NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கோவை லாட்ஜில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற கள்ளக்காதல் ஜோடி - இளம்பெண் பலி
    அடுத்த செய்திக் கட்டுரை
    கோவை லாட்ஜில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற கள்ளக்காதல் ஜோடி - இளம்பெண் பலி
    கோவை லாட்ஜில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற கள்ளக்காதல் ஜோடி - இளம்பெண் பலி

    கோவை லாட்ஜில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற கள்ளக்காதல் ஜோடி - இளம்பெண் பலி

    எழுதியவர் Nivetha P
    Mar 11, 2023
    04:09 pm

    செய்தி முன்னோட்டம்

    நாகை மாவட்டம் வடபதியை சேர்ந்தவர் மணிகண்டன், இவரது மனைவி கிருத்திகா(26). இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.

    இந்நிலையில் கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து 2 ஆண்டுகளாக தனியே வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

    தனது பெற்றோர் வீட்டில் வாழ்ந்துவந்த கிருத்திகாவிற்கு சில மாதங்களுக்கு முன்னர் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணன்(29) என்பவரோடு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    இருவரும் அடிக்கடி போனில்பேசி கொள்வதோடு, நேரிலும் சந்தித்து நெருங்கி பழகி வந்துள்ளார்கள்.

    இதுகுறித்து கிருத்திகா பெற்றோருக்கு தெரியவந்த நிலையில், அவர்கள் தங்கள் மகளின் கள்ளக்காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரை கடுமையாக கண்டித்துள்ளனர்.

    இதனை கிருஷ்ணனிடம் கிருத்திகா கூறியுள்ளார்.

    இதனைதொடர்ந்து அவர்கள் இருவரும் வீட்டைவிட்டு வெளியேற முடிவுசெய்து, கடந்த 5 நாட்களுக்கு முன்னர் கோவைக்கு வந்துள்ளனர்.

    கள்ளக்காதல் விவகாரம்

    விஷம் அருந்தியதில் இளம்பெண் பலி

    கோவைக்கு வந்த அந்த கள்ளக்காதல் ஜோடி, தாங்கள் கணவன் மனைவி என்று கூறி சின்னியம்பாளையத்தில் உள்ள ஒரு லாட்ஜில் ரூம் எடுத்து தங்கியுள்ளார்கள்.

    அங்கு அவர்கள் இருவரும் தனிமையில் மகிழ்ச்சியாக இருந்துள்ளனர்.

    பின்னர் அவர்களை தங்கள் உறவினர்கள் ஒன்றாக வாழ விட மாட்டார்கள் என எண்ணிய இருவரும் விஷம் வாங்கி லாட்ஜின் ரூமிலேயே குடித்துள்ளனர்.

    விஷம் குடித்து மயக்கமடைந்த நிலையில் இவர்கள் ரூமில் இருக்க, ரூம் வாடகை வாங்க வந்த லாட்ஜ் மேனஜர் இவர்கள் நிலையை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

    பின்னர் அவர்களை கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

    அங்கு அவர்களுக்கு தீவிரசிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், கிருத்திகா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    கிருஷ்ணன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கோவை
    மாவட்ட செய்திகள்
    நாகர்கோவில்

    சமீபத்திய

    2030 ஆம் ஆண்டுக்குள் இந்த வேலைகளையெல்லாம் ஏஐ எடுத்துக்கொள்ளும்; ஆய்வில் வெளியான புதிய தகவல் செயற்கை நுண்ணறிவு
    கன்னட மொழி சர்ச்சை: தக் லைஃப் படத்தை வெளியிடக் கோரி நீதிமன்ற உதவியை நாடும் கமல்  கமல்ஹாசன்
    கடந்த 10 ஆண்டுகளில் விமான இயக்கத்திற்கான செலவுகள் 40 சதவீதம் குறைவு; IATA தகவல் விமானம்
    தமிழ்நாட்டில் மீண்டும் வாட்டத் தொடங்கிய வெப்பம்; பல மாவட்டங்களில் வெப்பநிலை சதமடித்தது வானிலை அறிக்கை

    கோவை

    ஈஷா யோகா மையம் சென்ற பெண் மர்மமான முறையில் மரணம்! தமிழ்நாடு
    கோவையில் கூலித்தொழிலாளி வீட்டிற்கு ரூ.70 ஆயிரம் கரண்ட் பில் - அதிர்ச்சியடைந்த மின்கட்டண பயனாளர் இந்தியா
    சுபஸ்ரீ மரணம்: ஈஷா யோகா மையம் கண்டனம் தமிழ்நாடு
    உலகளவில் நேரம் தவறாத 20 விமான நிலையங்கள் பட்டியலில் 13வது இடத்தில் கோவை விமான நிலையம் விமான சேவைகள்

    மாவட்ட செய்திகள்

    பழனி முருகர் கோயில் தைப்பூசத் திருவிழா - தேரோட்டத்தை முன்னிட்டு குவியும் பக்தர்கள் தமிழ்நாடு
    தமிழகத்தில் மின்சார கணக்கெடுப்பு தாமதமாவதால் பாதிக்கப்படும் மக்கள்-அதிக கட்டணம் செலுத்தவேண்டிய கட்டாயம் தமிழ்நாடு
    தமிழகம், கோவை - காரில் சிக்கிய அரிய வகை பறக்கும் பாம்பு மீட்பு கோவை
    தமிழகத்தில் சங்கராபுரம் கோயில் கோமாதாவிற்கு வளைகாப்பு நடத்திய கிராம மக்கள் தமிழ்நாடு

    நாகர்கோவில்

    நாகை கடலில் கலந்த கச்சா எண்ணெய் - செத்து மிதக்கும் மீன்கள் தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025