NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னை அண்ணா சாலையில் ரூ.621கோடி மதிப்பில் உயர்மட்ட மேம்பாலம் - அரசாணை வெளியீடு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னை அண்ணா சாலையில் ரூ.621கோடி மதிப்பில் உயர்மட்ட மேம்பாலம் - அரசாணை வெளியீடு 
    சென்னை அண்ணா சாலையில் ரூ.621கோடி மதிப்பில் உயர்மட்ட மேம்பாலம் - அரசாணை வெளியீடு

    சென்னை அண்ணா சாலையில் ரூ.621கோடி மதிப்பில் உயர்மட்ட மேம்பாலம் - அரசாணை வெளியீடு 

    எழுதியவர் Nivetha P
    Jul 05, 2023
    04:47 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னை அண்ணா சாலையில் ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கிறது.

    இப்பகுதியில் பல்வேறு சந்திப்புகள் அமைந்துள்ள நிலையில், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

    இந்த நெரிசல் காரணமாக அண்ணா சாலை வழியே கிண்டி, தாம்பரம் போன்ற தூரமான பகுதிகளுக்கு செல்லும் வாகன ஓட்டிகள் கடுமையான சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.

    இதனால் போக்குவரத்து நெரிசலை கட்டுக்குள் வைக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதில் ஒன்றாக, அண்ணா சாலையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை ரூ.621 கோடி செலவில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படவுள்ளது என்று கடந்த தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டது.

    மேம்பாலம் 

    மேம்பாலம் பன்னாட்டு நிபுணர்களின் ஆலோசனைகளை பெற்ற பின்னரே கட்டப்படும் என தகவல் 

    அந்த அறிவிப்பின் படி, தற்போது போக்குவரத்து நெரிசலை குறைக்க ரூ.621 கோடி மதிப்பில் புதிய உயர்மட்ட மேம்பாலமானது, 3.5 கி.மீ.,தூரத்திற்கு அமைக்க நிர்வாக அனுமதியினை வழங்கி, தமிழக அரசு அரசாணையினை வெளியிட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

    இப்பாலம், SIET கல்லூரி சாலை சந்திப்பு, நந்தனம் சந்திப்பு, செனெடாப் சந்திப்பு, எல்டாம்ஸ் சாலை சந்திப்பு, சி.ஐ.டி.சாலை சந்திப்பு உள்ளிட்ட இடங்களை கடந்து சைதாப்பேட்டை பேருந்து நிலையம் அருகே இறங்கும் வகையில் இதன் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

    இந்த நான்கு வழி மேம்பாலம், பன்னாட்டு நிபுணர்களின் ஆலோசனைகளை பெற்று, மெட்ரோ ரயில் சுரங்கப்பாதைக்கு மேல் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் இந்த மேம்பாலம் ஒரு நவீன பொறியியல் சாதனையாக அமையும் என்றும் கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    தமிழக அரசு

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    சென்னை

    தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர் பிரபஞ்சன் நீட் தேர்வில் முதலிடம் பிடித்து சாதனை  தமிழ்நாடு
    சென்னை கிண்டி மருத்துவமனை: இன்று மாலை முதல்வர் ஸ்டாலின் திறந்துவைக்கிறார் கருணாநிதி
    மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் செந்தில் பாலாஜியின் இலாகா மாற்றம் தமிழ்நாடு
    முக்கிய பிரமுகர்கள் வருகையின் போது தடையில்லா மின்சாரம் வழங்க உத்தரவு தமிழகம்

    தமிழக அரசு

    கருணாநிதி பேனா நினைவு சின்ன கட்டுமானத்தினை ஒருங்கிணைக்க அதிகாரி நியமனம் திமுக
    சென்னை கிண்டி பல்நோக்கு மருத்துவமனையை திறந்து வைப்பதில் மாற்றம் சென்னை
    தமிழக வளர்ச்சித்திட்ட பணிகளை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம் - தலைமைச்செயலாளர் இறையன்பு  தமிழ்நாடு
    சிபிஎஸ்சி அங்கீகாரம் பெற்ற பள்ளி என போலி விளம்பரம் - நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல்  தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025