NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 2000 ரூபாய் நோட்டு அறிவிப்பு.. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்!
    அடுத்த செய்திக் கட்டுரை
    2000 ரூபாய் நோட்டு அறிவிப்பு.. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்!
    2000 ரூபாய் நோட்டு திரும்பப் பெறுவதற்கான அறிவிப்போடு அதற்கான வழிமுறைகளையும் அளித்திருக்கிறது ரிசர்வ் வங்கி

    2000 ரூபாய் நோட்டு அறிவிப்பு.. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்!

    எழுதியவர் Prasanna Venkatesh
    May 20, 2023
    09:45 am

    செய்தி முன்னோட்டம்

    2000 ரூபாய் நோட்டுக்களை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக நேற்று (மே 19) அறிவித்திருக்கிறது ரிசர்வ் வங்கி. இதனைத் தொடர்ந்து இந்த ரூபாய் நோட்டுக்கள் செல்லுமா, இது பணமதிப்பிழப்பா என மக்களுக்கு பல்வேறு சந்தைகங்கள் எழுந்திருக்கின்றன.

    எனவே, மேற்கூறிய அறிவிப்போடு இந்த மாற்றம் குறித்த செயல்முறையை சீராக்க பல்வேறு வழிமுறைகளையும், விளக்கங்களையும் சேர்த்து அளித்திருக்கிறது ரிசர்வ் வங்கி.

    2000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாதா?

    இல்லை, 2000 ரூபாய் நோட்டுக்கள் முழுமையாகச் செல்லும். இது பணமதிப்பிழப்பு அறிவிப்பு இல்லை, திரும்பப்பெறும் முடிவு மட்டுமே.

    எப்போது மாற்றிக் கொள்வது?

    வரும் மே 23-ம் தேதி தொடங்கி செப்டம்பர் 30-ம் தேதி வரை அனைத்து வங்கிகளிலும் 2000 ரூபாய் நோட்டுக்களை டெபாசிட் செய்யவோ, மாற்றிக் கொள்ளவோ முடியும்.

    ரிசர்வ் வங்கி

    வேறு என்ன அறிவிப்புகள்: 

    அதிகபட்ச அளவு ஏதும் இருக்கிறதா?

    ரிசர்வ் வங்கியின் அறிவிப்பின்படி வங்கியில் ஒரு முறையில் ரூ.20,000 வரையிலான 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ள முடியும்.

    ரூபாய் நோட்டுக்களை மாற்ற, குறிப்பிட்ட வங்கியில் நாம் கணக்கு வைத்திருக்க வேண்டுமா?

    இல்லை, வங்கிக் கணக்கு இல்லாதவர்களும் எந்த வங்கிக் கிளையிலும் 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ளலாம்.

    ரூபாய் நோட்டுக்களை மாற்ற நாம் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டுமா?

    தேவையில்லை, 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற வங்கிக்கோ அல்லது யாருக்கும் தனியாக எந்த விதமான கட்டணமும் செலுத்தத் தேவையில்லை.

    மேலும், முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் சிரமத்தைக் குறைக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க அனைத்து வங்கிகளுக்கும் உத்தரவிட்டிருக்கிறது ரிசர்வ் வங்கி.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ரிசர்வ் வங்கி

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    ரிசர்வ் வங்கி

    அதானி பங்குகள் வீழ்ச்சி; வங்கித் துறை நிலையாக தான் உள்ளது: RBI இந்தியா
    அதானி குழும பிரச்சனை: செய்தியாளர் சந்திப்பில் பேசிய ரிசர்வ் வங்கி கவர்னர் இந்தியா
    ரெப்போ வட்டி விகிதம் உயர்வு: சமானிய மக்களுக்கு உண்டாகும் பாதிப்புகள் என்ன? தொழில்நுட்பம்
    ரூபாய் நோட்டில் கிறுக்கப்பட்டிருந்தால் அது செல்லாது என்று கூறப்படுவது உண்மையா இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025