NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / புவிசார் குறையீடு பெற்ற கொடைக்கானல் மலைப்பூண்டின் அறுவடை துவக்கம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    புவிசார் குறையீடு பெற்ற கொடைக்கானல் மலைப்பூண்டின் அறுவடை துவக்கம் 
    புவிசார் குறையீடு பெற்ற கொடைக்கானல் மலைப்பூண்டின் அறுவடை துவக்கம்

    புவிசார் குறையீடு பெற்ற கொடைக்கானல் மலைப்பூண்டின் அறுவடை துவக்கம் 

    எழுதியவர் Nivetha P
    Apr 20, 2023
    03:40 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு, திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல் மேல்மலை கிராமங்களான மன்னவன்னூர், பூம்பாறை, கூக்கால், பழம்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மலைப்பூண்டு 900 எக்டேரில் சாகுபடி செய்யப்படுகிறது.

    இந்த மலைப்பூண்டு பாரம்பரிய வகை மற்றும் அதிக மருத்துவ தன்மை கொண்டது.

    இத்தகைய சிறப்புமிக்க கொடைக்கானல் மலைப்பூண்டுக்கு புவிசார் குறியீடும் அண்மையில் வழங்கப்பட்டது.

    இந்நிலையில் பயிரிடப்பட்ட 120 நாட்களில் மலைப்பூண்டு அறுவடைக்கு வரவுள்ளது. இங்கு விளையும் பூண்டு சாம்பல் நிறத்தில் காணப்படுகிறது.

    இதன் காரத்தன்மையும் அதிகமுள்ளது. புகைமூட்டம் செய்து இப்பூண்டினை பதப்படுத்தி வைத்தால் ஒரு வருடம் வரை கெடாமல் இருக்கும் என்று கூறப்படுகிறது.

    இதனையடுத்து, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நடவு செய்யப்பட்ட மலைப்பூண்டுகள் தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது.

    பூண்டு

    அறுவடை செய்த பச்சை பூண்டு ஒரு கிலோ ரூ.70க்கு விற்பனை 

    இதற்கான பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்கள்.

    சீதோஷண நிலை மாற்றம், மழையால் விளைச்சல் 70 சதவீதமாக குறைந்துள்ளது.

    இந்நிலையில் தற்போது அறுவடை செய்த பச்சை பூண்டு ஒரு கிலோ ரூ.70க்கும், புகை மூட்டம் செய்யப்பட்ட பூண்டு ஒரு கிலோ ரூ.280 முதல் ரூ.350 வரை விற்பனையாகிறது.

    விளைச்சல் குறைந்தாலும், போதிய விலை கிடைப்பதால் விவசாயிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

    இது குறித்து மன்னவன்னூர் விவசாயிகள் கூறுகையில், இந்தாண்டு மலைப்பூண்டு விளைச்சல் குறைவு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வரத்து அதிகரிப்பால் எதிர்பார்த்த விலை கிடைக்கவில்லை.

    புகை மூட்டம் செய்து பதப்படுத்திய பூண்டு ஒரு கிலோ ரூ.450 வரை விற்றால் மட்டுமே விவசாயிகளுக்கு கட்டுப்படியாகும் என்று கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    தமிழ்நாடு

    லலித் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு  இந்தியா
    திருமூர்த்தி மலை பகுதிகளில் யானை கூட்டம் - விவசாயிகள் கவலை  இந்தியா
    தமிழ்நாடு முழுவதும் 45 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணி - போலீஸ் அனுமதி  தமிழக அரசு
    வடை, பாயசம்...இந்த தமிழ் புத்தாண்டிற்கு என்ன சமைக்கலாம்? மதுரை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025