NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நான்காம் காலாண்டு முடிவுகளை வெளியிட்ட ஐசிஐசிஐ வங்கி.. ஏற்றத்தில் அந்நிறுவனப் பங்குகள்! 
    அடுத்த செய்திக் கட்டுரை
    நான்காம் காலாண்டு முடிவுகளை வெளியிட்ட ஐசிஐசிஐ வங்கி.. ஏற்றத்தில் அந்நிறுவனப் பங்குகள்! 
    ஏற்றத்தில் ஐசிஐசிஐ வங்கிப் பங்குகள்

    நான்காம் காலாண்டு முடிவுகளை வெளியிட்ட ஐசிஐசிஐ வங்கி.. ஏற்றத்தில் அந்நிறுவனப் பங்குகள்! 

    எழுதியவர் Prasanna Venkatesh
    Apr 24, 2023
    11:11 am

    செய்தி முன்னோட்டம்

    தங்களது நான்காம் காலாண்டு முடிவுகளை கடந்த 22-ம் தேதி அறிவித்தது ஐசிஐசிஐ வங்கி. சந்தை எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்தது மட்டுமல்லாது, அதை விட சிறப்பான முடிவுகளை பதிவுசெய்திருக்கிறது ஐசிஐசிஐ வங்கி.

    முந்தைய நிதியாண்டின் கடைசி காலாண்டை விட, கடந்த நிதியாண்டின் கடைசி காலாண்டில் 30% அதிகமாக 9,122 கோடி ரூபாய் நிகர லாபத்தைப் பதிவு செய்திருக்கிறது அந்நிறுவனம்.

    அந்நிறுவனத்தின் பிரதான சேவையே கடன் சேவை தான். இந்த நான்காம் காலாண்டில் அதன் நிகர வட்டி வருவாய் முந்தைய நான்காம் காலாண்டை விட 40.2% அதிகமாக 17,667 கோடி ரூபாயைப் பதிவு செய்திருக்கிறது.

    பங்குச்சந்தை

    எதிர்பார்ப்பும் பங்குச்சந்தை எதிரொலியும்: 

    அந்நிறுவனத்தின் EPS-ம் (Earnings Per Share) ரூ.10.88-ல் இருந்து ரூ.13.84-ஆக உயர்ந்திருக்கிறது.

    மேலும், அந்நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் முந்தைய ஆண்டை விட 34.6%-மும், வைப்புநிதிகள் 10.9%-மும் உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    சந்தை எதிர்பார்ப்பை விட சிறப்பான காலாண்டு முடிவுகளைப் பதிவு செய்திருப்பதால் இன்று பங்குச்சந்தை வர்த்தகத்தை ஏற்றத்துடனே தொடங்கியிருக்கின்றன அந்நிறுவனப் பங்குகள்.

    இன்று காலை 11 மணி நிலவரப்படி 1.25% ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகின்றன அந்நிறுவனப் பங்குகள்.

    கடந்த நிதியாண்டு முழுவதுமே சிறப்பான முடிவுகளையே கொடுத்து வந்திருக்கிறது ஐசிஐசிஐ வங்கி.

    மேலும், முதலீட்டாளர்களுக்கான நற்செய்தியாக ரூ.8 டிவிடெண்ட் வழங்கவும் அந்நிறுவனம் முடிவு செய்திருக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    காலாண்டு முடிவுகள்
    பங்குச் சந்தை

    சமீபத்திய

    ஹிருத்திக் ரோஷனும் ஜூனியர் NTR நடிக்கும் 'வார் 2' டீஸர் வெளியானது படத்தின் டீசர்
    இந்தியா- பாகிஸ்தான் போர் காரணமாக நிறுத்தப்பட்ட அட்டாரி-வாகா எல்லை கொடியிறக்க விழா இன்று முதல் மீண்டும் தொடக்கம் இந்தியா
    இனி, நீதித்துறை சேவையில் சேர குறைந்தபட்சம் 3 ஆண்டு வழக்கறிஞர் பயிற்சி தேவை: உச்ச நீதிமன்றம் உத்தரவு உச்ச நீதிமன்றம்
    கடந்த 10 நாட்களில் இந்தியாவில் 164 கோவிட் வழக்குகள் பதிவாகியுள்ளன கோவிட் 19

    காலாண்டு முடிவுகள்

    நான்காம் காலாண்டு முடிவுகளை வெளியிடவிருக்கும் HCL  பங்குச் சந்தை
    நான்காம் காலாண்டில் குறைந்த லாபம்.. சரிவைச் சந்தித்த ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் நிறுவன பங்குகள்!  பங்குச் சந்தை
    சிறந்த காலாண்டு முடிவுகளை பதிவு செய்த HCL  டிவிடெண்ட்

    பங்குச் சந்தை

    அதானி குழுமத்தில் செய்த முதலீட்டில் இழப்பு ஏதும் இல்லை: LIC இந்தியா
    அதானி குழும பிரச்சனை: பங்குகள் சரிவடைந்தற்கு பதிலளித்த நிதியமைச்சர் இந்தியா
    அதானி பங்குகள் மீண்டும் சரிவு! காரணம் என்ன? தொழில்நுட்பம்
    அதானி பங்குகளில் முதலீட்டை அதிகரித்திருக்கும் எல்ஐசி!  முதலீடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025