Page Loader
தூத்துக்குடி வி.ஏ.ஓ. கொலை வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது 
தூத்துக்குடி வி.ஏ.ஓ. கொலை வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

தூத்துக்குடி வி.ஏ.ஓ. கொலை வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது 

எழுதியவர் Nivetha P
May 05, 2023
03:21 pm

செய்தி முன்னோட்டம்

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகேயுள்ள முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் லூர்து பிரான்சிஸ். இவர் வழக்கம் போல் நேற்று(ஏப்ரல்.,25) அலுவலகத்தில் பணியாற்றி கொண்டிருக்கையில், 2 மர்ம நபர்கள் அங்கு வந்துள்ளனர். திடீரென அவர்கள் லூர்து பிரான்சிஸை அரிவாளால் வெட்டியுள்ளனர். அவர் தப்பிக்க முயன்ற நிலையில் அவரை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டி விட்டு கண் இமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பித்து சென்றனர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த மக்கள் முறப்பநாடு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் லூர்து பிரான்சிஸை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

கைது 

பாளை மத்திய சிறையில் அடைப்பு 

இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்னர், முறப்பநாடு தாமிரபரணி ஆற்றுப்பகுதியில் லூர்து ரோந்து சென்றுள்ளார். அப்போது அங்குசிலர் மணல் அள்ளி இருசக்கர வாகனத்தில் ஏற்றியதை கண்டித்ததுடன், அவர்கள்மீது போலீசில் புகாரும் அளித்ததாக கூறப்படுகிறது. இதன் முன்விரோதமாகவே அவர் கொலை செய்யப்பட்டுள்ளார். லூர்து பிரான்சிஸை கொலைச்செய்த ராமசுப்ரமணியம்(41)மற்றும் மாரிமுத்துவை(31)குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைதுச்செய்ய முறப்பநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜமால், மாவட்ட போலீஸ் சூப்பரண்ட் பாலாஜி சரவணனுக்கு கோரிக்கை விடுத்தார். இதனையடுத்து பாலாஜிசரவணன் இதுகுறித்து மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். இந்நிலையில் தற்போது இதனை ஏற்று ஆட்சியர் செந்தில்ராஜ் அவர்கள் 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைதுச்செய்ய உத்தரவிட்டுள்ளார். அதன்படி அவர்கள் இருவரும் குண்டர் சட்டத்தின்கீழ் கைதுச்செய்யப்பட்டு பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.