NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மதுரை கருத்தரங்கிற்கு வந்த குஜராத் மாணவி பாலியல் பலாத்காரம் - தமிழக மாணவர்கள் 2 பேர் கைது 
    அடுத்த செய்திக் கட்டுரை
    மதுரை கருத்தரங்கிற்கு வந்த குஜராத் மாணவி பாலியல் பலாத்காரம் - தமிழக மாணவர்கள் 2 பேர் கைது 
    மதுரை கருத்தரங்கிற்கு வந்த குஜராத் மாணவி பாலியல் பலாத்காரம் - தமிழக மாணவர்கள் 2 பேர் கைது

    மதுரை கருத்தரங்கிற்கு வந்த குஜராத் மாணவி பாலியல் பலாத்காரம் - தமிழக மாணவர்கள் 2 பேர் கைது 

    எழுதியவர் Nivetha P
    Apr 12, 2023
    03:41 pm

    செய்தி முன்னோட்டம்

    குஜராத் மாநிலம் , அகமதாபாத்தை சேர்ந்த மாணவி ஒருவர் ஆன்லைனில் சார்ட்டர்ட் அக்கவுண்ட் பட்டபடிப்பினை படித்து வந்துள்ளார்.

    கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் 17, 18 தேதிகளில் மதுரையில் ஒரு கருத்தரங்கு நடைபெற்றது.

    இந்த கருத்தரங்கில் கலந்துகொள்வதற்காக குஜராத்தில் இருந்து அந்த 22 வயது மாணவி வந்துள்ளார். மதுரை தெப்பக்குளம் பகுதியிலுள்ள தங்கும் விடுதியில் அவர் தங்கியுள்ளார்.

    அப்போது அதே கருத்தரங்கிற்காக அதே விடுதியில் தங்கியிருந்த சென்னையை சேர்ந்த அஷீஷ் ஜெயின்(22), காஞ்சிபுரத்தை சேர்ந்த ஜெரோம் கதிரவன்(22) என்ற மாணவர்கள் அந்த மாணவிக்கு பழக்கமாகியுள்ளார்கள்.

    இந்நிலையில் அந்த மாணவிக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது.

    அப்போது அந்த 2 மாணவர்கள் அந்த பெண்ணிற்கு உணவும், மருந்தும் வாங்கிவந்து கொடுத்துள்ளார்கள்.

    பலாத்காரம் 

    வாட்ஸ்-அப் மூலம் மாணவியிடம் விசாரணை 

    அந்த உணவினை சாப்பிட்ட சிறிதுநேரத்திலேயே அந்த மாணவி மயக்கமடைந்துள்ளார் என்று கூறப்படுகிறது.

    மயக்கமடைந்த அந்த மாணவியை இந்த மாணவர்கள் இருவரும் தனித்தனியே பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்கள்.

    இதனையடுத்து அதற்கு மறுநாள் குஜராத்திற்கு திரும்பிய அந்த மாணவிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

    பின்னர் அவர் பெற்றோருக்கு நடந்தது குறித்து அம்மாணவி கூறியுள்ளார்.

    இதனையடுத்து உள்ளூர் காவல்துறையில் இவர்கள் சென்று புகாரளித்துள்ளார்கள்.

    சம்பவயிடம் மதுரை என்பதால் அவர்களை அங்குள்ள காவல் நிலையத்தில் புகாரளிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்கள்.

    அதன்பேரில் அந்த மாணவி ஆன்லைன் புகாரினை மதுரை காவல் ஆய்வாளருக்கு அளித்துள்ளார்.

    அதன்படி உதவி ஆணையர் காமாட்சி வாட்ஸ்-அப் மூலம் அந்த மாணவியிடம் விசாரணை நடத்தியுள்ளார்.

    இதனை தொடர்ந்து தற்போது அந்த 2 மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    குஜராத்
    மதுரை
    தமிழ்நாடு

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    குஜராத்

    குஜராத் தேர்தல் முடிவுகள்: வெற்றி வாகை சூடிய பாஜக! தேர்தல் முடிவு
    குஜராத் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் முதல் அமைச்சர்
    குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் இன்று பதவியேற்பு: EPS, OPSஸிற்கு அழைப்பா? தேர்தல் முடிவு
    இந்திய கடல்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த 22 பாகிஸ்தான் மீனவர்கள் கைது இந்தியா

    மதுரை

    கடந்த ஆண்டில் ரூ.11 கோடி மதிப்புள்ள 1400 டன் ரேஷன் அரிசி பறிமுதல் - 1981 வழக்குகள் பதிவு இந்தியா
    மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் அமையும் - மத்திய அரசு உறுதி இந்தியா
    மதுரையில் பரபரப்பு - ஆட்சியர் வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 29,000 சேலைகள் மற்றும் 19,000 வேட்டிகள் கருகின பொங்கல் பரிசு
    அனைத்து சமுதாய மக்களையும் இணைத்து சமாதான கூட்டம் - உயர்நீதிமன்ற மதுரை கிளை இந்தியா

    தமிழ்நாடு

    திருப்பூரில் கொரோனாவுக்கு முதியவர் ஒருவர் பலி - மேலும் ஓர் மரணம் கொரோனா
    சென்னை ஆருத்ரா விவகாரம் - 30 பேர் கொண்ட தனிப்படை அமைப்பு சென்னை
    சென்னை நங்கநல்லூரில் 5 அர்ச்சகர்கள் கோயில் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு சென்னை
    இந்தியாவின் 21 மாநில மக்களின் வாழ்வாதாரமாக திகழும் திருப்பூர் திருப்பூர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025