NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இமாச்சலில் மேகவெடிப்பு: 7 பேர் பலி, வெள்ளத்தில் வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன
    அடுத்த செய்திக் கட்டுரை
    இமாச்சலில் மேகவெடிப்பு: 7 பேர் பலி, வெள்ளத்தில் வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன
    நேற்று இரவு ஜாடோன் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்தது.

    இமாச்சலில் மேகவெடிப்பு: 7 பேர் பலி, வெள்ளத்தில் வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன

    எழுதியவர் Sindhuja SM
    Aug 14, 2023
    10:54 am

    செய்தி முன்னோட்டம்

    இமாச்சல பிரதேசத்தின் சோலனில் உள்ள ஒரு கிராமத்தில் மேக வெடிப்பு தாக்கியதால் 7 பேர் பலியாகினர்.

    நேற்று இரவு ஜாடோன் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்தது.

    சிம்லாவின் சம்மர்ஹில் பகுதியில் சிவன் கோவில் இடிந்து விழுந்ததால் 25 முதல் 30 பேர் இடிபாடுகளுக்கு அடியில் புதைந்து கிடப்பதாக அஞ்சப்படுகிறது. பலத்த மழைக்கு மத்தியில் வழிபடுவதற்காக கிட்டத்தட்ட 50 பேர் அந்த கோவிலுக்கு சென்றிருந்ததாக கூறப்படுகிறது.

    இதனையடுத்து, தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

    காவல்துறை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF) குழுவினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

    கடந்த 24 மணி நேரத்தில் இமாச்சலப் பிரதேசம் மற்றும் அண்டை மாநிலமான உத்தரகாண்டில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது.

    டிகுசிவ்

    இமாச்சலில் 621 சாலைகள் மூடப்பட்டன

    கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகளால் முக்கிய சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டன. ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்தது. இதனால், அம்மாநிலங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

    சிம்லாவில் மரம் வேரோடு சாய்ந்து தனியார் பேருந்தின் மீது விழுந்ததால் கண்டக்டர் ஒருவர் காயமடைந்தார்.

    தொடர் மழை காரணமாக மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு ஆகஸ்ட் 14(திங்கட்கிழமை) வரை விடுமுறை அளிக்கப்படுவதாக இமாச்சல் முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு அறிவித்துள்ளார்.

    மேலும், மண்டியில் 236, சிம்லாவில் 59 மற்றும் பிலாஸ்பூர் மாவட்டத்தில் 40 என மொத்தம் 621 சாலைகள் தற்போது மூடப்பட்டு, வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஹிமாச்சல பிரதேசம்
    கனமழை

    சமீபத்திய

    இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்ததில் டிரம்பின் 'வர்த்தக' கூற்றை மத்திய அரசு நிராகரித்தது இந்தியா
    'ராஜதந்திரமற்ற செயல்களுக்காக' பாகிஸ்தான் தூதரை இந்தியா வெளியேற்றியது இந்தியா
    இ-பாஸ்போர்ட்கள் என்றால் என்ன, இந்தியாவில் அதை எவ்வாறு பெறுவது? பாஸ்போர்ட்
    மாருதி சுஸுகியின் அரினா இப்போது 6 ஏர்பேக்குகளுடன் வருகிறது மாருதி

    ஹிமாச்சல பிரதேசம்

    அதானி வில்மர் நிறுவனத்தில் அதிரடி ரெய்டு! சிக்கியது என்ன? தொழில்நுட்பம்
    90,000 ரூபாய் மதிப்புள்ள ஸ்கூட்டிக்கு 1 கோடி செலவழித்த நபர்! மாநிலங்கள்
    அமெரிக்காவில் பிறந்த சிறுவனை பௌத்தத்தின் 3வது உயர்ந்த தலைவராக தலாய் லாமா அறிவித்தார் அமெரிக்கா
    இமாச்சல் வரை பரவிய H3N2 வைரஸ்: 10 வார குழந்தைக்கு பாதிப்பு இந்தியா

    கனமழை

    கனமழை காரணமாக டெல்டா மாவட்டங்களில் நெல் அறுவடை பாதிப்பு - விவசாயிகள் கவலை மாவட்ட செய்திகள்
    அடுத்த 5 நாட்களுக்கு கேரளாவில் கனமழை எச்சரிக்கை!  கேரளா
    மிகக் கடுமையான புயலாக வலுப்பெற இருக்கும் மோக்கா புயல்: மேற்கு வங்கத்திற்கு எச்சரிக்கை இந்தியா
    தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025