NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஏப்ரல் 2இல் வக்ஃப் வாரிய மசோதாவை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஏப்ரல் 2இல் வக்ஃப் வாரிய மசோதாவை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் 
    வக்ஃப் வாரிய மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு

    ஏப்ரல் 2இல் வக்ஃப் வாரிய மசோதாவை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் 

    எழுதியவர் Sekar Chinnappan
    Mar 31, 2025
    08:20 pm

    செய்தி முன்னோட்டம்

    மத்திய அரசு இந்த வாரம் புதன்கிழமை (ஏப்ரல் 2) மக்களவையில் வக்ஃப் வாரிய திருத்த மசோதாவை தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    முன்னதாக, தற்போதுள்ள வக்ஃப் சட்டத்தை திருத்தும் நோக்கில் இந்த மசோதா ஏப்ரல் 4 ஆம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவதற்குள் அறிமுகப்படுத்தப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதிப்படுத்தி இருந்தார்.

    முன்மொழியப்பட்ட திருத்தங்கள் வக்ஃப் சட்டத்தை அரசியலமைப்பு கொள்கைகளுடன் இணைக்க முயல்கின்றன என்றும், காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் 2013இல் அறிமுகப்படுத்தப்பட்ட விதிகள் குறித்த கவலைகளை நிவர்த்தி செய்கின்றன என்றும் உறுதியளித்தார்.

    இந்த மசோதா கடந்தகால விஷயங்களுக்கு பயன்படுத்தப்படாது என்றும், குறைகள் உள்ள நபர்கள் சட்ட உதவியை நாடலாம் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

    எதிர்ப்பு

    சட்டத் திருத்தத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

    மத்திய அரசு மசோதாவை நிறைவேற்றும் உறுதியுடன் உள்ள நிலையில், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பும் தீவிரமடைந்துள்ளது.

    அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் ரம்ஜானின் இறுதி வெள்ளிக்கிழமை தொழுகையின் போது அடையாளப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது.

    வழிபாட்டாளர்கள் கருப்புப் பட்டைகளை அணியுமாறு வலியுறுத்தியது. ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஒவைசி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு, மசோதா மூலம் மத நிறுவனங்களை பாஜக குறிவைப்பதாக குற்றம் சாட்டினர்.

    எனினும், அஜ்மீர் தர்கா தலைவர் உள்ளிட்ட சில இஸ்லாமிய தலைவர்கள் சட்டத் திருத்தத்திற்கு ஆதரவாகவும் பேசி வருகின்றனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    வக்ஃப் வாரியம்
    நாடாளுமன்றம்
    மக்களவை
    மத்திய அரசு

    சமீபத்திய

    உங்களைச் சுற்றியுள்ள ஒவ்வொரு குரலையும் கண்காணித்து மொழிபெயர்க்கும் புதிய AI ஹெட்ஃபோன்கள்  தொழில்நுட்பம்
    2022ஆம் ஆண்டுக்குப் பிறகு உக்ரைன் மீது மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலை நடத்திய ரஷ்யா உக்ரைன்
    வால்மார்ட் தனது பொருட்களின் விலைகளை உயர்த்தாமல், வரிகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று டிரம்ப் வலியுறுத்தல்  வால்மார்ட்
    'எம்.எஸ். தோனியின் ரசிகர்கள் உண்மையானவர்கள், மற்றவர்கள் பணத்தால் வாங்கப்பட்டவர்கள்': சர்ச்சையை கிளப்பிய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள்  எம்எஸ் தோனி

    வக்ஃப் வாரியம்

    வக்ஃப் சட்டத் திருத்தவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார் அமைச்சர் கிரண் ரிஜிஜூ மக்களவை
    வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு 14 திருத்தங்களுடன் நாடாளுமன்ற கூட்டுக்குழு ஒப்புதல் மத்திய அரசு
    வக்ஃப் வாரிய சட்ட (திருத்தம்) மசோதா மீதான ஜேபிசி அறிக்கை மக்களவையில் நாளை தாக்கல் நாடாளுமன்றம்
    எதிர்க்கட்சிகளின் அமளிகளுக்கு மத்தியில் ராஜ்யசபாவில் வக்ஃப் மசோதா அறிக்கையை தாக்கல் செய்தது நாடாளுமன்ற கூட்டுக் குழு மாநிலங்களவை

    நாடாளுமன்றம்

    நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25ஆம் தேதி தொடங்குகிறது இந்தியா
    குளிர்கால கூட்டத்திற்கான அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்தியது மத்திய அரசு; முக்கிய மசோதாக்களின் பட்டியல் மத்திய அரசு
    குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளே அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சிகள்: நாடாளுமன்றம் நவம்பர் 27ஆம் தேதி வரை ஒத்திவைப்பு இந்தியா
    சோசலிசம் மற்றும் மதச்சார்பின்மையை அரசியலமைப்பில் இருந்து நீக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம் உச்ச நீதிமன்றம்

    மக்களவை

    வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக வெற்றி வாரணாசி
    ஸ்மிருதி இரானி, அண்ணாமலை, உமர் அப்துல்லா: 2024 மக்களவைத் தேர்தலில் பெரும் தோல்வியடைந்த நட்சத்திர வேட்பாளர்கள் அண்ணாமலை
    பதவியை ராஜினாமா செய்தார் பிரதமர் மோடி: ஜூன் 8ஆம் தேதி மீண்டும் பதவியேற்க உள்ளதாக தகவல்  பாஜக
    மோடி 3.0 அமைச்சரவை: மக்களவை சபாநாயகர் யாராக இருக்கக்கூடும்? சபாநாயகர்

    மத்திய அரசு

    பெண்களுக்கு புற்றுநோய் தடுப்பூசி 5-6 மாதங்களில் கிடைக்கும்: மத்திய அமைச்சர்  புற்றுநோய்
    கூகிள் குரோமுக்கு அதிக ஆபத்து இருப்பதாக மத்திய அரசு எச்சரிக்கை; என்ன செய்யவேண்டும்?  கூகிள் தேடல்
    இந்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரனின் பதவிக்காலம் நீட்டிப்பு பொருளாதாரம்
    இந்தியாவின் தேர்தலில் அமெரிக்காவின் தலையீடு குறித்த டிரம்பின் கூற்றுகள் குறித்து மத்திய அரசு கவலை டொனால்ட் டிரம்ப்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025