NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மூலிகை பெட்ரோல் ஒரு லிட்டருக்கு ரூ.15க்கு வழங்குவேன் - ராமர் பிள்ளை 
    அடுத்த செய்திக் கட்டுரை
    மூலிகை பெட்ரோல் ஒரு லிட்டருக்கு ரூ.15க்கு வழங்குவேன் - ராமர் பிள்ளை 
    மூலிகை பெட்ரோல் ஒரு லிட்டருக்கு ரூ.15க்கு வழங்குவேன் - ராமர் பிள்ளை

    மூலிகை பெட்ரோல் ஒரு லிட்டருக்கு ரூ.15க்கு வழங்குவேன் - ராமர் பிள்ளை 

    எழுதியவர் Nivetha P
    Apr 27, 2023
    02:35 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு மாநிலம், விருதுநகர் மாவட்டம்-ராஜபாளையத்தில் கடந்த 2000ம் ஆண்டு பெட்ரோல், டீசலுக்கு இணையாக மூலிகை பெட்ரோலை கண்டுபிடித்து சர்ச்சைக்குள்ளானவர் ராமர் பிள்ளை.

    ஆனால் அவர் கண்டறிந்தது மூலிகை பெட்ரோல் அல்ல போலி பெட்ரோல் என கூறி வழக்குப்பதிவு செய்யப்பட்டு வழக்கானது சிபிஐ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது.

    பின்னர் ராமர் பிள்ளை, அவரது மனைவி உள்பட 5 பேர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டனர்.

    அவரின் வங்கிக்கணக்கு முடக்கப்பட்டு, சிறைத்தண்டனையும் அறிவிக்கப்பட்டது.

    பின்னர் அவர் மேல்முறையீடு செய்ததன் பேரில், விசாரணை மேற்கொள்ளப்பட்டு கடந்த டிசம்பர் மாதம் இறுதியில் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி அவர்கள் 5 பேரையும் விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

    அதன்படி இன்று(ஏப்ரல்.,27)ராஜபாளையத்தில் ராமர் பிள்ளை செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்துள்ளார்.

    மூலிகை பெட்ரோல் 

    விற்பனை துவங்கியதாகவே அடுத்த அறிவிப்பு வெளியாகும் என நம்பிக்கை 

    அப்போது அவர் பேசுகையில், கடந்தமுறை நான் கண்டறிந்த பெட்ரோலினை முறையான அனுமதிப்பெற்று விற்பனை செய்தேன்.

    ஆனால் அது போலி பெட்ரோல் என்றுக்கூறி வழக்கு தொடர்ந்துள்ளார்கள்.

    தற்போது என் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என நிரூபித்துள்ளேன்.

    விருதுநகரில் விரைவில் மூலிகை பெட்ரோல் ஆலை துவங்குவேன்.

    அதில் மூலிகை பெட்ரோலினை அதிகளவில் தயாரித்து பொதுமக்களுக்கு ஒரு லிட்டர் ரூ.15க்கு என்னால் வழங்க முடியும், வழங்குவேன்.

    தீர்ப்பு வெளியான பிறகு கடந்த 3 மாதங்களாக பெரியளவில் தொழிற்சாலை அமைக்கவும், விற்பனைக்கு அரசிடம் அனுமதி பெறும் பணிகளும் நடந்து வந்தது.

    புதிய ஆலை துவங்க முதலீட்டாளர்களும் முன்வந்துள்ளார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

    அடுத்த அறிவிப்பு விற்பனை துவங்கிவிட்டது என்றே வரும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விருதுநகர்
    தமிழ்நாடு

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் - நம் முன்னோர்கள் விட்டு சென்ற ஆயிரக்கணக்கான பொக்கிஷங்கள் தமிழ்நாடு
    சதுரகிரி மலையில் உள்ள சிறப்புமிக்க மருத்துவ குணமிக்க நாவல் நீரூற்று நீரிழிவு நோய்
    தமிழகத்தில் முதன்முறையாக வருகிறது பி.எம். மித்ரா ஜவுளி பூங்கா - விருதுநகரில் அமைகிறது பியூஷ் கோயல்

    தமிழ்நாடு

    அதிமுக இனி பிரதான எதிர்க்கட்சியாக செயல்படும் - எடப்பாடி பழனிச்சாமி  தேர்தல் ஆணையம்
    காதலி தூக்குபோட்டு உயிரிழந்ததை வீடியோ காலில் பார்த்து ரசித்த காதலன்  காவல்துறை
    புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரேஷன் அட்டை - உச்சநீதிமன்றம் உத்தரவு!  உச்ச நீதிமன்றம்
    வேங்கைவயல் விவகாரம்: குற்றவாளிகள் குறித்த முக்கிய தகவல் கிடைத்தது வேங்கை வயல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025