NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கும்பகோணம் ரயில் நிலையத்தில் ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள 10 கிலோ கஞ்சா பறிமுதல் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    கும்பகோணம் ரயில் நிலையத்தில் ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள 10 கிலோ கஞ்சா பறிமுதல் 
    கும்பகோணம் ரயில் நிலையத்தில் ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள 10 கிலோ கஞ்சா பறிமுதல்

    கும்பகோணம் ரயில் நிலையத்தில் ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள 10 கிலோ கஞ்சா பறிமுதல் 

    எழுதியவர் Nivetha P
    May 09, 2023
    06:34 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு மாநிலம் கும்பகோணம் மாவட்டத்திற்கு பனாரஸிலிருந்து வந்த ரயிலில் ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள 10 கிலோ எடைகொண்ட கஞ்சா பொட்டலங்களை ரயில்வே காவல்துறை பறிமுதல் செய்துள்ளது.

    தமிழ்நாடு முழுவதும் 4.0 உத்தரவின் படி கஞ்சா மற்றும் போதை பொருள் தடுப்பு நடவடிக்கைகளை தமிழ்நாடு காவல்துறை மிக தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

    அதன் படி கடந்த 7ம் தேதி பனாரஸிலிருந்து புறப்பட்டு ராமேஸ்வரம் நோக்கி வந்த ரயிலானது கும்பகோணம் ரயில் நிலையத்திற்கு வந்து நின்றது.

    அப்போது அந்த ரயிலில் முன்பதிவு இல்லாத பெட்டியில் கழிவறை அருகில் ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள 10 கிலோ எடைகொண்ட 3 பெரிய அளவிலான கஞ்சா பொட்டலங்கள் இருந்துள்ளது.

    கஞ்சா

    போதை பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசாரிடம் ஒப்படைப்பு 

    கும்பகோணம் ரயில் நிலையத்தில் வந்து நின்ற ராமேஸ்வரம் செல்லும் ரயிலில் அந்த கஞ்சா பொட்டலங்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில் அங்கு நின்று கொண்டிருந்தவர்களை கும்பகோணம் ரயில்வே இருப்பு பாதை தனிப்பிரிவு காவல்துறை விசாரணை செய்துள்ளது.

    அப்போது அவர்கள் அனைவரும் தெரியாது என்று கூறியுள்ளார்கள்.

    இதனையடுத்து அந்த 3 பொட்டலங்களை காவல்துறையினர் கும்பகோணம் ரயில்வே இருப்பு பாதை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

    பின்னர் ரயில் நிலையத்தில் கண்டெடுக்கப்பட்ட அந்த கஞ்சா பொட்டலங்களை ரயில்வே காவல்துறையினர் நாகப்பட்டினம் போதை பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்துள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    காவல்துறை
    காவல்துறை

    சமீபத்திய

    அனைத்து உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கும் ஒரே அளவிலான ஓய்வூதியம்; உச்ச நீதிமன்றம் உத்தரவு ஓய்வூதியம்
    இனி மெட்ரோ டிக்கெட்டை உபெரிலேயே எடுக்கலாம்; வந்தாச்சு புதிய வசதி மெட்ரோ
    யூடியூபர், மாணவர், பாதுகாவலர் உட்பட 11 'பாகிஸ்தான் உளவாளிகள்' இதுவரை கைது பாகிஸ்தான்
    உளவு பார்க்க யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவை சோறு போட்டு வளர்த்த பாகிஸ்தான் ஹரியானா

    தமிழ்நாடு

    நாளை(மே 4ம் தேதி) துவங்குகிறது அக்னி நட்சத்திரம்  இந்தியா
    மகளிர் இலவச பேருந்து காரணமாக பேருந்துகள் நிறுத்தப்பட்டது! தென்காசி ஆட்சியர் பரபரப்பு பேச்சு!  தென்காசி
    தமிழகத்தில் தொடர் மழை இருக்கும்: வானிலை ஆய்வு மையம் புதுச்சேரி
    எந்த அரசியல் கட்சியுடனும் தொடர்பில்லை - G-Square நிறுவனம்  வருமான வரி அறிவிப்பு

    காவல்துறை

    சென்னை பாரிமுனையில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து - மீட்புப்பணியில் தீயணைப்புத்துறை சென்னை
    திருப்பூரில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.81 லட்சம் மோசடி - வங்கி மேலாளர் உள்பட 3 பேர் கைது  திருப்பூர்
    திருநெல்வேலி பற்களை பிடுங்கிய விவகாரம் - பல்வீர் சிங் மீது பதிவான வழக்கு சிபிசிஐடி'க்கு மாற்றம் திருநெல்வேலி
    சென்னை பாரிமுனையில் 4 மாடி கட்டிட விவகாரம் - விளக்கமளிக்க மாநகராட்சி நோட்டீஸ்  சென்னை

    காவல்துறை

    இந்தியாவிலேயே சென்னை மாநகரம் தான் பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் - மு.க.ஸ்டாலின்  இந்தியா
    காதலி தூக்குபோட்டு உயிரிழந்ததை வீடியோ காலில் பார்த்து ரசித்த காதலன்  தமிழ்நாடு
    நாமக்கல் மாவட்டம் விஷ ஊசிப்போட்டு 300 பேர் கொலை?-அரசு மருத்துவமனையில் விசாரணை  அரசு மருத்துவமனை
    கோவை கார் குண்டுவெடிப்பு - குற்றப்பத்திரிகையினை தாக்கல் செய்த என்.ஐ.ஏ. கோவை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025