NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / செந்தில் பாலாஜி மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனு விசாரணை ஒத்திவைப்பு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    செந்தில் பாலாஜி மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனு விசாரணை ஒத்திவைப்பு 
    செந்தில் பாலாஜி மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனு விசாரணை ஒத்திவைப்பு

    செந்தில் பாலாஜி மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனு விசாரணை ஒத்திவைப்பு 

    எழுதியவர் Nivetha P
    Jun 22, 2023
    02:19 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் ஜூன்.,14ம் தேதி காலை முதல் அமலாக்கத்துறையினர் தொடர்ந்து சோதனை நடத்தினர்.

    இதனையடுத்து அவர்கள் விசாரணை என்று கூறி அவரை நள்ளிரவு நேரத்தில் கைது செய்தனர்.

    அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    இந்நிலையில், அமைச்சரின் மனைவி எஸ்.மேகலா தனது கணவர் சரியான சட்டவிதிகள்படி கைது செய்யப்படவில்லை என்றும், இடைக்கால ஜாமீன் வழங்கி அவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சையளிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு ஆட்கொணர்வு மனுவினை தாக்கல் செய்தார்.

    இதன்படி, அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்த நீதிமன்றம், அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க மட்டும் ஒப்புதல் தெரிவித்து உத்தரவிட்டது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்தது.

    ஒத்திவைப்பு 

    சிகிச்சையில் உள்ள காலத்தினை நீதிமன்ற காவல் நாட்களாக கருத கூடாது

    இந்த வழக்கானது இன்று(ஜூன்.,22) விசாரணைக்கு வந்தது.

    அப்போது அமலாக்கத்துறை சார்பில் வழக்கறிஞர், சிகிச்சையில் உள்ள காலத்தினை நீதிமன்ற காவல் நாட்களாக கருத கூடாது என்றும், இந்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்றும் வாதிட்டார்.

    அதன் பின்னர் செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, "அமைச்சர் செந்தில் பாலாஜி கைது சரியான சட்டவிதிகளை பின்பற்றி செய்யப்பட்டது அல்ல. எனவே இந்த மனு விசாரணைக்கு உகந்தது தான்" என்று வாதிட்டார்.

    செந்தில் பாலாஜி தரப்பு வாதம் முடிந்த நிலையில் நீதிபதிகள் இந்த வழக்கின் விசாரணையினை வரும் ஜூன் 27ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மின்சார வாரியம்
    தமிழ்நாடு

    சமீபத்திய

    ஐபிஎல் 2025க்கு பிறகு எம்எஸ் தோனி விளையாடுவது சந்தேகம்; முன்னாள் எஸ்ஆர்எச் பயிற்சியாளர் கருத்து எம்எஸ் தோனி
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு அடுத்த அடி; ரன்பீர் கால்வாயின் நீளத்தை இரட்டிப்பாக்க இந்தியா பரிசீலனை சிந்து நதி நீர் ஒப்பந்தம்
    இறந்து பிறந்த குழந்தையை மருத்துவமனை ஃப்ரீசரில் விட்டுச் சென்ற பெண்ணுக்கு சிறை தண்டனை; எங்கே தெரியுமா? தைவான்
    இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய ஏ கிரிக்கெட் அணி அறிவிப்பு; கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரன் தேர்வு இந்திய கிரிக்கெட் அணி

    மின்சார வாரியம்

    மீண்டும் உயர்த்தப்படுகிறதா மின்கட்டணம்? அதிர்ச்சியில் பொதுமக்கள் தமிழ்நாடு
    குட் நியூஸ்: மின் கட்டணம் உயர்த்தப்படாது என மின்சார வாரியம் அறிவிப்பு  தமிழ்நாடு செய்தி
    சென்னை தலைமைச்செயலகத்தில் செந்தில் பாலாஜியின் அறையில் சோதனை  சென்னை
    புறவாசல் வழியாக அச்சுறுத்த விரும்பும் பாஜக அரசியல் செல்லாது - முதல்வர் மு.க.ஸ்டாலின்  மு.க ஸ்டாலின்

    தமிழ்நாடு

    'திமுக ஃபைல்ஸ்' அவதூறு வழக்கு: பாஜக தலைவர் அண்ணாமலைக்கு சம்மன்  தமிழகம்
    மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் செந்தில் பாலாஜியின் இலாகா மாற்றம் திமுக
    நீட் தேர்வு: மாநிலத்தில் 2ஆம் இடத்தை பிடித்த கட்டிடத் தொழிலாளியின் மகள் நீட் தேர்வு
    'செந்தில் பாலாஜி மனைவியின் மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்க வேண்டும்': நீதிமன்றம் திமுக
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025