NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / காதலியின் உடலை துண்டுதுண்டாக வெட்டி பிரிட்ஜிக்குள் வைத்திருந்த காதலன் கைது
    அடுத்த செய்திக் கட்டுரை
    காதலியின் உடலை துண்டுதுண்டாக வெட்டி பிரிட்ஜிக்குள் வைத்திருந்த காதலன் கைது
    இறந்தவர் ஒய்.அனுராதா ரெட்டி(55 வயது) என அடையாளம் காணப்பட்டார்.

    காதலியின் உடலை துண்டுதுண்டாக வெட்டி பிரிட்ஜிக்குள் வைத்திருந்த காதலன் கைது

    எழுதியவர் Sindhuja SM
    May 25, 2023
    03:52 pm

    செய்தி முன்னோட்டம்

    தன் காதலியை வெட்டி கொன்ற ஒரு நபரை ஹைதராபாத் போலீஸார் நேற்று(மே 25) கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்டவர் பி.சந்திர மோகன்(48) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

    குற்றம் சாட்டப்பட்ட சந்திர மோகன், இறந்த அனுராதா ரெட்டியை கத்தியால் குத்தி கொன்றதாகவும், பின்னர் அவரது உடலை பல துண்டுகளாக வெட்டி பிரிட்ஜிக்குள் வைத்திருந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    "மே 17அன்று, தீகல்குடா சாலைக்கு அருகில் உள்ள அப்சல் நகர் சமுதாயக் கூடத்திற்கு எதிரே இருக்கும் குப்பை கொட்டும் இடத்தில் கருப்பு கவரில் அடையாளம் தெரியாத பெண்ணின் தலை ஒன்று இருப்பதைக் கண்டதாக GHMC ஊழியர் ஒருவரிடம் இருந்து எங்களுக்கு புகார் வந்தது." என்று தென்கிழக்கு மண்டல DCP சிஎச்.ரூபேஷ் தெரிவித்தார்.

    details

    பணத்தை திருப்பி கேட்டதால் காதலியை குத்தி கொன்ற சந்திர மோகன்

    இந்த வழக்கு விசாணையின் போது, இறந்தவர் ஒய்.அனுராதா ரெட்டி(55 வயது) என அடையாளம் காணப்பட்டார்.

    விசாரணையில், குற்றம்சாட்டப்பட்டவர் இறந்தவருடன் தொடர்பு வைத்திருந்தது தெரியவந்தது.

    2018ஆம் ஆண்டு முதல் அனுராதாவிடம் இருந்து சந்திர மோகன் ரூ.7 லட்சம் வரை பணம் வாங்கி இருக்கிறார். ஆனால், அதை திருப்பி கொடுக்கவில்லை.

    அந்த பணத்தை அனுராதா திருப்பி கேட்டதனால் கோபடைந்த சந்திர மோகன் திட்டமிட்டு மே 12ஆம் தேதி அன்று அனுராதாவை கத்தியால் குத்தி கொன்றார்.

    அதன்பிறகு, அனுராதாவின் உடலை துண்டுதுண்டாக வெட்டிய அவர், உடல் பாகங்களை பிரிட்ஜில் வைத்திருந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

    மே 15அன்று, அனுராதாவின் தலையை மட்டும் அவர் குப்பையில் வீசிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    ஹைதராபாத்
    குற்றவியல் நிகழ்வு

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    இந்தியா

    ரூ.2000 நோட்டுக்களை அரசு பேருந்துகளில் பயணிகள் மாற்றலாம் - தமிழக போக்குவரத்துத்துறை தமிழ்நாடு
    ஆஸ்திரேலியாவில் பிரதமர் மோடி: முக்கிய தொழிலதிபர்களுடன் சந்திப்பு  ஆஸ்திரேலியா
    இன்று முதல் வங்கிகளில் '2000 ரூபாய் நோட்டு'க்களை மாற்றும் செயல்முறை துவக்கம்! ரிசர்வ் வங்கி
    ரூ.50 ஆயிரத்திற்கு மேல் ரூ.2,000 நோட்டுக்கள் வைத்திருப்போர் வங்கியில் டெபாசிட் செய்ய பான் எண் கட்டாயம் ரிசர்வ் வங்கி

    ஹைதராபாத்

    தெலுங்கானா மாநில அரசு ஒத்துழைக்க மறுக்கிறது: பிரதமர் மோடி காட்டம் நரேந்திர மோடி
    ஹைதராபாத்தில் உலகிலேயே மிக உயரமான அம்பேதகர் சிலை திறப்பு  அம்பேத்கர்
    ஹைதராபாத்தில்  புதிய தூதரகத்தை திறக்க இருக்கிறது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உலகம்

    குற்றவியல் நிகழ்வு

    இந்தியாவில் அதிக ஆண்கள் மனைவிகளால் கொல்லப்படுகின்றனர்: ஆய்வில் தகவல்  இந்தியா
    டெல்லி நீதிமன்றத்தில் துப்பாக்கி சூடு  இந்தியா
    பட்டப்பகலில் அடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் - சிசிடிவியில் பதிவான திடுக்கிடும் காட்சிகள் இந்தியா
    அமிர்தசரஸ் பொற்கோவில் அருகே மீண்டும் குண்டுவெடிப்பு இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025