NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கோவை லாட்ஜில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற கள்ளக்காதல் ஜோடி - இளம்பெண் பலி
    இந்தியா

    கோவை லாட்ஜில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற கள்ளக்காதல் ஜோடி - இளம்பெண் பலி

    கோவை லாட்ஜில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற கள்ளக்காதல் ஜோடி - இளம்பெண் பலி
    எழுதியவர் Nivetha P
    Mar 11, 2023, 04:09 pm 0 நிமிட வாசிப்பு
    கோவை லாட்ஜில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற கள்ளக்காதல் ஜோடி - இளம்பெண் பலி
    கோவை லாட்ஜில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற கள்ளக்காதல் ஜோடி - இளம்பெண் பலி

    நாகை மாவட்டம் வடபதியை சேர்ந்தவர் மணிகண்டன், இவரது மனைவி கிருத்திகா(26). இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து 2 ஆண்டுகளாக தனியே வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. தனது பெற்றோர் வீட்டில் வாழ்ந்துவந்த கிருத்திகாவிற்கு சில மாதங்களுக்கு முன்னர் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணன்(29) என்பவரோடு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி போனில்பேசி கொள்வதோடு, நேரிலும் சந்தித்து நெருங்கி பழகி வந்துள்ளார்கள். இதுகுறித்து கிருத்திகா பெற்றோருக்கு தெரியவந்த நிலையில், அவர்கள் தங்கள் மகளின் கள்ளக்காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரை கடுமையாக கண்டித்துள்ளனர். இதனை கிருஷ்ணனிடம் கிருத்திகா கூறியுள்ளார். இதனைதொடர்ந்து அவர்கள் இருவரும் வீட்டைவிட்டு வெளியேற முடிவுசெய்து, கடந்த 5 நாட்களுக்கு முன்னர் கோவைக்கு வந்துள்ளனர்.

    விஷம் அருந்தியதில் இளம்பெண் பலி

    கோவைக்கு வந்த அந்த கள்ளக்காதல் ஜோடி, தாங்கள் கணவன் மனைவி என்று கூறி சின்னியம்பாளையத்தில் உள்ள ஒரு லாட்ஜில் ரூம் எடுத்து தங்கியுள்ளார்கள். அங்கு அவர்கள் இருவரும் தனிமையில் மகிழ்ச்சியாக இருந்துள்ளனர். பின்னர் அவர்களை தங்கள் உறவினர்கள் ஒன்றாக வாழ விட மாட்டார்கள் என எண்ணிய இருவரும் விஷம் வாங்கி லாட்ஜின் ரூமிலேயே குடித்துள்ளனர். விஷம் குடித்து மயக்கமடைந்த நிலையில் இவர்கள் ரூமில் இருக்க, ரூம் வாடகை வாங்க வந்த லாட்ஜ் மேனஜர் இவர்கள் நிலையை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் அவர்களை கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். அங்கு அவர்களுக்கு தீவிரசிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், கிருத்திகா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கிருஷ்ணன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    மாவட்ட செய்திகள்
    கோவை
    நாகர்கோவில்

    மாவட்ட செய்திகள்

    '10ஆம் வகுப்பில் தோல்வியடைந்தேன்': திருப்பூர் மாவட்ட ஆட்சியரின் ஊக்கமளிக்கும் கதை  தமிழ்நாடு
    சயனைடு கலந்த மது குடித்து 2 பேர் பலி - டாஸ்மாக் மேற்பார்வையாளர் உள்ளிட்ட 4 பேர் பணியிடை நீக்கம்  தமிழ்நாடு
    கரூர்: செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்திய பெண்! காவல்துறை
    வேங்கைவயல் விவகாரம் - மேலும் 10 பேருக்கு டி.என்.ஏ. பரிசோதனை நடத்த உத்தரவு  தமிழ்நாடு

    கோவை

    பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு மாற்றாக கோவையில் மஞ்சப்பை வழங்கும் தானியங்கி இயந்திரம்  தமிழ்நாடு
    கின்னஸ் சாதனையை நோக்கி 'வீலிங்' செய்யும் கோவை இளைஞர் தமிழ்நாடு
    தமிழ்நாடு காவல் துறை மோப்ப நாய் பிரிவில், பெண் காவலர்கள் நியமனம்!  தமிழ்நாடு
    சைக்கிளிங் வீராங்கனையின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றிய உதயநிதி ஸ்டாலின்  உதயநிதி ஸ்டாலின்

    நாகர்கோவில்

    நாகர்கோவில் தொழிலதிபர் வீட்டில் கொள்ளை-மிளகாய் பொடி தூவி தப்பிச்சென்ற மர்ம நபர்கள்  காவல்துறை
    கொரோனாவுக்கு பயந்து 2 ஆண்டுகள் வீட்டுக்குள்ளேயே இருந்த குடும்பத்தினர்  கொரோனா
    தமிழகத்தில் மற்றுமொரு நாகர்கோவில் பாதிரியார் பாலியல் புகாரில் கைது தென்காசி
    நாகை கடலில் கலந்த கச்சா எண்ணெய் - செத்து மிதக்கும் மீன்கள் தமிழ்நாடு

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023