NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சிரித்த முகத்துடன் இருப்பதற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்ட மணமகன் பலி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    சிரித்த முகத்துடன் இருப்பதற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்ட மணமகன் பலி 

    சிரித்த முகத்துடன் இருப்பதற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்ட மணமகன் பலி 

    எழுதியவர் Sindhuja SM
    Feb 20, 2024
    02:28 pm

    செய்தி முன்னோட்டம்

    திருமணத்திற்கு சில வாரங்களுக்கு முன்பு "ஸ்மைல்-என்ஹான்ஸ்மென்ட்" அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஹைதராபாத்தை சேர்ந்த மணமகன் பலியாகியுள்ளார்.

    28 வயதான லக்ஷ்மி நாராயண விஞ்சம் என்ற மணமகன் பிப்ரவரி 16ஆம் தேதி ஹைதராபாத் ஜூப்லி ஹில்ஸில் உள்ள FMS சர்வதேச பல் மருத்துவமனையில் 'ஸ்மைல் என்ஹான்ஸ்மென்ட்' அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்த போது உயிரிழந்தார்.

    அளவுக்கு அதிகமாக மயக்க மருந்தை உட்கொண்டதால் தனது மகன் உயிரிழந்ததாக லக்ஷ்மி நாராயண விஞ்சத்தின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார்.

    அறுவை சிகிச்சையின் போது தனது மகன் மயங்கி விழுந்ததை அடுத்து, மருத்துவமனை ஊழியர்கள் தன்னை மருத்துவமனைக்கு வரும்படி அழைத்ததாக ராமுலு விஞ்சம் தெரிவித்துள்ளார்.

    தெலுங்கானா 

     மரணத்திற்கு மருத்துவர்களே காரணம் என்று குற்றச்சாட்டு 

    "நாங்கள் அவனை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். ஆனால் அங்கு செல்லும் வழியிலேயே அவன் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்," என்று ராமுலு விஞ்சம் கூறியுள்ளார்.

    தனது மகன் அறுவை சிகிச்சை குறித்து தங்களுக்கு தகவல் தெரிவிக்கவில்லை என்றும், தனது மகனின் மரணத்திற்கு மருத்துவர்களே காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    பிப்ரவரி 16ஆம் தேதி மதியம் 2.30 மணியளவில் லட்சுமி நாராயணன், கிளினிக்கிற்கு வந்ததாக ஜூப்லி ஹில்ஸ் நிலைய அதிகாரி கே.வெங்கடேஷ்வர் ரெட்டி தெரிவித்துள்ளார்.

    "மாலை 4.30 மணியளவில், அவர் ஆபரேஷன் தியேட்டருக்குள் அழைத்துச் செல்லப்பட்டார். அந்த செயல்முறை கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் நீடித்தது. ஜூப்ளி ஹில்ஸில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது." என்று ரெட்டி கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஹைதராபாத்

    சமீபத்திய

    தடாலடியாக உயர்ந்த தங்கம் விலை; இன்றைய நிலவரம் என்ன? தங்கம் வெள்ளி விலை
    பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்; கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறப்பு தாமதமாக வாய்ப்புள்ளதாக தகவல் பள்ளிகள்
    ரூ.1,000 கோடி டாஸ்மாக் பணமோசடி வழக்கில் தமிழகத்தில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை டாஸ்மாக்
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை

    ஹைதராபாத்

    தெலுங்கானா மாநில அரசு ஒத்துழைக்க மறுக்கிறது: பிரதமர் மோடி காட்டம் நரேந்திர மோடி
    ஹைதராபாத்தில் உலகிலேயே மிக உயரமான அம்பேதகர் சிலை திறப்பு  அம்பேத்கர்
    ஹைதராபாத்தில்  புதிய தூதரகத்தை திறக்க இருக்கிறது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உலகம்
    காதலியின் உடலை துண்டுதுண்டாக வெட்டி பிரிட்ஜிக்குள் வைத்திருந்த காதலன் கைது இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025