NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கச்சா எண்ணெய் அகற்றும் பணியினை டிசம்பர் 17க்குள் முடிக்க வேண்டும் - பசுமை தீர்ப்பாயம் உத்தரவு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    கச்சா எண்ணெய் அகற்றும் பணியினை டிசம்பர் 17க்குள் முடிக்க வேண்டும் - பசுமை தீர்ப்பாயம் உத்தரவு 
    கச்சா எண்ணெய் அகற்றும் பணியினை டிசம்பர் 17க்குள் முடிக்க வேண்டும் - பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

    கச்சா எண்ணெய் அகற்றும் பணியினை டிசம்பர் 17க்குள் முடிக்க வேண்டும் - பசுமை தீர்ப்பாயம் உத்தரவு 

    எழுதியவர் Nivetha P
    Dec 14, 2023
    07:30 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னை மாநகரை அண்மையில் தாக்கிய மிக்ஜாம் புயலின் பொழுது எண்ணூர்-கொசஸ்தலையாற்றில் சிபிசிஎல் ஆலையிலிருந்து கச்சா எண்ணெய் வெளியேறி பரவியது.

    இப்பரவலால் சுற்றுசூழல் மற்றும் மீன்கள் இனப்பெருக்கத்திற்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்று குற்றச்சாட்டுகள் எழுந்தது.

    இந்திய கடற்படை கச்சா எண்ணெய் பரவிய கடற்பகுதியினை ஹெலிகாப்டர் மூலம் ஆய்வுச்செய்தது.

    அதில் கொசஸ்தலையாற்றின் முகத்துவாரத்திலிருந்து காசிமேடு துறைமுகம் வரையில் சுமார் 20 சதுர கி.மீ.,பரப்பளவிற்கு கச்சா எண்ணெய் பரவியுள்ளது என்பது தெரியவந்துள்ளது.

    இந்நிலையில், இவ்விவகாரத்தில் தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணையினை துவங்கியது.

    அதன்படி இன்று(டிச.,14)நடைபெற்ற விசாரணையில் மீனவர்கள் தரப்பு, தமிழக அரசு, மாசு கட்டுப்பாட்டு வாரியம், சிபிசிஎல் நிறுவனம் உள்ளிட்ட 4 தரப்பினரும் நேரில் ஆஜராகி தங்கள் வாதங்களை முன்வைத்துள்ளனர்.

    வாதம் 

    சிபிசிஎல் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது 

    அப்போது மீனவர்கள் தரப்பில், 'மீனவர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் ஏதும் கொடுக்கப்படாமல் எண்ணெய் அகற்றும் பணி மேற்கொள்ளப்படுகிறது'என்று கூறப்பட்டது.

    இதனிடையே சிபிசிஎல் தரப்பில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டதில், 'ஒரு டேங்கருக்கு 220-லிட்டர் வீதம் 33 டேங்கர்களில் 7600-லிட்டர் எண்ணெய் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது' என்று கூறப்பட்டிருந்தது.

    மேலும்,'தொடர்ந்து இப்பணி நடக்கும் நிலையில், 4 ஜேசிபி-க்கள், 2 ஆயில் ஸ்கிம்மர்கள், 75 அதிநவீன படகுகள் உள்ளிட்டவை இப்பணிக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது' என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இது அனைத்தையும் பதிவு செய்துக்கொண்ட நீதிபதிகள், 'மீனவர்களே எண்ணெய் அகற்றும் பணியில் ஈடுபடும் பொழுது, மணலி தொழிற்சாலை சங்கங்களும் இப்பணியில் ஈடுபடவேண்டும்' என்றும்,

    'எண்ணெய் அகற்றும் பணியினை வரும் 17ம்.,தேதிக்குள் செய்து முடிக்கவேண்டும்' என்றும் உத்தரவிட்டனர்.

    இவ்வழக்கு வரும் 18ம்.,தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    கடற்படை

    சமீபத்திய

    சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு இனி சிக்கல் இல்லை; டிராகன் காப்ஸ்யூல் மிரட்டலை வாபஸ் பெற்றார் எலான் மஸ்க் எலான் மஸ்க்
    செமிகண்டக்டர் துறையில் தற்சார்பை அடைவதற்கான முக்கிய படி; டாடா எலக்ட்ரானிக்ஸ்-பிஇஎல் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் டாடா
    பெங்களூர் கூட்ட நெரிசலுக்கு பொறுப்பு ஏற்று கர்நாடக கிரிக்கெட் சங்க செயலாளர் மற்றும் பொருளாளர் ராஜினாமா கிரிக்கெட்
    ₹300 கோடிக்கும் அதிகமான சொத்துக்கள்; மாநிலங்களவை தேர்தலுக்கான பிரமாண பத்திரத்தில் கமல்ஹாசன் தகவல் கமல்ஹாசன்

    சென்னை

    'வெள்ளம் வந்தாலும் மும்பை நீதிமன்றங்கள் செயல்படும்': சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் சர்ச்சை கருத்து சென்னை உயர் நீதிமன்றம்
    புயலால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு உதவ கோரிய டேவிட் வார்னர்  டேவிட் வார்னர்
    சென்னையில் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்த பின், முதல்வரை சந்தித்தார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தமிழ்நாடு
    சென்னை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட ரஜினிகாந்த் வீடு; வைரலாகும் வீடியோ  ரஜினிகாந்த்

    கடற்படை

    வரலாறு படைத்த INS விக்ராந்த்: முதன்முதலில் விகாரந்த் கப்பலில் தரையிறங்கிய ஜெட் இந்தியா
    மீன்பிடி பைபர் படகில் கடத்திவரப்பட்டு கடலில் வீசப்பட்ட மர்ம பொருள்-விசாரணையில் தங்கம் என தகவல் இலங்கை
    ராமேஸ்வர கடலில் வீசப்பட்ட கடத்தல் தங்கக்கட்டிகள்-12 கிலோ தங்கம் பறிமுதல் ராமேஸ்வரம்
    தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படை - மத்தியமைச்சருக்கு கடிதம் எழுதிய முதல்வர் இலங்கை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025