NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மாவட்ட மருத்துவமனைகளை மேம்படுத்துவதற்கான அரசின் புதிய திட்டம்! 
    மாவட்ட மருத்துவமனைகளை மேம்படுத்துவதற்கான அரசின் புதிய திட்டம்! 
    இந்தியா

    மாவட்ட மருத்துவமனைகளை மேம்படுத்துவதற்கான அரசின் புதிய திட்டம்! 

    எழுதியவர் Arul Jothe
    May 19, 2023 | 10:39 am 1 நிமிட வாசிப்பு
    மாவட்ட மருத்துவமனைகளை மேம்படுத்துவதற்கான அரசின் புதிய திட்டம்! 
    மாவட்ட மருத்துவமனைகளை மேம்படுத்துவதற்கான அரசின் புதிய திட்டம்

    புதிய மருத்துவக் கல்லூரிகளை திறப்பதற்கு சிறிய மாவட்ட மருத்துவமனைகளைப் பயன்படுத்தும் திட்டத்தை மத்திய அரசு பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. இப்போது தேசிய மருத்துவ ஆணையம் (NMC) இந்த செயல்முறையை எளிதாக்கும் திட்டத்தில் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், மருத்துவக் கல்லூரிகளைத் திறப்பதற்கு மாவட்ட மருத்துவமனைகளைப் பயன்படுத்துவது உள்ளிட்ட பரிந்துரைகளை அது தயாரித்து வருகிறது. "இதுவரை, மாவட்ட மருத்துவமனைகளை, மருத்துவக் கல்லூரிகளாக மாற்றி அமைக்க அரசாங்கத்தால் குறிப்பிடப்பட்ட சில வரம்புகளை பூர்த்தி செய்ய வேண்டும். இப்போது, மருத்துவ மாணவர்களுக்கு கல்வியை விரிவுபடுத்தும் நோக்கில், சிறிய மாவட்ட மருத்துவமனைகளை, கல்லூரிகளாக பயன்படுத்த முடியுமா என்ற முயற்சிகளும், விவாதங்களும் நடந்து வருகின்றன. அதற்காக பல பரிந்துரைகளும் செய்யப்பட்டுள்ளன,"என்று ஒரு மூத்த அரசாங்க அதிகாரி தெரிவித்துள்ளார்.

    மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை

    இந்தியா சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம், பின்தங்கிய மாவட்டங்களில், அதாவது அரசு அல்லது தனியார் மருத்துவக் கல்லூரி இல்லாத மாவட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து, தற்போதுள்ள செயல்பாட்டில் உள்ள மாவட்ட அல்லது பரிந்துரை மருத்துவமனைகளுடன் இணைக்கப்பட்ட புதிய மருத்துவக் கல்லூரிகளை நிறுவுவதற்கான, மத்திய நிதியுதவி திட்டத்தை (CSS) செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், மத்திய அரசு, ஏற்கனவே மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கையை அதிகரித்து, மருத்துவ படிப்பிற்கான இடங்களை அதிகரித்துள்ளது. 2014க்கு முன், 387 ஆக இருந்த மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை, தற்போது 69% அதிகரித்து, 2023ல் 655 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 2014க்கு முன்னர், 51,348 ஆக இருந்த எம்பிபிஎஸ் இடங்கள், தற்போது 1,00,163 ஆக அதிகரித்துள்ளது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    அரசு மருத்துவமனை
    அரசு திட்டங்கள்
    இந்தியா

    அரசு மருத்துவமனை

    சென்னை அருகே அமைச்சர் கார் மோதி மனைவி கண்முன்னே கணவர் பலி சென்னை
    சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 2 பேர் பலி  காவல்துறை
    கள்ளச்சாராய விவகாரம் - முக்கிய குற்றவாளி கைது  காவல்துறை
    உலக செவிலியர் தினம் - மெழுகுவர்த்தி ஏந்தி செவிலியர்கள் உறுதிமொழி  பிறந்தநாள்

    அரசு திட்டங்கள்

     சென்னையில் போக்குவரத்துக்கு ஒரே பயண டிக்கெட்! சட்டப்பேரவையில் அறிவிப்பு சென்னை
    தொழில் முனைவோர் ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டம்: 40 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! இந்தியா
    8.2% வட்டி தரும் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் - நன்மைகள் என்னென்ன? சேமிப்பு திட்டங்கள்
    ரூ. 40,000 வருமானம் தரும் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் - உயரும் வட்டி! சேமிப்பு திட்டங்கள்

    இந்தியா

    ஏஎப்சி மகளிர் ஒலிம்பிக் தகுதிச்சுற்றில் குரூப் சி'யில் இடம் பெற்றுள்ள இந்திய கால்பந்து அணி! இந்திய அணி
    இந்தியாவில் சற்று குறைந்த கொரோனா பாதிப்பு; 20 பேர் உயிரிழந்தனர் கொரோனா
    விளம்பர விதிகளை மீறியதாக புகார்! டாப் 5 பட்டியலில் எம்எஸ் தோனி, விராட் கோலி! எம்எஸ் தோனி
    சென்னையில் ஜூன் 2ம் தேதி சர்வதேச கண்காட்சி சென்னை
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023