NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கும்பகோணம் ரயில் நிலையத்தில் ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள 10 கிலோ கஞ்சா பறிமுதல் 
    கும்பகோணம் ரயில் நிலையத்தில் ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள 10 கிலோ கஞ்சா பறிமுதல் 
    1/2
    இந்தியா 0 நிமிட வாசிப்பு

    கும்பகோணம் ரயில் நிலையத்தில் ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள 10 கிலோ கஞ்சா பறிமுதல் 

    எழுதியவர் Nivetha P
    May 09, 2023
    06:34 pm
    கும்பகோணம் ரயில் நிலையத்தில் ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள 10 கிலோ கஞ்சா பறிமுதல் 
    கும்பகோணம் ரயில் நிலையத்தில் ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள 10 கிலோ கஞ்சா பறிமுதல்

    தமிழ்நாடு மாநிலம் கும்பகோணம் மாவட்டத்திற்கு பனாரஸிலிருந்து வந்த ரயிலில் ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள 10 கிலோ எடைகொண்ட கஞ்சா பொட்டலங்களை ரயில்வே காவல்துறை பறிமுதல் செய்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் 4.0 உத்தரவின் படி கஞ்சா மற்றும் போதை பொருள் தடுப்பு நடவடிக்கைகளை தமிழ்நாடு காவல்துறை மிக தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அதன் படி கடந்த 7ம் தேதி பனாரஸிலிருந்து புறப்பட்டு ராமேஸ்வரம் நோக்கி வந்த ரயிலானது கும்பகோணம் ரயில் நிலையத்திற்கு வந்து நின்றது. அப்போது அந்த ரயிலில் முன்பதிவு இல்லாத பெட்டியில் கழிவறை அருகில் ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள 10 கிலோ எடைகொண்ட 3 பெரிய அளவிலான கஞ்சா பொட்டலங்கள் இருந்துள்ளது.

    2/2

    போதை பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசாரிடம் ஒப்படைப்பு 

    கும்பகோணம் ரயில் நிலையத்தில் வந்து நின்ற ராமேஸ்வரம் செல்லும் ரயிலில் அந்த கஞ்சா பொட்டலங்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில் அங்கு நின்று கொண்டிருந்தவர்களை கும்பகோணம் ரயில்வே இருப்பு பாதை தனிப்பிரிவு காவல்துறை விசாரணை செய்துள்ளது. அப்போது அவர்கள் அனைவரும் தெரியாது என்று கூறியுள்ளார்கள். இதனையடுத்து அந்த 3 பொட்டலங்களை காவல்துறையினர் கும்பகோணம் ரயில்வே இருப்பு பாதை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர் ரயில் நிலையத்தில் கண்டெடுக்கப்பட்ட அந்த கஞ்சா பொட்டலங்களை ரயில்வே காவல்துறையினர் நாகப்பட்டினம் போதை பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்துள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    தமிழ்நாடு
    காவல்துறை
    காவல்துறை

    தமிழ்நாடு

    உதவி இயக்குனர் மீது கிரிமினல் வழக்கு; கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்ட பா.ரஞ்சித் பா ரஞ்சித்
    மோக்கா புயல்: தமிழகத்தில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு இந்தியா
    உருவாகும் புயல் - 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு  வானிலை அறிக்கை
    மே 23ம் தேதி வெளிநாடு பயணம் மேற்கொள்ளும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  ஜப்பான்

    காவல்துறை

    சென்னையில் போதை பொருள் விற்பனை செய்த 2 பேர் கைது  சென்னை
    பா.ரஞ்சித்தின் உதவி இயக்குனர் விடுதலை சிகப்பி மீது பாய்ந்த கிரிமினல் வழக்குகள் பா ரஞ்சித்
    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பாதுகாப்பினை மீறி பக்தர் எடுத்த வீடியோ பதிவு  திருப்பதி
    திகார் சிறையில் நடந்த கொலை: தமிழக போலீசார் 7 பேர் சஸ்பெண்ட் இந்தியா

    காவல்துறை

    குஜராத்தில் 5 ஆண்டுகளில் 41 ஆயிரம் பெண்கள் மாயம் - அதிர்ச்சி தகவல்  குஜராத்
    கள்ளக்காதல் குறித்து கேள்விக்கேட்ட மனைவியை 9 துண்டுகளாக வெட்டிக்கொன்ற கணவர் - ஜார்கண்ட்டில் பயங்கரம்  இந்தியா
    தூத்துக்குடி வி.ஏ.ஓ. கொலை வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது  தூத்துக்குடி
    திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை - முக்கிய குற்றவாளி துப்பாக்கி முனையில் கைது  திருவண்ணாமலை
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023