NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மத நல்லிணக்கத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு: இந்து கோவிலுக்கு சீர்வரிசை கொடுத்த இஸ்லாமியர்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    மத நல்லிணக்கத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு: இந்து கோவிலுக்கு சீர்வரிசை கொடுத்த இஸ்லாமியர்கள்
    இந்து கோவிலுக்கு சீர்வரிசை கொடுத்த இஸ்லாமியர்கள் - வினோத நிகழ்வு

    மத நல்லிணக்கத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு: இந்து கோவிலுக்கு சீர்வரிசை கொடுத்த இஸ்லாமியர்கள்

    எழுதியவர் Nivetha P
    Aug 21, 2023
    05:30 pm

    செய்தி முன்னோட்டம்

    திருச்சி மாவட்டம் மணப்பாறையினை அடுத்து வளநாடு என்னும் பகுதியில் ஓர் பெருமாள் கோவில் அமைந்துள்ளது.

    இக்கோயிலில் கடந்த சில நாட்களாக புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

    அதன்படி அதன் பணிகள் முடிவடைந்த நிலையில் நேற்று(ஆகஸ்ட்.,20) இந்த கோவிலில் கும்பாபிஷேக நிகழ்ச்சி அரங்கேறியுள்ளது.

    மிக விமர்சையாக நடந்த இந்த கும்பாபிஷேக நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

    இதனிடையே, இக்கோவிலில் உள்ள வெங்கடேச பெருமாளுக்கு திருக்கல்யாண வைபவமும் நடத்தப்பட்டுள்ளது.

    அதன்படி இந்த திருக்கல்யாண வைபவத்திற்கு வளநாடு ஜமாத் நிர்வாகம் சார்பில் இஸ்லாம் மதத்தினை சேர்ந்தோர் சீர்வரிசை கொண்டுவரப்பட்டது என்று செய்திகள் தெரிவிக்கிறது.

    திருக்கல்யாணம் 

    இஸ்லாமியர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்ட லட்டு

    இஸ்லாமியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு வளநாடு பள்ளிவாசலில் இருந்து தேங்காய், பூ, பழங்கள், வாழைப்பழம், நெய். அரிசி, பருப்பு, பீரோ உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை தட்டில் வைத்து ஏந்திக்கொண்டு கொண்டு ஊர்வலமாக கொண்டு வந்தனர் என்று கூறப்படுகிறது.

    இந்த சீர்வரிசை நிகழ்வு சிறப்பாக நடைபெற்று முடிந்தநிலையில், சீர்வரிசை பொருட்களை பெற்றுக்கொண்ட கோவில் நிர்வாகம், இஸ்லாமியர்களுக்கு பதில் மரியாதை செய்துள்ளனர்.

    சீர்வரிசை பெறப்பட்ட பின்னர் நடந்த திருக்கல்யாணம் நிறைவுக்கு பின்னர், இஸ்லாமியர்களுக்கு லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டுள்ளது.

    மதங்களை கடந்த மனித மாண்பினை வெளிக்கொணரும் வகையில் இந்த வினோத நிகழ்வு பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    திருச்சி
    இஸ்லாம்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    தமிழ்நாடு

    தமிழகத்தில் வேகமாக பரவி வரும் வைரஸ் காய்ச்சல்  வைரஸ்
    சென்னையில் செயல்படும் ஹோட்டல் குழம்பில் காகிதங்கள்-6 பேருக்கு வாந்தி, மயக்கம் சென்னை
    தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு  புதுச்சேரி
    முதல் பெண் யானை பராமரிப்பாளராக பெள்ளி: அரசு வேலை வழங்கிய தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின்

    திருச்சி

    ரூ.951 கோடி செலவில் திருச்சி புதிய விமான நிலையம்: பலவிதமான சிறப்பு அம்சங்கள் விமானம்
    சென்னை-திருச்சி விமானத்தில் அவசரகால கதவை திறந்த பயணி விமானம்
    திருச்சியில் ரவுடிகள் மீது துப்பாக்கி சூடு நடத்திய போலீசார் - பரபரப்பு சம்பவம் காவல்துறை
    திருச்சி ஸ்ரீ ரங்கம் கோயில் யானைக்கு 44வது பிறந்தநாள் விமர்சையாக கொண்டாட்டம் கோவில்கள்

    இஸ்லாம்

    நாடு முழுவதும் பக்ரீத் திருநாளை முன்னிட்டு இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை; தலைவர்கள் வாழ்த்து   பண்டிகை
    'இந்திய மதங்களில் தனித்த பெருமையை கொண்டது இஸ்லாம்' : தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025