்தில் நம்பர்-1 இடத்தை பாஜக பிடிக்க போகிறது." என்று அவர் கூறியுள்ளார்.
தமிழகத்தின் நிலை என்ன?
தமிழகத்தில் அக்கட்சி இரட்டை இலக்க வாக்குகளை மட்டுமே எட்டக்கூடும் என்று அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் 2019 மக்களவைத் தேர்தலில் பாஜகவின் வாக்குகள் 3.6 சதவீதமாகவும், 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் 2.6 சதவீதமாகவும் இருந்தது. 2014இல் தெலுங்கானா, ஒடிசா, வங்காளம், தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் கேரளாவில் உள்ள 164 இடங்களில் ஏழு இடங்களில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றது. 2019 இல் தெலுங்கானா, ஒடிசா, வங்காளம், தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் கேரளாவில் உள்ள 164 இடங்களில் 30 இடங்களில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றது. 2019 ஆம் ஆண்டின் போது கர்நாடகாவில் 25 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. பாஜக வெற்றி பெற்ற ஒரே தென் மாநிலம் கர்நாடகா ஆகும்.