NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தூத்துக்குடி வி.ஏ.ஓ. கொலை வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது 
    அடுத்த செய்திக் கட்டுரை
    தூத்துக்குடி வி.ஏ.ஓ. கொலை வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது 
    தூத்துக்குடி வி.ஏ.ஓ. கொலை வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

    தூத்துக்குடி வி.ஏ.ஓ. கொலை வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது 

    எழுதியவர் Nivetha P
    May 05, 2023
    03:21 pm

    செய்தி முன்னோட்டம்

    தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகேயுள்ள முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் லூர்து பிரான்சிஸ்.

    இவர் வழக்கம் போல் நேற்று(ஏப்ரல்.,25) அலுவலகத்தில் பணியாற்றி கொண்டிருக்கையில், 2 மர்ம நபர்கள் அங்கு வந்துள்ளனர்.

    திடீரென அவர்கள் லூர்து பிரான்சிஸை அரிவாளால் வெட்டியுள்ளனர்.

    அவர் தப்பிக்க முயன்ற நிலையில் அவரை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டி விட்டு கண் இமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பித்து சென்றனர்.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த மக்கள் முறப்பநாடு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் லூர்து பிரான்சிஸை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவர் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    கைது 

    பாளை மத்திய சிறையில் அடைப்பு 

    இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்னர், முறப்பநாடு தாமிரபரணி ஆற்றுப்பகுதியில் லூர்து ரோந்து சென்றுள்ளார்.

    அப்போது அங்குசிலர் மணல் அள்ளி இருசக்கர வாகனத்தில் ஏற்றியதை கண்டித்ததுடன், அவர்கள்மீது போலீசில் புகாரும் அளித்ததாக கூறப்படுகிறது.

    இதன் முன்விரோதமாகவே அவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

    லூர்து பிரான்சிஸை கொலைச்செய்த ராமசுப்ரமணியம்(41)மற்றும் மாரிமுத்துவை(31)குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைதுச்செய்ய முறப்பநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜமால், மாவட்ட போலீஸ் சூப்பரண்ட் பாலாஜி சரவணனுக்கு கோரிக்கை விடுத்தார்.

    இதனையடுத்து பாலாஜிசரவணன் இதுகுறித்து மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.

    இந்நிலையில் தற்போது இதனை ஏற்று ஆட்சியர் செந்தில்ராஜ் அவர்கள் 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைதுச்செய்ய உத்தரவிட்டுள்ளார்.

    அதன்படி அவர்கள் இருவரும் குண்டர் சட்டத்தின்கீழ் கைதுச்செய்யப்பட்டு பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தூத்துக்குடி
    காவல்துறை
    காவல்துறை

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    தூத்துக்குடி

    தூத்துக்குடி ஸ்டர்லைட் ஆலை விளக்க கருத்தரங்கு கூட்டம் - எஸ்.பி. பரிசீலிக்க உத்தரவு மதுரை
    தூத்துக்குடியில் ரூ.200க்கு பதிலாக வெறும் ரூ.20 அளித்த ஏடிஎம் - வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி மாவட்ட செய்திகள்
    தமிழகத்தில் உலக சிட்டுக்குருவிகள் தினம் கொண்டாட்டம் மாவட்ட செய்திகள்
    வீடியோ: ஆசிரியரை துரத்தி துரத்தி அடித்த 7 வயது சிறுவனின் பெற்றோர் தமிழ்நாடு

    காவல்துறை

    திருநெல்வேலியில் பற்களை பிடுங்கிய விவகாரம் - சிசிடிவி காட்சிகள் மாயம் திருநெல்வேலி
    திருநெல்வேலி பல் பிடுங்கிய விவகாரம் - புதிய காவல் ஆய்வாளர்கள் நியமனம்  திருநெல்வேலி
    திருநெல்வேலி பல் பிடுங்கிய விவகாரம் - பல்வீர் சிங் மீது மேலும் ஒரு புகார்  திருநெல்வேலி
    சென்னையில் 10ம் வகுப்பு கணித தேர்வுக்கு பயந்து தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட மாணவி  சென்னை

    காவல்துறை

    நாமக்கல் மாவட்டத்தில் மாணவிகளை ஆபாசமாக படம் எடுத்த அரசு பள்ளி ஆசிரியர் கைது  தமிழ்நாடு
    திருநெல்வேலி பற்களை பிடுங்கிய விவகாரம் - முன்னாள் ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது வழக்குப்பதிவு  திருநெல்வேலி
    கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்வதற்காக கடத்திய பேராசிரியை கணவர் கைது  கோவை
    சென்னையில் மது அருந்திய கணவருக்காக போலீசாரிடம் வாக்குவாதம் செய்த இளம்பெண் சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025